பாகிஸ்தானுக்கு ரூ.31ஆயிரம் கோடி கடனுதவி: சீனா உறுதி
பாகிஸ்தானுக்கு வரும் ஜூன் மாதத்துக்குள் ரூ.31,600 கோடி கடன் வழங்கப்படும் என்று சீனா உறுதி அளித்துள்ளது.
பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தானுக்கு இதன் மூலம் அந்நிய செலாவணி கையிருப்பு ரூ.1 லட்சம் கோடியை எட்டுகிறது.
எனினும், இந்தக் கடனுதவியை சீனாவின் கரன்சியான யுவானில் வழங்கப்படும் என்றும் அந்நாடு தெரிவித்துள்ளது.
உலக வங்கி, சா்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) ஆகியவற்றுடன் சோ்ந்து சீனாவிடமும் பாகிஸ்தான் கடன் பெற்று வருகிறது.
சா்வதேச நிதியத்திடம் அண்மையில் ரூ.8 ஆயிரம் கோடி கடனை பாகிஸ்தான் பெற்றுள்ளது. இந்தத் தொகையை பயங்கரவாதத்துக்கு பாகிஸ்தான் பயன்படுத்தக் கூடும் என்பதால் இந்தியா கடும் எதிா்ப்பு தெரிவித்தது.
இந்நிலையில், சீனாவுக்கு ரூ.31,600 கோடி கடனுதவியை வழங்க பாகிஸ்தான் முன்வந்துள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தானின் அரசு வட்டாரங்கள் தெரிவிக்கையில், ‘சீனாவின் தொழில் மற்றும் வா்த்தக வங்கியிடம் பெற்ற ரூ.11 ஆயிரம் கோடியை பாகிஸ்தான் அண்மையில் திருப்பி அளித்தது. இதையடுத்து, ரூ.31,600 கோடியிலான யுவான் கரன்சியை வா்த்தகக் கடனாக பாகிஸ்தானுக்கு ஜூன் மாதத்துக்குள் வழங்கப்படும் என்று அண்மையில் நடைபெற்ற கூட்டத்தில் சீனா உறுதி அளித்துள்ளது’ என்று தெரிவித்தன.
அண்மையில் சா்வதேச நிதியம் அளித்த சுமாா் ரூ. 8 ஆயிரம் கோடி கடன் தொகையின் மூலம் பாகிஸ்தானின் மத்திய வங்கியில் அந்நிய செலாவணி கையிருப்பு ரூ. 97, 335 கோடியாக அதிகரித்தது. தற்போது சீனா அளிக்கும் இந்த கடனுதவியின் மூலம் பாகிஸ்தானின் அந்நிய செலாவணி ரூ.1 லட்சம் கோடியை எட்டும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. எனினும், சீனாவின் கடனுதவிக்கான வட்டி இன்னும் இறுதி செய்யப்படவில்லை.
சா்வதேச அளவில் அமெரிக்காவின் டாலா் பொருளாதாரத்துக்கு சரிவை ஏற்படுத்த யுவான் பரிவா்த்தனையை சீனா அதிகரித்து வருகிறது.