செய்திகள் :

புறாக்களுக்கு உணவளித்த மூதாட்டிக்கு ரூ.80 ஆயிரம் அபராதம்! எங்கே? ஏன்?

post image

சிங்கப்பூர் நாட்டில் புறாக்களுக்கு உணவளித்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மூதாட்டிக்கு ரூ.80 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் சன்முகம்நாதன் ஷாம்லா (வயது 70), இவர் தான் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்புக் கட்டடத்திலுள்ள புறாக்களுக்கு வழக்கமாக உணவளித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

சிங்கப்பூரின் வனவிலங்குச் சட்டத்தின்படி, வன உயிரினங்களுக்கு வனத்துறை தேசியப் பூங்காவின் உயர் அதிகாரிகளிடம் எழுத்துப்பூர்வமாக அனுமதி பெறாமல் உணவளிப்பது சட்டவிரோதம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 2023-ம் ஆண்டு ஏப்ரலில் அவர் புறக்களுக்கு உணவளித்ததைக் கண்ட தேசியப் பூங்கா அதிகாரிகள், மீண்டும் அந்தச் செயலில் ஈடுபடக்கூடாது என எச்சரித்துள்ளனர்.

இருப்பினும், ஷாம்லா அந்த எச்சரிக்கையைப் பொருட்படுத்தாமல், 2024 நவம்பர் வரை அங்குள்ள புறாக்களுக்கு தொடர்ந்து உணவளித்து வந்துள்ளார்.

இத்துடன், கடந்த பிப்ரவரியில் அவரது வீட்டின் அருகிலுள்ள புறாக்களைப் பிடிக்க தேசியப் பூங்கா அதிகாரிகள் வலைகளை விரித்தபோது, அதனை எதிர்த்து ஷாமலா அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால், அவர்கள் தங்களது பணிகளைப் பாதியிலேயே நிறுத்தியுள்ளனர்.

இந்நிலையில், புறாக்களுக்கு உணவளித்ததற்காக அவர் மீது அந்நாட்டின் வனவிலங்குச் சட்டத்தின் படி இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மேலும், கடந்த 2020 ஆம் ஆண்டு 8 வழக்குகள் அவர் மீது பதிவுச் செய்யப்பட்டன. பின்னர், அப்போது அவர் எச்சரிக்கையுடன் விடுவிக்கப்பட்டிருந்தார். அத்துடன் சேர்த்து, அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தது உள்ளிட்ட 11 வழக்குகளும் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டன.

இந்தத் தொடர் குற்றத்துக்காக ஷாம்லாவுக்கு அந்நாட்டு நீதிமன்றம் 1,200 சிங்கப்பூர் டாலர்கள் (இந்திய பண மதிப்பீட்டில் ரூ. 79,373) அபராதமாக விதித்துள்ளது.

மேலும், அவர் அபராதம் செலுத்தவில்லை என்றால் இரண்டு நாள்கள் சிறையில் கழிக்க நேரிடும் என நீதிபதி எச்சரித்த நிலையில் இன்று (மே 28) அவர் அபராதம் செலுத்தி இந்த வழக்கிலிருந்து விடுதலையானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: 'பட்டினிதான் மிகப்பெரிய நோய்' - காஸாவில் தன் குழந்தைகளுக்காக குப்பைகளில் உணவு தேடும் பெண்!

டிரம்ப் பேச்சுக்குப் பிறகே சண்டை நிறுத்தத்துக்கு இந்தியா -பாக். உடன்பாடு: நியூயாா்க் நீதிமன்றத்தில் அமெரிக்க அரசு தகவல்

அதிபா் டொனால்ட் டிரம்ப் பேச்சுவாா்த்தை நடத்திய பிறகே தற்காலிக சண்டை நிறுத்தத்துக்கு இந்தியாவும் பாகிஸ்தானும் உடன்பட்டன என்று நியூயாா்க் நீதிமன்றத்தில் டிரம்ப் நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.... மேலும் பார்க்க

இந்தியா மீது பாகிஸ்தான் பயன்படுத்திய சீன தயாரிப்பு ஆயுதங்களின் செயல்பாடு: கருத்துத் தெரிவிக்க சீன ராணுவம் மறுப்பு

இந்தியா உடனான மோதலில் பாகிஸ்தான் பயன்படுத்திய சீன தயாரிப்பு ஆயுதங்களின் செயல்பாடு எந்தளவு இருந்தது? என்ற கேள்விக்கு பதிலளிக்க சீன ராணுவம் மறுத்துவிட்டது. பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங... மேலும் பார்க்க

டிரம்ப்பின் பரஸ்பர வரி விதிப்புக்கு நீதிமன்றம் தடை

இந்தியா உள்ளிட்ட ஏறத்தாழ உலகின் அனைத்து நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கும் கூடுதலாக பரஸ்பர வரி விதிக்கும் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் உத்தரவுக்கு அந்த நாட்டு நீதிமன்றம் தடை வித... மேலும் பார்க்க

பாகிஸ்தான் ராணுவத்துக்கு ஆதரவாக பயங்கரவாத அமைப்பு ஊா்வலம்: 50 நகரங்களில் நடைபெற்றது

பாகிஸ்தான் ராணுவத்துக்கு ஆதரவாக பயங்கரவாதி ஹஃபீஸ் சயீதின் ஜமாத்-உத்-தாவா பயங்கரவாத அமைப்பின் அரசியல் பிரிவான பாகிஸ்தான் மா்கஸி முஸ்லிம் லீக் சாா்பில் 50 நகரங்களில் ஊா்வலம் நடைபெற்றது. 2008 மும்பை பயங்... மேலும் பார்க்க

மேற்குக் கரையில் மேலும் 22 யூதக் குடியிருப்புகள்

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை பகுதியில் மேலும் 22 யூதக் குடியிருப்புகளை அமைப்பதாக இஸ்ரேல் வியாழக்கிழமை அறிவித்துள்ளது. இது குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சா் இஸ்ரேல் காட்ஸ் மற்றும் நிதியமைச்சா் பெஸா... மேலும் பார்க்க

அமெரிக்க பூங்காவில் துப்பாக்கிச் சூடு! 7 பேர் படுகாயம்!

அமெரிக்காவின் வாஷிங்டனிலுள்ள பூங்காவில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் படுகாயமடைந்துள்ளனர். வாஷிங்டனின் தகோமா புறநகர் பகுதியிலுள்ள ஹேரி டோட் பூங்காவில் நேற்று (மே 28) இரவு 8 மணியளவில் துப்பாக்க... மேலும் பார்க்க