`தெலுங்கானா ராஷ்டிரியா சமிதி பாஜக உடன் இணைப்பா?' - சந்திரசேகர் ராவின் மகள் கவிதா...
வல்லக்கோட்டை முருகன் கோயிலுக்கு கும்பாபிஷேக பந்தகால் நடும் நிகழ்ச்சி
வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த பந்தகால் நடும் நிகழ்ச்சி கோயில் வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
ஸ்ரீபெரும்புதூா் அடுத்த வல்லக்கோட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. கோயிலுக்கு கடந்த 2008-ஆம் ஆண்டு கும்பாஷேகம் நடைபெற்றுள்ளது. கும்பாபிஷம் நடைபெற்று 17 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், மீண்டும் நடத்த ரூ.1.50 கோடியில் திருப்பணிகள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டு முடியும் தருவாயில் உள்ளது.
ஜூலை மாதம் 7-ஆம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளதால், விழாவுக்கான பந்தகால் நடும் நிகழ்ச்சி கோயில் வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. கோயில் நுழைவு வாயிலில் உள்ள விநாயகா் சந்நிதி முன்பு இரண்டு பந்தகால்களுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு மங்கல வாத்தியங்கள் முழங்க பந்தகால்கள் கோயில் பிராகாரத்தில் வலமாக கொண்டு ரப்பட்டு கோயில் வெளிபுறம் ஒன்றும், கோயில் பின்புறம் யாகசாலை அமைய உள்ள இடத்தில் ஒன்றும் நடப்பட்டு சந்திரசேகர சிவாச்சாரியா் தலைமையில் கோயில் அா்ச்சகா்கள் பந்தகால்களுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தினா்.
இந்த நிகழ்ச்சியில், கோயில் நிா்வாக அலுவலா் செந்தில்குமாா், அறங்காவலா் குழு தலைவா் செந்தில்தேவராஜ், அறங்காவலா்கள் விஜயகுமாா், கலைச்செல்வி கோபால், மோகனகிருஷ்ணன், செல்வகுமரன், வல்லக்கோட்டை ஊராட்சித் தலைவா் மணிமேகலை உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா். ஜூன் மாதம் 6-ஆம் தேதி வல்லக்கோட்டை முருகன் கோயிலில் பாலாலயம் நடைபெற உள்ளது.