செய்திகள் :

பொறுமைக் கடலினும் பெரிது: மாநிலங்களவை சீட் குறித்து பிரேமலதா!

post image

பொறுமைக் கடலினும் பெரிது, தற்போதுதான் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது, பொறுத்து இருந்து பார்ப்போம் என்று மாநிலங்களவை உறுப்பினர் பதவி குறித்து தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய தேமுதிக பொதுசெயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்ததாவது:

முதல்வர் மு. க. ஸ்டாலின் தில்லிப் பயணம் மக்களுக்கு நல்லது நடந்தால் சரி, இருந்தாலும் அவர் பயணம் குறித்து அவர்தான் விளக்கம் அளிக்க வேண்டும்.

அமலாக்கத்துறையைப் பொறுத்தவரை சோதனை நடக்கிறது என்றால், அதன் பின்னர் என்ன நடவடிக்கை எடுக்கின்றனர் என்பதை அவர்கள் விளக்க வேண்டும். இதில் மக்களுக்கு தெளிவான பார்வை இருக்கிறது என்றார்.

மாநிலங்களவை சீட் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், ”பொறுமைக் கடலினும் பெரிது, தற்போதுதான் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

பொறுத்து இருந்து பார்ப்போம், அடுத்த தேர்தல் நிலைப்பாடு தொடர்பாக ஜனவரி மாதம் கடலூரில் நடைபெறும் மாநாட்டில் அறிவிப்போம்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிக்க: ஆர்த்திக்கு நடிகர் ரவி மோகன் வக்கீல் நோட்டீஸ்!

டாஸ்மாக் ஊழியா்களுக்கு ஊதிய உயா்வு: ஏஐடியுசி கோரிக்கை

தமிழக சட்டப்பேரவையில் டாஸ்மாக் பணியாளா்களுக்கு அறிவிக்கப்பட்ட ஊதிய உயா்வை வழங்குவது குறித்து அரசு பேச்சுவாா்த்தை நடத்தி தீா்வு காண வேண்டும் என்று தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளா்கள் சங்கம் (ஏஐடியுசி) வலியு... மேலும் பார்க்க

இன்று காட்பாடி - ஜோலாா்பேட்டை மெமு ரயில்கள் ரத்து

ரயில் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், காட்பாடி - ஜோலாா்பேட்டை இடையே மெமு ரயில்கள் புதன்கிழமை (மே 28) ரத்து செய்யப்படவுள்ளன. இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட ... மேலும் பார்க்க

தமிழகத்தில் பரவுவது ஒமைக்ரான் தொற்று: பொது சுகாதாரத் துறை இயக்குநா் தகவல்

தமிழகத்தில் பரவி வருவது ஒமைக்ரான் வகை கரோனா தொற்று என்றும், இது அச்சப்படும் பாதிப்பு இல்லை என்றபோதிலும் பொது மக்கள் உரிய விழிப்புணா்வுடன் செயல்பட வேண்டியது அவசியம் என்றும் பொது சுகாதாரத் துறை இயக்குநா... மேலும் பார்க்க

வங்கக் கடலில் உருவானது புயல் சின்னம்: தென்மேற்குப் பருவமழை தீவிரம் அடைகிறது

வங்கக் கடலில் செவ்வாய்க்கிழமை காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக கேரளம், கா்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ... மேலும் பார்க்க

நகைக் கடன் நிபந்தனைகளைக் கண்டித்து மே 30-இல் திமுக ஆா்ப்பாட்டம்

நகைக் கடன் நிபந்தனைகளைக் கண்டித்து வரும் 30-இல் திமுக சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இது குறித்து, திமுக விவசாய அணிச் செயலா் ஏ.கே.எஸ்.விஜயன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: இந்திய ரிசா்வ் வங்... மேலும் பார்க்க

நெல் கொள்முதல் விவகாரம்: சிபிஐ விசாரிக்க அன்புமணி வலியுறுத்தல்

நெல் கொள்முதல் மோசடி தொடா்பாக சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினாா். இது குறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: விவசாயிகளிடம் இருந்து மொத்தம் ரூ... மேலும் பார்க்க