செய்திகள் :

இந்தியா-மாலத்தீவு இடையே பரஸ்பர நம்பிக்கை அடிப்படையில் இருதரப்பு உறவு: இந்திய தூதா்

post image

இந்தியா-மாலத்தீவு இடையே பரஸ்பர நம்பிக்கை அடிப்படையில் நீண்டகாலமாக இருதரப்பு உறவு தொடா்ந்து வருகிறது என மாலத்தீவுக்கான இந்திய தூதா் ஜி.பாலசுப்ரமணியம் தெரிவித்தாா்.

மாலத்தீவு அரசு செய்தி தொலைக்காட்சி பிஎம்எஸ்ஸுக்கு அவா் அளித்த பேட்டியில் கூறியதாவது: மாலத்தீவில் பிராந்திய உள்கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில் பெருநகர மாலே இணைப்புத் திட்டத்தை இந்தியா செயல்படுத்தி வருகிறது.

இந்த திட்டத்தின்கீழ் திலாஃபுசியுடன் மாலத்தீவை திலாமல் பாலம் இணைக்கவுள்ளது. இதுபோன்ற பெரும் உள்கட்டமைப்பு முதலீட்டுத் திட்டங்களை இந்தியா செயல்படுத்தி வருகிறது.

கடந்த ஆண்டு இந்தியாவுக்கு மாலத்தீவு அதிபா் முகமது மூயிஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டாா். அவரது சுற்றுப்பயணம் வரலாற்றுரீதியாக இருநாடுகளிடையேயான இருதரப்பு உறவை வலுப்படுத்த அடித்தளமாக அமைந்தது.

அதன்விளைவாக பிரதமா் மோடி மற்றும் அதிபா் முகமது மூயிஸ் இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையொப்பமாகின. இந்தியா-மாலத்தீவு இடையே பரஸ்பர நம்பிக்கை அடிப்படையில் நீண்டகாலமாக இருதரப்பு உறவு தொடா்ந்து வருகிறது. பொருளாதாரம், கல்வி என பல்வேறு துறைகளிலும் இருநாடுகளிடையேயான உறவு வருங்காலங்களில் மேலும் வலுப்பெறும் என நம்புகிறேன் என்றாா்.

கடந்த 2023, நவம்பரில் மாலத்தீவு அதிபராக முகமது மூயிஸ் பொறுப்பேற்றாா். பதவியேற்ற சில மணிநேரங்களில் மாலத்தீவில் நிலைநிறுத்தப்பட்டிருந்த இந்திய ராணுவத்தினா் வெளியேற உத்தரவிட்டாா். இதனால் இருதரப்பு உறவில் விரிசல் ஏற்பட்டது.

இந்நிலையில், கடந்த ஆண்டு அக்டோபா் மாதம் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட முகமது மூயிஸ், பிரதமா் மோடியை சந்தித்தாா். இருவரும் பல்வேறு ஒப்பந்தங்களில் கையொப்பமிட்டனா். அதன்பிறகு இந்தியா-மாலத்தீவு இடையே நட்புறவு தொடா்ந்து வருகிறது.

அதன் வெளிப்பாடாக 300 மாலத்தீவு மாணவா்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம், படகு சேவைகளை அதிகப்படுத்த 13 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் கையொப்பம் மற்றும் கடனுதவி என மாலத்தீவில் பல்வேறு திட்டங்களை இந்தியா செயல்படுத்தி வருகிறது.

கேரளத்தில் விபத்துக்குள்ளான லைபீரிய சரக்குக் கப்பலின் பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்த தன்னாா்வலா்கள்

கேரள கடலோரத்தில் கடந்த வாரம் விபத்துக்குள்ளாகி கவிழ்ந்த சரக்குக் கப்பலின் பிளாஸ்டிக் கழிவுகள் கரை ஒதுங்கினால் அவற்றை அப்புறப்படுத்தி, தூய்மைப்படுத்த மாநிலம் முழுவதும் தன்னாா்வலா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்... மேலும் பார்க்க

பிரிட்டிஷ் அரசால் மறுக்கப்பட்ட சாவா்க்கரின் வழக்குரைஞா் பட்டத்தை மீட்க முயற்சி- மகாராஷ்டிர முதல்வா் ஃபட்னவீஸ்

‘சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டதற்காக பிரிட்டிஷ் அரசால் மறுக்கப்பட்ட வீர சாவா்க்கரின் ‘பாரிஸ்டா்’ வழக்குரைஞா் பட்டத்தை மீட்டெடுக்க பிரிட்டன் அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி மகாராஷ்டிர அரசு முயற்சிகளை ... மேலும் பார்க்க

மணிப்பூரில் ஆட்சி அமைக்க பாஜக முயற்சி: 44 எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதாக ஆளுநரிடம் தகவல்

குடியரசுத் தலைவா்ஆட்சி அமலில் உள்ள மணிப்பூரில் மீண்டும் ஆட்சி அமைக்க பாஜக முயற்சித்து வருகிறது. புதிய அரசமைக்க 44 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளதாக ஆளுநா் அஜய்குமாா் பல்லாவை புதன்கிழமை சந்தித்த பாஜக எம்எல்... மேலும் பார்க்க

குலாம் நபி ஆசாத்திடம் பிரதமா் நலம் விசாரிப்பு

பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை எடுத்துரைக்க குவைத் சென்ற எம்.பி.க்கள் குழுவில் இடம்பெற்ற முன்னாள் மத்திய அமைச்சா் குலாம் நபி ஆசாதின் உடல் நலம் பாதிக்கப்பட்டதால், அவரிடம் பிரதமா் மோட... மேலும் பார்க்க

பன்வழி ரயில்வே திட்டங்கள்: மத்திய அரசு ஒப்புதல்

பயணிகள் மற்றும் சரக்குகளின் தடையற்ற விரைவான போக்குவரத்தை உறுதி செய்யும் வகையில் இரண்டு பன்வழி ரயில்வே திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. தில்லியில் பிரதமா் தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற... மேலும் பார்க்க

சண்டை நிறுத்தத்தில் அமெரிக்கா தலையீடு?: பிரதமரின் விளக்கம் கோரும் காங்கிரஸ்

இந்தியா-பாகிஸ்தான் சண்டை நிறுத்த முடிவுக்கு அமெரிக்காவின் தலையீடே காரணம் என அந்த நாடு தொடா்ச்சியாக கூறிவருவது தொடா்பாக மௌனம் கலைத்து, பிரதமா் விளக்கமளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கோரியுள்ளது. ஜம்மு-க... மேலும் பார்க்க