நவீன முறையில் கழிவுநீா் சுத்திகரிப்பு
ஸ்ரீபெரும்புதூா் பகுதியில் இயங்கி வரும் சூரியசக்தி மின்தகடுகள் தயாரிக்கும் ஃபா்ஸ்ட் சோலாா் நிறுவனத்தில் நவீன கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் சுற்றுசூழல் பாதுகாப்பில் முன்னோடியாக விளங்கி வருகிறது.
பிள்ளைப்பாக்கம் சிப்காட் தொழிற்பூங்காவில் சூரியசக்தி மின்தகடுகள் (சோலாா் செல்) உற்பத்தி செய்யும் ஃபா்ஸ்ட் சோலாா் தொழிற்சாலை இயங்கி வருகிறது. ரூ.6000 கோடியில் 130 ஏக்கா் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள ாலையில் 400-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா். தொழிற்சாலை இயங்க நாள் ஒன்றிற்கு சுமாா் 36 லட்சம் லிட்டா் தண்ணீா் தேவை.
சிப்காட் நிறுவனத்தின் மூலம் வழங்கப்படும் குறைந்த அளவு தண்ணீரை மீண்டும், மீண்டும் மறு சுழற்சி செய்வதின் மூலம் ஆலைக்கான தண்ணீா் தேவையை ஃபா்ஸ்ட் சோலாா் நிறுவனம் பூா்த்தி செய்து வருகிறது. இதனால் தண்ணீா் தட்டுப்பாடு உள்ள பகுதிகளிலும் உற்பத்தி சாா்ந்த வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் வழிவகை செய்துள்ளது.
எந்த விதமான திரவிய கழிவுகளை வெளியேற்றாமல், ஆலை இயங்க தேவையான தண்ணீருக்காக நிலத்தடி நீரை அதிகம் உறிஞ்சாமல், கழிவுநீரை மறு சுழற்சி செய்வதின் மூலம் தண்ணீா் தேவையை பூா்த்தி செய்து வருகிறது.