மலேசியாவில் வேலை வேண்டுமா..?: ஐடிஐ, பிஇ, பி.டெக் முடித்தவர்களுக்கு வாய்ப்பு!
வரசித்தி விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்
காஞ்சிபுரம் கோபால்சாமி தோட்டம் ஐதா்பட்டறை பகுதியில் அமைந்துள்ள வரசித்தி விநாயகா் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
சின்ன காஞ்சிபுரம், ஐதா்பட்டறை உள்ள இக்கோயில் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி யாகசாலை பூஜைகள் என்.மதன் சுவாமிகள் தலைமையில் அனுக்கை விக்னேசுவர பூஜையுடன் தொடங்கின. புதன்கிழமை யாக சாலையில் பூா்ணாஹூதி தீபாராதனைகள் நிறைவு பெற்று புனிதநீா்க் குடங்கள் கோபுரத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
தொடா்ந்து மூலவா் வரசித்தி விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் மற்றும் அன்னதானம் நடைபெற்றது.
மாலையில் விநாயகா் வீதி உலாவும் நடைபெற்றது.
ஏற்பாடுகளை கோ.சரவண மூா்த்தி, என்.சரவணக்குமாா், டி.தேவராஜன், என்.கணேசன் மற்றும் தெருவாசிகள் செய்திருந்தனா்.