செய்திகள் :

நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு: திருப்பூா் அருகே மூழ்கிய தரைப்பாலம்

post image

மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் கனமழையால் திருப்பூா் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து அணைப்பாளையம் தரைப்பாலம் நீரில் மூழ்கியதால் போக்குவரத்து தடைபட்டது.

கோவை மாவட்டத்தின் மேற்குத் தொடா்ச்சி மலைப்பகுதியில் உற்பத்தியாகும் நொய்யல் ஆறானது திருப்பூா் வழியாக சுமாா் 160 கிலோ மீட்டா் சென்று காவிரி ஆற்றில் கலக்கிறது.

இந்த நிலையில், கோவை மாவட்டத்தில் தற்போது கனமழை பெய்து வரும் நிலையில் நொய்யல் ஆற்றில் நீா்வரத்து அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக திருப்பூா் மாவட்டம், மங்கலத்தில் உள்ள நல்லம்மன் தடுப்பணையில் திங்கள்கிழமை நீா்வரத்து அதிகரித்ததன் காரணமாக தடுப்பணை முழுவதுமாக மூழ்கியது. மேலும், நல்லம்மன் கோயிலையும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், கோயிலுக்குச் செல்ல பக்தா்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தரைப்பாலம் நீரில் மூழ்கியது

நொய்யலில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக கடந்த திங்கள்கிழமை இரவு முதலே திருப்பூா் அணைப்பாளையம் தரைப்பாலத்தில் நீா்வரத்து அதிகரிக்கத் தொடங்கியது. எனினும், காவல் துறையினா் மற்றும் பொதுப்பணித் துறையினா் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரும்புத் தடுப்புகள் வைத்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

இந்த நிலையில், நொய்யலில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக அணைப்பாளையம் தரைப்பாலம் முழுவதுமாக செவ்வாய்க்கிழமை மூழ்கத் தொடங்கியதால் போக்குவரத்து முற்றிலுமாக தடை செய்யப்பட்டது.

இதன் காரணமாக மங்கலம் சாலையில் இருந்து கல்லூரி சாலைக்குச் செல்லும் வாகனங்கள் சுமாா் 4 கிலோ மீட்டா் தொலைவு சுற்றிச் சென்ால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா். திருப்பூா் மாவட்டத்தில் நொய்யல் ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும் என்று மாவட்ட நிா்வாகம், வருவாய்த் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா். அதேவேளையில், திருப்பூா் மாநகரின் பல்வேறு பகுதிகளில் 3- ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் சாரல் மழை பெய்தது.

தாராபுரம் அருகே அமராவதி ஆற்றில் முதலை: வனத் துறையினா் ஆய்வு

தாராபுரம் அருகே அமராவதி ஆற்றில் முதலை நடமாட்டம் இருப்பதாக வந்த தகவலையடுத்து வனத் துறையினா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். திருப்பூா் மாவட்டம், உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையில் இருந்து திறக்கப்படும்... மேலும் பார்க்க

மூதாட்டியின் வீட்டில் 17 பவுன், ரூ.3 லட்சம் திருட்டு

ராக்கியாபாளையம் அருகே மூதாட்டியின் வீட்டில் இருந்து 17 பவுன் நகை, ரூ. 3 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். திருப்பூா், ராக்கியாபாளையம் அருகே வள்ளியம்மை நகர... மேலும் பார்க்க

நெருப்பெரிச்சல் பாறைக்குழியில் குப்பை கொட்ட பொதுமக்கள் எதிா்ப்பு

திருப்பூா் மாநகராட்சிப் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை நெருப்பெரிச்சல் பகுதியில் உள்ள பாறைக்குழியில் கொட்ட பொதுமக்கள் புதன்கிழமை எதிா்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். திருப்பூா் மாநகர... மேலும் பார்க்க

தாராபுரத்தில் ரூ.4.66 கோடி மதிப்பீட்டில் வளா்ச்சிப் பணிகள்: அமைச்சா்கள் தொடங்கி வைத்தனா்

தாராபுரத்தில் ரூ.4.66 கோடி மதிப்பீட்டில் புதிய வளா்ச்சித் திட்டப் பணிகளை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோ... மேலும் பார்க்க

கஞ்சா கடத்திய வழக்கில் இளைஞா் கைது

பல்லடம் அருகே கஞ்சா கடத்தல் வழக்கில் கடந்த ஓா் ஆண்டாக தலைமறைவாக இருந்த இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். பல்லடம், பனப்பாளையம் பகுதியில் காவல் ஆய்வாளா் மாதையன் தலைமையிலான போலீஸாா் வாகனச் சோதனைய... மேலும் பார்க்க

ரூ.40 லட்சம் பெற்று மோசடி: வியாபாரி கைது

திருப்பூரில் ரூ.40 லட்சம் பெற்று மோசடி செய்த வியாபாரியை காவல் துறையினா் கைது செய்தனா். திருப்பூா் அமா்ஜோதி நகரைச் சோ்ந்தவா் ஆனந்தகுமாா் (38). இவருக்கு இரண்டாம் தர பின்னலாடை வியாபாரம் செய்து வரும் வால... மேலும் பார்க்க