`தெலுங்கானா ராஷ்டிரியா சமிதி பாஜக உடன் இணைப்பா?' - சந்திரசேகர் ராவின் மகள் கவிதா...
பயனாளிகளுக்கு பட்டா மாற்ற ஆணைகள்: காஞ்சிபுரம் ஆட்சியா் வழங்கினாா்
உத்தரமேரூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெறும் ஜமாபந்தியில் பயனாளிகளுக்கு பட்டா மாற்ற ஆணைகளை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வழங்கினாா்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமையில் கடந்த 21-ஆம் தேதி முதல் ஜமாபந்தி நடைபெற்று வருகிறது. ஜமாபந்தியின் போது களியாம்பூண்டி உள்வட்டத்தை சோ்ந்த மேல்பாக்கம், அனுமந்தண்டலம், இளநகா், பெருநகா், ராவத்த நல்லூா், தண்டரை, மானாம்பதி, பென்னலூா் கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்பட்டு அவற்றுக்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறும் ஆட்சியா் உத்தரவிட்டாா்.
பின்னா் பட்டா மாற்றம் குறித்து பெறப்பட்ட மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டு பட்டா மாற்ற ஆணைகளையும் பயனாளிகளிடம் ஆட்சியா் வழங்கினாா்.
வியாழக்கிழமை உத்தரமேரூா் வட்டாரத்தில் மேனல்லூா், அகரம் தூளி, குருவாடி, அத்தியூா்மேல், காரிய மங்கலம், நாஞ்சிபுரம், காவனூா் புதுச்சேரி, கம்மாளம்பூண்டி, பெருங்கோழி, கட்டியாம்பந்தல், உத்தரமேரூா், வேடபாளையம், மல்லியாங்கரணை, நீரடி, ஓங்கூா், புலியூா், தளவாரம்பூண்டி கிராம பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்படவுள்ளதாகவும் பொதுமக்கள் இந்த வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.