செய்திகள் :

ஆபரேஷன் சிந்தூர் மாணவியின் அவதூறு கமெண்ட்; `தேச நலனை எப்படி பாதித்தது?' - நீதிபதிகள் கேள்வி

post image

பூனேவில் உள்ள தனியார் கல்லூரி மாணவி ஒருவர் ஆபரேஷன் சிந்தூர் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அரசுக்கு எதிராகப் பதிவிட்டிருக்கிறார்.

அதனால், அவரை கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது. அத்துடன், போலீசாரும் அந்த மாணவியை கைது செய்து, சிறையில் அடைத்துள்ளனர். அந்த மாணவிக்கு தற்போது தேர்வு நடந்துகொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கு பாம்பே உயர் நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை நீதிபதிகள் கவுரி வி.கோட்சே மற்றும் சோமசேகர் சுந்தரேசன் விசாரித்தனர்.

சிறையில் பெண்
சிறையில் பெண்

அவர்கள் கல்லூரி நிர்வாகத்திடம், "என்ன இது? நீங்கள் ஒரு மாணவியின் வாழ்க்கையை அழிக்கிறீர்களா? என்ன நடவடிக்கை இது? ஒருவர் ஒன்று கூறுவதால் நீங்கள் அவர்கள் வாழ்க்கையை அழித்துவிடுவீர்களா? அந்த மாணவியை நீங்கள் எப்படி சஸ்பெண்ட் செய்யலாம்? நீங்கள் எதாவது விளக்கத்தை அவரிடம் இருந்து பெற்றீர்களா? அந்த மாணவி குற்றவாளி அல்ல.

கல்வி நிறுவனத்தின் நோக்கம் என்ன? பாடங்கள் மட்டும் தான் கற்று கொடுப்பீர்களா? நீங்கள் மாணவியை சீர்திருத்த வேண்டுமா அல்லது குற்றவாளி ஆக்க வேண்டுமா? நீங்கள் மாணவியை தேர்வு எழுதுவதில் இருந்து நிறுத்தக்கூடாது. அவர் மீதமுள்ள மூன்று தேர்வுகளையும் எழுதி முடிக்கட்டும். அவரை தேர்வு எழுதுவதில் இருந்து நிறுத்தவும் கூடாது. போலீசார் கூட வர வேண்டும் என்று கூறவும் கூடாது" என்று கூறினார்கள்.

நீதிமன்றம்
நீதிமன்றம்

'தேச நலனுக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்று கல்லூரி நிர்வாகம் வாதாடியது. அதற்கு நீதிபதிகள், "எது தேச நலன்? இந்த வயதில் தான் தவறு செய்வதும், திருத்தி கொள்வதும் நடக்கும் வயது. ஏற்கெனவே மாணவி போதுமான விளைவுகளை சந்தித்துவிட்டார். மாணவியில் கமென்ட் எப்படி தேச நலனை பாதிக்கும்? அவரை குற்றவாளியை போல நடத்துகிறீர்கள். அவர் தான் செய்தது தவறு என்று கூறி, அந்தப் பதிவையும் நீக்கிவிட்டார். அவரை நீங்கள் சீர்திருத்த வேண்டும். அவருக்கு உதவ வேண்டுமா அல்லது அவரை குற்றவாளி ஆக்க வேண்டுமா?" என்று கேள்வி எழுப்பினர்.

பின்னர், மாணவியை சிறையில் இருந்து விடுவித்தது நீதிமன்றம்.

பாகிஸ்தானுக்கு உதவும் சீனா; இந்தியா தயாரிக்கும் Stealth Fighter Jet - சிறப்பம்சம் என்ன?

ஸ்டெல்த் ஃபைட்டர் ஜெட்டுகளை சீனா பாகிஸ்தானிற்கு கூடிய விரைவில் டெலிவரி செய்ய உள்ளது. இந்த நிலையில், இந்திய தனது சொந்த தயாரிப்பிலேயே ஸ்டெல்த் (Stealth Fighter Jet) ஃபைட்டர் ஜெட்டுகளை உருவாக்க உள்ளது. இ... மேலும் பார்க்க

`Jayakumar-Semmalai' நெருக்கடியில் EPS, Ramados-ஐ ஓரங்கட்டும் Anbumani?! | Elangovan Explains

தமிழ்நாட்டில் ஆறு ராஜ்யசபா சீட் காலியாக போகிறது. இதைக் குறி வைத்து திமுக - அதிமுகவுக்குள் போட்டா போட்டி நிலவுகிறது. 'கமலுக்கா... வைகோவுக்கா..?' என பெரிய யுத்தமே திமுக கூட்டணியில் நடக்கிறது. இன்னொரு பக... மேலும் பார்க்க

உ.பி: ``குப்பைகளை தங்கமாக மாற்றும் இயந்திரம்..'' - பாஜக அமைச்சர் அறிவித்த திட்டமும், விளக்கமும்!

"உங்கள் குப்பைகளை தங்கமாக மாற்றும் இயந்திரம் வருகிறது" - இது அம்புலி மாமா கதையின் ஒரு வரி அல்ல, மீரட்டில் இதைத் திட்டமாக தொடங்கப்படவிருப்பதாக அறிவித்தார் உத்தரபிரதேச பாஜக அமைச்சர் தரம்பால் சிங். ஆனால்... மேலும் பார்க்க

Jaishankar: வெளியுறவுக் கொள்கையில் அமைச்சர் FAIL? | Manipur Stalin DMK | Imperfect Show 27.5.2025

*.தீவிரவாத முகாம்களை அழித்த பின்னர்தான் பாகிஸ்தானுக்குத் தகவல்? - ஜெய்சங்கர்* அமெரிக்கா செல்கிறார் வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி? * பாகிஸ்தான் உளவுத்துறையுடன் தொடர்பு இருப்பதாக சிஆர்பிஎஃப் ... மேலும் பார்க்க

`பாகிஸ்தான் - சீனா உறவு எப்படி உள்ளது?' - வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பதில்!

ஜெர்மன் பத்திரிகைக்கு கொடுத்துள்ள பேட்டி ஒன்றில், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பாகிஸ்தான் - சீனா உறவு குறித்து பேசியுள்ளார். "உங்களுக்கே தெரியும், இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்த தாக்க... மேலும் பார்க்க

``திமுகவை வீட்டுக்கு அனுப்புவதே எங்கள் நோக்கம்; அதனால் விஜய்யும் எங்களோடு..'' - கடம்பூர் ராஜூ

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து புதிதாக கட்டப்பட்ட சமுதாய நலக்கூடம் மற்றும் கலையரங்கத்தை திறந்து வைத்தார் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ.பி... மேலும் பார்க்க