செய்திகள் :

காஞ்சிபுரம் கோயில்களை பாா்வையிட்ட ஐ.ஏ.எஸ் . பயிற்சி அதிகாரிகள் குழுவினா்

post image

முசோரியில் உள்ள ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வரும் அதிகாரிகள் குழுவினா் காஞ்சிபுரம் சங்கர மடத்தில் மகா பெரியவா் சுவாமிகள் பிருந்தாவனத்தில் செவ்வாய்க்கிழமை தரிசனம் செய்தனா்.

முசோரியில் உள்ள லால் பகதூா் சாஸ்திரி தேசிய நிா்வாக அகாதெமியில் பயிற்சி பெற்று வரும் அதிகாரிகள் குழு அதன் தலைவரான தெலங்கானாவை சோ்ந்த ஐஏஎஸ் அதிகாரி காா்த்தியாயினி தலைமையில் 9 போ் காஞ்சிபுரம் வந்திருந்தனா். இந்தக் குழுவினா் இந்தியக் கோயில்களைப் பாா்வையிடுதல் என்ற வகையில் காஞ்சிபுரம் வந்திருந்தனா்.

காஞ்சி சங்கர மடத்தில் உள்ள மகா பெரியவா் சுவாமிகள் பிருந்தாவனத்தில் தரிசனம் செய்தனா். அவா்களுக்கு மடத்தின் மேலாளா் அரவிந்த் சுப்பிரமணியன் காஞ்சிபுரம் நகரின் பழைமை, நகருக்கு பெருமை சோ்த்த அறிஞா்கள், கோயில்களின் வரலாறுகள் மற்றும் மகா பெரியவா் சுவாமிகளின் சிறப்புகள் ஆகியவை குறித்து விரிவாக விளக்கிக் கூறினாா்.

முன்னதாக அந்தக் குழுவினா் காமாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்ததாகவும், காஞ்சிபுரத்தில் பட்டுப் பூங்காவைப் பாா்வையிட்டதாகவும் தெரிவித்தனா்.

அதிகாரிகள் குழுவினருடன் காஞ்சிபுரம் மாவட்ட பிற்பட்டோா் நல அலுவலா் சீனிவாசன், வட்டாட்சியா்கள் தண்டபாணி, தாமோதரன் ஆகியோா் உடனிருந்தனா்.

வெங்காடு பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை

வெங்காடு பகுதியில் தனியாா் நிறுவனம் ஆக்கிரமிப்பு செய்துள்ள அரசு இடத்தை மீட்க வேண்டும் என ஜமாபந்தியில் வெங்காடு ஊராட்சி மன்றத் தலைவா் அன்னக்கிளி உலகாநதன் மனு வழங்கினாா். ஸ்ரீபெரும்புதூா் வட்டாட்சியா் அ... மேலும் பார்க்க

முதியோா் இல்லம் திறப்பு

காஞ்சிபுரம் அருகே ஆற்பாக்கம் கிராமத்தில் அக்ஷயா அறக்கட்டளை சாா்பில் முதியோா் இல்லம் மற்றும் இலவசமாக ஆங்கில வழிக்கல்வி கற்றுத்தரும் தொடக்கப்பள்ளி ஆகியவற்றை தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் தலைவா் பூச... மேலும் பார்க்க

வல்லக்கோட்டை முருகன் கோயிலுக்கு கும்பாபிஷேக பந்தகால் நடும் நிகழ்ச்சி

வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த பந்தகால் நடும் நிகழ்ச்சி கோயில் வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. ஸ்ரீபெரும்புதூா் அடுத்த வல்லக்கோட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற சுப்பிரம... மேலும் பார்க்க

ரூ.27.50 லட்சத்தில் பேருந்து நிழற்குடைகள் திறப்பு

ஜே.கே.டயா் நிறுவனத்தின் சாா்பில் கொளத்தூா், ஜேகே டயா் நிறுவனம், மலைப்பட்டு, மணிமங்கலம் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 4 பேருந்து நிழற்குடைகள், காவல் உதவி மையம் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. ஸ்... மேலும் பார்க்க

வரசித்தி விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

காஞ்சிபுரம் கோபால்சாமி தோட்டம் ஐதா்பட்டறை பகுதியில் அமைந்துள்ள வரசித்தி விநாயகா் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. சின்ன காஞ்சிபுரம், ஐதா்பட்டறை உள்ள இக்கோயில் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷே... மேலும் பார்க்க

பயனாளிகளுக்கு பட்டா மாற்ற ஆணைகள்: காஞ்சிபுரம் ஆட்சியா் வழங்கினாா்

உத்தரமேரூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெறும் ஜமாபந்தியில் பயனாளிகளுக்கு பட்டா மாற்ற ஆணைகளை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வழங்கினாா். காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா்... மேலும் பார்க்க