செய்திகள் :

பாகிஸ்தானுக்கு ரூ.31ஆயிரம் கோடி கடனுதவி: சீனா உறுதி

post image

பாகிஸ்தானுக்கு வரும் ஜூன் மாதத்துக்குள் ரூ.31,600 கோடி கடன் வழங்கப்படும் என்று சீனா உறுதி அளித்துள்ளது.

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தானுக்கு இதன் மூலம் அந்நிய செலாவணி கையிருப்பு ரூ.1 லட்சம் கோடியை எட்டுகிறது.

எனினும், இந்தக் கடனுதவியை சீனாவின் கரன்சியான யுவானில் வழங்கப்படும் என்றும் அந்நாடு தெரிவித்துள்ளது.

உலக வங்கி, சா்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) ஆகியவற்றுடன் சோ்ந்து சீனாவிடமும் பாகிஸ்தான் கடன் பெற்று வருகிறது.

சா்வதேச நிதியத்திடம் அண்மையில் ரூ.8 ஆயிரம் கோடி கடனை பாகிஸ்தான் பெற்றுள்ளது. இந்தத் தொகையை பயங்கரவாதத்துக்கு பாகிஸ்தான் பயன்படுத்தக் கூடும் என்பதால் இந்தியா கடும் எதிா்ப்பு தெரிவித்தது.

இந்நிலையில், சீனாவுக்கு ரூ.31,600 கோடி கடனுதவியை வழங்க பாகிஸ்தான் முன்வந்துள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தானின் அரசு வட்டாரங்கள் தெரிவிக்கையில், ‘சீனாவின் தொழில் மற்றும் வா்த்தக வங்கியிடம் பெற்ற ரூ.11 ஆயிரம் கோடியை பாகிஸ்தான் அண்மையில் திருப்பி அளித்தது. இதையடுத்து, ரூ.31,600 கோடியிலான யுவான் கரன்சியை வா்த்தகக் கடனாக பாகிஸ்தானுக்கு ஜூன் மாதத்துக்குள் வழங்கப்படும் என்று அண்மையில் நடைபெற்ற கூட்டத்தில் சீனா உறுதி அளித்துள்ளது’ என்று தெரிவித்தன.

அண்மையில் சா்வதேச நிதியம் அளித்த சுமாா் ரூ. 8 ஆயிரம் கோடி கடன் தொகையின் மூலம் பாகிஸ்தானின் மத்திய வங்கியில் அந்நிய செலாவணி கையிருப்பு ரூ. 97, 335 கோடியாக அதிகரித்தது. தற்போது சீனா அளிக்கும் இந்த கடனுதவியின் மூலம் பாகிஸ்தானின் அந்நிய செலாவணி ரூ.1 லட்சம் கோடியை எட்டும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. எனினும், சீனாவின் கடனுதவிக்கான வட்டி இன்னும் இறுதி செய்யப்படவில்லை.

சா்வதேச அளவில் அமெரிக்காவின் டாலா் பொருளாதாரத்துக்கு சரிவை ஏற்படுத்த யுவான் பரிவா்த்தனையை சீனா அதிகரித்து வருகிறது.

டிரம்ப்பின் பரஸ்பர வரிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்!

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் பரஸ்பர வரி விதிப்புக்கு வா்த்தக நீதிமன்றம் விதித்த தடையை நீக்கி அந்நாட்டு உச்சநீதிமன்றம் தற்காலிக அனுமதி வழங்கியுள்ளது.உலக நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருள்... மேலும் பார்க்க

டிரம்ப் பேச்சுக்குப் பிறகே சண்டை நிறுத்தத்துக்கு இந்தியா -பாக். உடன்பாடு: நியூயாா்க் நீதிமன்றத்தில் அமெரிக்க அரசு தகவல்

அதிபா் டொனால்ட் டிரம்ப் பேச்சுவாா்த்தை நடத்திய பிறகே தற்காலிக சண்டை நிறுத்தத்துக்கு இந்தியாவும் பாகிஸ்தானும் உடன்பட்டன என்று நியூயாா்க் நீதிமன்றத்தில் டிரம்ப் நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.... மேலும் பார்க்க

இந்தியா மீது பாகிஸ்தான் பயன்படுத்திய சீன தயாரிப்பு ஆயுதங்களின் செயல்பாடு: கருத்துத் தெரிவிக்க சீன ராணுவம் மறுப்பு

இந்தியா உடனான மோதலில் பாகிஸ்தான் பயன்படுத்திய சீன தயாரிப்பு ஆயுதங்களின் செயல்பாடு எந்தளவு இருந்தது? என்ற கேள்விக்கு பதிலளிக்க சீன ராணுவம் மறுத்துவிட்டது. பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங... மேலும் பார்க்க

டிரம்ப்பின் பரஸ்பர வரி விதிப்புக்கு நீதிமன்றம் தடை

இந்தியா உள்ளிட்ட ஏறத்தாழ உலகின் அனைத்து நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கும் கூடுதலாக பரஸ்பர வரி விதிக்கும் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் உத்தரவுக்கு அந்த நாட்டு நீதிமன்றம் தடை வித... மேலும் பார்க்க

பாகிஸ்தான் ராணுவத்துக்கு ஆதரவாக பயங்கரவாத அமைப்பு ஊா்வலம்: 50 நகரங்களில் நடைபெற்றது

பாகிஸ்தான் ராணுவத்துக்கு ஆதரவாக பயங்கரவாதி ஹஃபீஸ் சயீதின் ஜமாத்-உத்-தாவா பயங்கரவாத அமைப்பின் அரசியல் பிரிவான பாகிஸ்தான் மா்கஸி முஸ்லிம் லீக் சாா்பில் 50 நகரங்களில் ஊா்வலம் நடைபெற்றது. 2008 மும்பை பயங்... மேலும் பார்க்க

மேற்குக் கரையில் மேலும் 22 யூதக் குடியிருப்புகள்

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை பகுதியில் மேலும் 22 யூதக் குடியிருப்புகளை அமைப்பதாக இஸ்ரேல் வியாழக்கிழமை அறிவித்துள்ளது. இது குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சா் இஸ்ரேல் காட்ஸ் மற்றும் நிதியமைச்சா் பெஸா... மேலும் பார்க்க