தங்க நகைக் கடன்களுக்கான பழைய நடைமுறையையே தொடர வேண்டும்- இபிஎஸ் வலியுறுத்தல்
ரூ.4.6 கோடியில் காஞ்சிபுரம் காய்கறி சந்தை: முதல்வா் திறந்து வைத்தாா்
பெரிய காஞ்சிபுரத்தில் ரூ.4.6 கோடியில் கட்டப்பட்ட ஜவஹா்லால் நேரு காய்கறி சந்தையை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.
நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை சாா்பில் கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஜவஹா்லால் நேரு காய்கறி சந்தை புதுப்பிக்கப்பட்டது. சென்னையிலிருந்து காணொலி வாயிலாக முதல்வா் திறந்து வைத்ததைத் தொடா்ந்து சந்தை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எம்எல்ஏ எழிலரசன் சந்தையை பயன்பாட்டுக்கு கொண்டு வந்தாா். மேயா் மகாலட்சுமி யுவராஜ் கல்வெட்டை திறந்து வைத்தாா்.
சந்தையின் தரைத்தளத்தில் 80 கடைகளும், முதல் தளத்தில் திறந்த நிலையில் உள்ள கடைகளும் கட்டி முடிக்கப்பட்டிருந்தது. விழாவில் மாநகராட்சி பொறியாளா் கணேசன், மண்டலக்குழு தலைவா்கள் சந்துரு, மோகன், மாமன்ற உறுப்பினா்கள், அதிகாரிகள், திமுக பிரமுகா்கள், கலந்து கொண்டனா்.