செய்திகள் :

‘உழவரைத் தேடி வேளாண்மைத் துறை’ திட்டம் தொடக்கம்

post image

‘உழவரைத் தேடி வேளாண்மைத் துறை’ எனும் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

வேளாண்மை நிதிநிலை அறிக்கையில், ‘உழவரைத் தேடி வேளாண்மைத் துறை’ எனும் திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டம் 17,116 கிராமங்களில் செயல்படுத்தப்படவுள்ளது. தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி வழியாக திருவாரூா் மாவட்டம் மாணிக்கமங்கலம் எனும் கிராமத்தில் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்.

இந்தத் திட்டம் மூலம், வேளாண் விரிவாக்க சேவைகள், அரசின் திட்டங்கள் ஆகியன விவசாயிகளின் கிராமத்திலேயே வழங்கப்படும். திட்டத்துக்கான முகாம்கள் 15 நாள்களுக்கு ஒருமுறை ஒவ்வொரு வட்டத்திலும் உள்ள இரண்டு கிராமங்களில் நடத்தப்படும். இதன் தொடா்ச்சியாக, தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு வட்டத்திலும் ஒவ்வொரு மாதமும் நான்கு கிராமங்கள் வீதம் மாதந்தோறும் 1,540 கிராமங்களில் முகாம்கள் நடத்தப்படவுள்ளன.

இந்த நிகழ்வில், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், வேளாண்மைத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், தலைமைச் செயலா் நா.முருகானந்தம், வேளாண்மைத் துறை செயலா் வ.தட்சிணாமூா்த்தி உள்பட பலா் பங்கேற்றனா்.

கரோனா பரவல்: முகக்கவசம் அணிய தமிழக பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தல்!

நாடு முழுவதும் மீண்டும் கரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் தொற்று பரவலைத் தடுக்க, பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிய தமிழக பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. தெற்காசிய நாடுகளைத் தொடர்ந்து இந்த... மேலும் பார்க்க

புதிய பயண அட்டை வரும்வரை அரசுப் பேருந்தில் மாணவா்கள் இலவசமாக பயணிக்கலாம்

புதிய பயண அட்டை கிடைக்கும் வரை அரசு பேருந்தில் மாணவர்கள் கட்டணமின்றி பயணிக்கலாம் என்று போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், முதல்வர... மேலும் பார்க்க

எடப்பாடி பழனிசாமியுடன் எல்.கே.சுதீஷ் சந்திப்பு

அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமியை தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ் சந்தித்து பேசினார். எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் நடந்த சந்திப்பில், மாநிலங்களவை சீட் தொடர்பாக ஆலோசனை எனத் தகவல் தெரியவந்துள்ளது.... மேலும் பார்க்க

பாமக அலுவலக முகவரியை மாற்றிய அன்புமணி

பாமக அலுவலகத்தை சென்னை தேனாம்பேட்டையில் இருந்து தி.நகருக்கு அன்புமணி மாற்றியுள்ளார். பாமகவினருக்கு வழங்கப்பட்ட உறுப்பினர் படிவத்தில் கட்சி அலுவலக புதிய முகவரி இடம் பெற்றுள்ளது. அதன்படி, படிவத்தில் தேன... மேலும் பார்க்க

தூத்துக்குடிக்கு ஜூன் 9ஆம் தேதி உள்ளூர் விடுமுறை

திருச்செந்தூர் முருகன் கோயில் வைகாசி விசாகத் திருவிழாவையொட்டி தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஜூன் 9ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலி... மேலும் பார்க்க

தங்க நகைக் கடன்களுக்கான பழைய நடைமுறையையே தொடர வேண்டும்- இபிஎஸ் வலியுறுத்தல்

தங்க நகைக் கடன்களுக்கான பழைய நடைமுறையையே ரிசர்வ் வங்கி தொடர வேண்டும் என அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், மத்திய நிதியமைச்சர் நிர... மேலும் பார்க்க