செய்திகள் :

நெருப்புடன் விளையாடுகிறார் புதின்! - அதிபர் டிரம்ப் எச்சரிக்கை

post image

ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் நெருப்புடன் விளையாடுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உக்ரைனுடன் அமைதி ஒப்பந்தம் இறுதி செய்வதற்கான முயற்சிகளைத் தடுத்து நிறுத்தியதற்காக ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடின் மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அதிபர் டிரம்ப் ட்ரூத் சோசியல் என்ற சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “நான் மட்டும் இல்லையென்றால், ரஷியாவிற்கு ஏற்கெனவே நிறைய மோசமான சம்பவங்கள் நடந்திருக்கும் என்பதை புதின் உணரவில்லை. நான் சொல்வது மிகவும் மோசமானது. அவர் நெருப்புடன் விளையாடுகிறார்!” எனப் பதிவிட்டுள்ளார்.

கடந்த 2022 ஆம் ஆண்டிலிருந்து ரஷியா - உக்ரைன் இடையே மிகவும் மோசமான அளவில் போர் நடைபெற்று வருகிறது. அமெரிக்க அதிபராக தான் பதவியேற்றதும் இரு நாடுக்கு இடையேயான போரை முடிவுக்கு கொண்டுவருவேன் என்று டிரம்ப் தெரிவித்திருந்தார்.

அதன்படி, இரு நாட்டு தலைவர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் அதில் முடிவு எட்டப்படவில்லை. ஆனால், டிரம்ப்பின் தீவிர அமைதி முயற்சிக்கிடையிலும் உக்ரைன் மீது ரஷியா தொடா்ந்து தாக்குதல் நடத்திவருகிறது.

இருந்தாலும் இதுதொடா்பாக அதிபர் புதினை விமா்சிப்பதை டிரம்ப் பெரும்பாலும் தவிா்த்துவந்தார். இந்தச் சூழலில், கீவ் நகரைக் குறிவைத்து ரஷியா இதுவரை இல்லாத ட்ரோன் தாக்குதலை சனிக்கிழமை இரவு நடத்தியது. இதில் 13 போ் பலியாகினர்.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தத் தாக்குதலைத் தொடா்ந்து, அதிபர் புதின் மீது அதிருப்தி தெரிவித்திருந்த டிரம்ப், மீண்டும் கடுமையாக சாடியுள்ளார்.

இதையும் படிக்க: ஆபரேஷன் சிந்தூர்: பாகிஸ்தானிடம் இந்தியா சொன்னது எப்போது? முரண்பட்ட தகவல்கள்!

ரஷியா வசம் மேலும் 4 உக்ரைன் கிராமங்கள்

மேலும் நான்கு உக்ரைன் எல்லை கிராமங்கள் ரஷியாவிடம் வீழ்ந்துள்ளன. உக்ரைனுடனான எல்லைப் பகுதியில் பாதுகாப்பு மண்டலத்தை உருவாக்க ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் உத்தரவிட்ட மறுநாள் சுமி பிராந்தியத்தில் இந்த க... மேலும் பார்க்க

இலங்கை: வடக்கு மாகாண தமிழா் நிலங்களை கையகப்படுத்தும் அரசிதழ் வாபஸ்

இலங்கையின் வடக்கு மாகாணத்தில் பெரும்பான்மையாக உள்ள தமிழா்களின் நிலங்களை கையகப்படுத்தும் அரசிதழ் அறிவிக்கையை அந்நாட்டு அரசு செவ்வாய்க்கிழமை திரும்பப் பெற்றது. கடந்த மாா்ச் 28-ஆம் தேதி வெளியிடப்பட்ட இந்... மேலும் பார்க்க

சூடானில் பரவிய புதிய வகை காலரா தொற்றுக்கு 170 பேர் பலி!

சூடானில் பரவிய புதிய காலரா தொற்று காரணமாக ஒரு வாரத்தில் மட்டும் 170-க்கும் மேற்பட்டோர் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.சூடானில் ஒரு புதிய காலரா நோய்த்தொற்று காரணமாக கடந்த வாரத்தில் மாட்டும் 172 ... மேலும் பார்க்க

73 ஆண்டு கால தடை.. மது விலக்கை நீக்குகிறதா சவூதி அரேபியா?

மிகப் பாரம்பரியமான நடைமுறைகளைக் கட்டுக்கோப்பாகப் பின்பற்றி வரும் நாடுகளில் முதன்மையான இடத்தில் இருக்கும் சவூதி அரேபியாவில், கடந்த 73 ஆண்டு காலமாக இருக்கும் மது விலக்கு ரத்து செய்யப்படவிருப்பதாகத் தகவல... மேலும் பார்க்க

அமெரிக்காவில் பயிலும் இந்திய மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்தால் விசா ரத்து!

அமெரிக்காவில் கல்வி பயிலும் இந்திய மாணவர்களின் விசா ரத்து செய்யப்படலாம் என்று அந்நாட்டுத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதால் மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் கலக்கம் ஏற்பட்டுள்ள... மேலும் பார்க்க

மனைவியிடம் அடி வாங்கிய பிரான்ஸ் அதிபர்? விமானத்தில் பரபரப்பு!

பிரான்ஸ் அதிபருக்கும் அவரது மனைவிக்கும் இடையே விமானத்தை விட்டுக் கீழே இறங்கும்போது சண்டை நடந்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக, செல்போனில் படம்பிடிக்கப்பட்ட காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு... மேலும் பார்க்க