செய்திகள் :

73 ஆண்டு கால தடை.. மது விலக்கை நீக்குகிறதா சவூதி அரேபியா?

post image

மிகப் பாரம்பரியமான நடைமுறைகளைக் கட்டுக்கோப்பாகப் பின்பற்றி வரும் நாடுகளில் முதன்மையான இடத்தில் இருக்கும் சவூதி அரேபியாவில், கடந்த 73 ஆண்டு காலமாக இருக்கும் மது விலக்கு ரத்து செய்யப்படவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வரும் 2034ஆம் ஆண்டில் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெறவிருக்கும் நிலையில், 600 சுற்றுலாத் தலங்களில் மட்டும், ஒய்ன், பியர் போன்ற ஆல்கஹால் குறைந்த மதுபானங்களின் விற்பனையைத் தொடங்க திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்பட்டது.

ஒருவேளை இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால், சவூதி ரேபியாவில் கடந்த 73 ஆண்டுகளாக இருந்த தடை முடிவுக்கு வரலாம் என்றும் கூறப்படுகிறது.

1932ஆம் ஆண்டு சவூதி அரேபியா உருவானது. இந்த நாடு ஷரியா சட்டத்தைப் பின்பற்றியதால் மதுபானத்துக்கு முற்றிலும் தடைவிதிக்கப்பட்டது. இந்த மது விற்பனைக்கான தடையானது, மது விற்பனை மற்றும் நுகர்வு மீதான சட்டத் தடை 1952 இல் கொண்டுவரப்பட்டு, சட்டப்படி முறைப்படுத்தப்பட்டது.

2024ல் திறக்கப்பட்ட மதுக்கூடம்

சவூதி நாட்டில் வாழும் வெளிநாட்டுத் தூதர்களுக்காக 2024ஆம் ஆண்டு ரியாத்தில் உள்ள தூதர்களுக்கான குடியிருப்பில் முதல் மதுபானம் திறக்கப்பட்டது. இங்கு முஸ்லிம் அல்லாத தூதர்கள் மட்டும் ஒயின், இரண்டு வகையான பியர்களை மட்டும் வாங்கிக் கொள்ளும் வகையில் வசதி செய்து தரப்பட்டுள்ளது. இதிலும் குறிப்பிட்ட அளவிலான மதுபானம் மட்டுமே தூதர்களுக்கு வழங்கப்படும். செல்போன்கள் மதுக்கூடத்துக்குள் அனுமதியில்லை என்பது போன்ற கட்டுப்பாடுகளுடன் கடை இயங்கி வருகிறது.

புதிய தலைமையின் கீழ்

சவூதி அரேபியா, முகமது பின் சல்மான் தலைமை ஏற்றதற்குப் பிறகு சில மாற்றங்களை சந்தித்து வருகிறது. எரிபொருளை மட்டும் நம்பியிருந்தால் பொருளாதாரத்தை முன்னேற்ற முடியாது என்ற கொள்கையிடன் பல்வேறு மாற்றங்களையும் இவர் செய்து வருகிறது. பெண்களுக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வாகனம் ஓட்ட அனுமதி, போட்டிகளில் பங்கேற்க அனுமதி ஆண் துணையில்லாமல் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கலாம் என்பது போன்ற தளர்வுகளை மேற்கொண்டுள்ளார்.

2018ஆம் ஆண்டு சினிமாவுக்கு இருந்த கட்டுப்பாடு தளர்த்தப்பட்டது. 2030ஆம் ஆண்டுக்குள் 300 திரையரங்குகளைத் திறக்க திட்டமிட்டுள்ளது.

என்ன சொல்கிறது சவூதி அரேபியா?

மதுபானத்துக்கு அனுமதி கொடுக்கும் திட்டம் எதுவும் இல்லை என்றும், மது விலக்கு தொடரும் என்றும் கத்தாரில் உலகக் கோப்பை நடந்தபோது அங்கும் மது விற்பனைக்குத் தடை இருந்ததையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பாகிஸ்தானுக்கு ரூ.31ஆயிரம் கோடி கடனுதவி: சீனா உறுதி

பாகிஸ்தானுக்கு வரும் ஜூன் மாதத்துக்குள் ரூ.31,600 கோடி கடன் வழங்கப்படும் என்று சீனா உறுதி அளித்துள்ளது. பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தானுக்கு இதன் மூலம் அந்நிய செலாவணி கையிருப்பு ரூ.1 லட்... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் ட்ரோன் தாக்குதல்? 7 குழந்தைகள் உள்பட 22 பேர் படுகாயம்!

பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 7 குழந்தைகள் உள்பட 22 பேர் படுகாயமடைந்துள்ளனர். தெற்கு வசிரிஸ்தான் மாவட்டத்தின் அஸாம் வார்ஸக் பகுதியிலுள்ள கைப்பந்து மைதானத்தில் இன்ற... மேலும் பார்க்க

ஸ்பெயின் கடலில் அகதிகள் படகு விபத்து! 4 பெண்கள் பலி!

ஸ்பெயின் நாட்டின் தீவுக்கு அருகிலுள்ள கடல்பகுதியில் அகதிகளின் படகு கவிழ்ந்ததில் 4 பெண்கள் பலியாகியுள்ளனர். ஸ்பெயினின் கேனரி தீவுகளை நோக்கி பயணம் செய்த அகதிகளின் படகு ஒன்று எல் ஹையிரோ தீவின் அருகில் இன... மேலும் பார்க்க

யேமன் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்! ஹவுதிகளின் இறுதி விமானம் அழிப்பு!

யேமன் தலைநகரிலுள்ள முக்கிய விமான நிலையத்தின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் ஹவுதி கிளர்ச்சிப்படையின் விமானம் அழிக்கப்பட்டது. ஹவுதி கிளர்ச்சிப்படையின் கட்டுப்பாட்டிலுள்ள, யேமனின் தலைநகர்... மேலும் பார்க்க

போர்டிங் பாஸ் இல்லாமல் விமானத்துக்குள் நுழைந்த புறாக்கள்! வைரலாகும் விடியோ

அமெரிக்காவின் மின்னபோலிஸ் நகரிலிருந்து புறப்பட்ட டெல்டா ஏர் லைன்ஸ் விமானத்தில் அடுத்தடுத்து இரண்டு புறாக்கள் நுழைந்து பெரும் சிக்கலை ஏற்படுத்தியதால், விமானப் புறப்பாடு தாமதமானது.ஒரே நாளில், விமானம் இர... மேலும் பார்க்க

புறாக்களுக்கு உணவளித்த மூதாட்டிக்கு ரூ.80 ஆயிரம் அபராதம்! எங்கே? ஏன்?

சிங்கப்பூர் நாட்டில் புறாக்களுக்கு உணவளித்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மூதாட்டிக்கு ரூ.80 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் சன்முகம்நாதன் ஷாம்லா (வயது 70), இவர் தான் ... மேலும் பார்க்க