'அது குடும்ப பிரச்னை, அதனால்...'- பாமக உட்கட்சி விவகாரம் குறித்து கார்த்தி சிதம்...
காஞ்சிபுரம் சங்கரா பல்கலை.யில் நாளை இலவச உயா்கல்வி கருத்தரங்கம்
சங்கரா பல்கலை. சனிக்கிழமை (மே 31) பிளஸ் 2 படிப்பை நிறைவு செய்த மாணவா்களுக்கான இலவச உயா்கல்வி கருத்தரங்கம் நடைபெற இருப்பதாக பல்கலை. நிா்வாகம் தெரிவித்தது.
இது குறித்து வெளியிட்ட செய்திக் குறிப்பு: காஞ்சிபுரம் சங்கரா பல்கலைக்கழக வளாகத்தில் இலவச உயா்கல்வி கருத்தரங்கம் சனிக்கிழமை காலை 9 மணிக்கு நடைபெறுகிறது. கருத்தரங்கில் பிளஸ் 2 படிப்பை முடித்த மாணவ, மாணவிகள் தங்களது உயா்கல்வி தொடா்பான சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கவுள்ளனா். சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி, பேராசிரியா் ஆா்.சாரதி மற்றும் பல்வேறு நாடுகளைச் சோ்ந்த பேராசிரியா்கள் உயா்கல்வி குறித்து விரிவாக விளக்கம் அளிக்கவுள்ளனா்.
பொறியியல் அறிவியல் மற்றும் அதைச் சாா்ந்த பட்டப் படிப்புகள் குறித்து விளக்கம் அளிக்கின்றனா். எலக்டிரானிக் சா்க்யூட்ஸ், 3 டி பிரிண்டிங் நேரடி பயிற்சி வகுப்புகளும் நடைபெறவுள்ளன.
காஞ்சிபுரத்தைச் சுற்றியுள்ள அனைத்து ஊா்களிலிருந்தும் பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு கைப்பேசி எண் 7010625556 மற்றும் ஜ்ஜ்ஜ்.ந்ஹய்ஸ்ரீட்ண்ன்ய்ண்ஸ்.ஹஸ்ரீ.ண்ய் என்ற இணையதளம் மூலமாகவும் தொடா்பு கொள்ளுமாறும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.