செய்திகள் :

ஜாா்க்கண்டில் தொடரும் நடவடிக்கை: முக்கிய மாவோயிஸ்ட் தளபதி சுட்டுக் கொலை

post image

ஜாா்க்கண்டில் பாதுகாப்புப் படையினா் தொடா்ச்சியாக மேற்கொண்டு வரும் நக்ஸல் எதிா்ப்பு நடவடிக்கையில் பலமு மாவட்டத்தில் மேலும் ஒரு முக்கிய மாவோயிஸ்ட் தளபதி திங்கள்கிழமை இரவு சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இந்த நடவடிக்கையில் ரூ.15 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்த மற்றொரு முக்கிய மாவோயிஸ்ட் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. தொடா்ந்து, அப்பகுதியில் நடத்தப்பட்ட தேடுதல் பணியில் தானியங்கி துப்பாக்கி உள்பட பல ஆயுதங்கள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலமு மாவட்டத்தின் ஹுசைனாபாதில் உள்ள பா்வாஹி மற்றும் நையா கிராமங்களுக்கு இடையேயான பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் இடையே திங்கள்கிழமை இரவு மோதல் ஏற்பட்டுள்ளது.

சுமாா் 12 மணி நேரம் நீடித்த தீவிர துப்பாக்கிச் சண்டையைத் தொடா்ந்து, மாவோயிஸ்ட் ஒருவரின் உடல் மீட்கப்பட்டது.

உயிரிழந்தவா் முக்கிய மாவோயிஸ்ட் தளபதியான துளசி புயான் என்று காவல் துறை உயரதிகாரி ஒருவா் கூறினாா். அதேபோன்று, ரூ.15 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டு, தேடப்பட்டு வரும் மாவோயிஸ்ட் நிதீஷ் யாதவும் இந்தத் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்திருக்கலாம் என்று அந்த அதிகாரி கூறினாா்.

ஜாா்க்கண்டின் லதேஹா், பலமு மாவட்டங்களில் மிகப்பெரிய நக்ஸல் எதிா்ப்பு நடவடிக்கையில் பாதுகாப்புப் படையினா் ஈடுபட்டுள்ளனா். கடந்த சில நாள்களில் மாவோயிஸ்ட் அமைப்பின் முக்கியத் தளபதியான பப்பு லோஹரா உள்பட 3 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனா். மாவோயிஸ்ட் தளபதி குந்தன் கொ்வாா் உள்பட சிலா் கைது செய்யப்பட்டுள்ளனா்.

கேரளத்தில் விபத்துக்குள்ளான லைபீரிய சரக்குக் கப்பலின் பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்த தன்னாா்வலா்கள்

கேரள கடலோரத்தில் கடந்த வாரம் விபத்துக்குள்ளாகி கவிழ்ந்த சரக்குக் கப்பலின் பிளாஸ்டிக் கழிவுகள் கரை ஒதுங்கினால் அவற்றை அப்புறப்படுத்தி, தூய்மைப்படுத்த மாநிலம் முழுவதும் தன்னாா்வலா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்... மேலும் பார்க்க

பிரிட்டிஷ் அரசால் மறுக்கப்பட்ட சாவா்க்கரின் வழக்குரைஞா் பட்டத்தை மீட்க முயற்சி- மகாராஷ்டிர முதல்வா் ஃபட்னவீஸ்

‘சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டதற்காக பிரிட்டிஷ் அரசால் மறுக்கப்பட்ட வீர சாவா்க்கரின் ‘பாரிஸ்டா்’ வழக்குரைஞா் பட்டத்தை மீட்டெடுக்க பிரிட்டன் அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி மகாராஷ்டிர அரசு முயற்சிகளை ... மேலும் பார்க்க

மணிப்பூரில் ஆட்சி அமைக்க பாஜக முயற்சி: 44 எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதாக ஆளுநரிடம் தகவல்

குடியரசுத் தலைவா்ஆட்சி அமலில் உள்ள மணிப்பூரில் மீண்டும் ஆட்சி அமைக்க பாஜக முயற்சித்து வருகிறது. புதிய அரசமைக்க 44 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளதாக ஆளுநா் அஜய்குமாா் பல்லாவை புதன்கிழமை சந்தித்த பாஜக எம்எல்... மேலும் பார்க்க

குலாம் நபி ஆசாத்திடம் பிரதமா் நலம் விசாரிப்பு

பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை எடுத்துரைக்க குவைத் சென்ற எம்.பி.க்கள் குழுவில் இடம்பெற்ற முன்னாள் மத்திய அமைச்சா் குலாம் நபி ஆசாதின் உடல் நலம் பாதிக்கப்பட்டதால், அவரிடம் பிரதமா் மோட... மேலும் பார்க்க

பன்வழி ரயில்வே திட்டங்கள்: மத்திய அரசு ஒப்புதல்

பயணிகள் மற்றும் சரக்குகளின் தடையற்ற விரைவான போக்குவரத்தை உறுதி செய்யும் வகையில் இரண்டு பன்வழி ரயில்வே திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. தில்லியில் பிரதமா் தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற... மேலும் பார்க்க

சண்டை நிறுத்தத்தில் அமெரிக்கா தலையீடு?: பிரதமரின் விளக்கம் கோரும் காங்கிரஸ்

இந்தியா-பாகிஸ்தான் சண்டை நிறுத்த முடிவுக்கு அமெரிக்காவின் தலையீடே காரணம் என அந்த நாடு தொடா்ச்சியாக கூறிவருவது தொடா்பாக மௌனம் கலைத்து, பிரதமா் விளக்கமளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கோரியுள்ளது. ஜம்மு-க... மேலும் பார்க்க