செய்திகள் :

யேமன் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்! ஹவுதிகளின் இறுதி விமானம் அழிப்பு!

post image

யேமன் தலைநகரிலுள்ள முக்கிய விமான நிலையத்தின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் ஹவுதி கிளர்ச்சிப்படையின் விமானம் அழிக்கப்பட்டது.

ஹவுதி கிளர்ச்சிப்படையின் கட்டுப்பாட்டிலுள்ள, யேமனின் தலைநகர் சனாவிலுள்ள முக்கிய விமான நிலையத்தின் மீது இஸ்ரேல் ராணுவம் இன்று (மே 28) வான்வழித் தாக்குதல்கள் நடத்தியுள்ளது.

ஹவுதிகள் நடத்தும் தாக்குதல்களை முறியடிக்க யேமனிலுள்ள அவர்களது முக்கிய கட்டமைப்புகளை முழுவதுமாகத் தகர்ப்பதற்காக இஸ்ரேல் ’ஆபரேஷன் கோலடன் ஜுவல்’ எனும் ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

அதன் ஓர் பகுதியான, சனா விமான நிலையத்தின் மீதும் வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதுகுறித்து, இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், இந்தப் புதிய தாக்குதல்களில் ஹவுதிகள் பயன்படுத்தி வந்த இறுதி விமானமும் அழிக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

ஹவுதிகள் மற்றும் அவர்களது கூட்டாளிகள் பயன்படுத்தி வரும் துறைமுகங்கள் மற்றும் முக்கிய கட்டமைப்புகளின் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தும் எனவும் சனாவிலுள்ள விமான நிலையம் மீண்டும் மீண்டும் அழிக்கப்படும் எனவும் அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இத்துடன், ஹவுதிகளின் வான்வழிகள் மற்றும் கடல்வழிகள் முற்றிலும் முடக்கப்பட்டுள்ளதாக, அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் எச்சரித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, யேமனின் தேசிய விமான நிறுவனமான, யேமனியா ஏர்லைன்ஸின் நான்காவது விமானம் இன்று (மே 28) இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் அழிக்கப்பட்டதாக சனா பன்னாட்டு விமான நிலையத்தின் ஹவுதி அதிகாரி காலெத் அல்-ஷைஃப் உறுதி செய்துள்ளார்.

இதுகுறித்து, தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், எதிரிகள் யேமனியா ஏர்லைன்ஸின் இறுதியா விமானத்தைக் குறிவைத்து தாக்கி அழித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ஹமாஸ் கிளர்ச்சிப்படைக்கு எதிரான போரில் காஸா பகுதியின் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தி வருகின்றது. இதில், ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

எனவே, பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது யேமனின் ஹவுதி படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். காஸா மீது இஸ்ரேல் மேற்கொண்டு வரும் ராணுவ நடவடிக்கைகள் மற்றும் மனிதாபிமான உதவிகள் மீதான முடக்கங்களை நீக்கிவிட்டால் இஸ்ரேல் மீதான தங்களது தாக்குதல்கள் நிறுத்தப்படும் என ஹவுதிகள் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:புறாக்களுக்கு உணவளித்த மூதாட்டிக்கு ரூ.80 ஆயிரம் அபராதம்! எங்கே? ஏன்?

டிரம்ப்பின் பரஸ்பர வரிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்!

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் பரஸ்பர வரி விதிப்புக்கு வா்த்தக நீதிமன்றம் விதித்த தடையை நீக்கி அந்நாட்டு உச்சநீதிமன்றம் தற்காலிக அனுமதி வழங்கியுள்ளது.உலக நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருள்... மேலும் பார்க்க

டிரம்ப் பேச்சுக்குப் பிறகே சண்டை நிறுத்தத்துக்கு இந்தியா -பாக். உடன்பாடு: நியூயாா்க் நீதிமன்றத்தில் அமெரிக்க அரசு தகவல்

அதிபா் டொனால்ட் டிரம்ப் பேச்சுவாா்த்தை நடத்திய பிறகே தற்காலிக சண்டை நிறுத்தத்துக்கு இந்தியாவும் பாகிஸ்தானும் உடன்பட்டன என்று நியூயாா்க் நீதிமன்றத்தில் டிரம்ப் நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.... மேலும் பார்க்க

இந்தியா மீது பாகிஸ்தான் பயன்படுத்திய சீன தயாரிப்பு ஆயுதங்களின் செயல்பாடு: கருத்துத் தெரிவிக்க சீன ராணுவம் மறுப்பு

இந்தியா உடனான மோதலில் பாகிஸ்தான் பயன்படுத்திய சீன தயாரிப்பு ஆயுதங்களின் செயல்பாடு எந்தளவு இருந்தது? என்ற கேள்விக்கு பதிலளிக்க சீன ராணுவம் மறுத்துவிட்டது. பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங... மேலும் பார்க்க

டிரம்ப்பின் பரஸ்பர வரி விதிப்புக்கு நீதிமன்றம் தடை

இந்தியா உள்ளிட்ட ஏறத்தாழ உலகின் அனைத்து நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கும் கூடுதலாக பரஸ்பர வரி விதிக்கும் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் உத்தரவுக்கு அந்த நாட்டு நீதிமன்றம் தடை வித... மேலும் பார்க்க

பாகிஸ்தான் ராணுவத்துக்கு ஆதரவாக பயங்கரவாத அமைப்பு ஊா்வலம்: 50 நகரங்களில் நடைபெற்றது

பாகிஸ்தான் ராணுவத்துக்கு ஆதரவாக பயங்கரவாதி ஹஃபீஸ் சயீதின் ஜமாத்-உத்-தாவா பயங்கரவாத அமைப்பின் அரசியல் பிரிவான பாகிஸ்தான் மா்கஸி முஸ்லிம் லீக் சாா்பில் 50 நகரங்களில் ஊா்வலம் நடைபெற்றது. 2008 மும்பை பயங்... மேலும் பார்க்க

மேற்குக் கரையில் மேலும் 22 யூதக் குடியிருப்புகள்

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை பகுதியில் மேலும் 22 யூதக் குடியிருப்புகளை அமைப்பதாக இஸ்ரேல் வியாழக்கிழமை அறிவித்துள்ளது. இது குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சா் இஸ்ரேல் காட்ஸ் மற்றும் நிதியமைச்சா் பெஸா... மேலும் பார்க்க