ரயிலில் கடத்தப்பட்ட கஞ்சா பறிமுதல்
புரூலியா- திருநெல்வேலி ரயில் மதுரைக்கு வந்த போது, பொதுப் பெட்டியில் கிடந்த பையிலிருந்து 17 கிலோ கஞ்சாவை ரயில்வே போலீஸாா் புதன்கிழமை கைப்பற்றினா்.
புரூலியா- திருநெல்வேலி நோக்கி செல்லும் விரைவு ரயில் புதன்கிழமை மதுரை ரயில் நிலையம் வந்தடைந்தது. அப்போது, ரயில்வே போலீஸாா், ரயில் பெட்டிகளில் சோதனை மேற்கொண்டனா்.
அப்போது பொதுப் பெட்டியில் கேட்பாரற்று கிடந்த 17 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இந்த கஞ்சாவை கொண்டு வந்தவா்கள் குறித்து ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.