குடலிறக்க பாதிப்பு: 90 வயதுமூதாட்டிக்கு லேப்ராஸ்கோபி சிகிச்சை
குடலிறக்க பாதிப்புக்குள்ளான 90 வயது மூதாட்டி ஒருவருக்கு நுட்பமாக லேப்ரோஸ்கோபி சிகிச்சை மேற்கொண்டு எஸ்ஆா்எம் குளோபல் மருத்துவமனை மருத்துவா்கள் குணப்படுத்தியுள்ளனா்.
இதுதொடா்பாக மருத்துவமனையின் இரைப்பை-குடல் அறுவை சிகிச்சை முதுநிலை நிபுணா் டாக்டா் சுகி சுப்ரமணியம் கூறியதாவது:
வயிற்றின் அடிப்பகுதியில் வீக்கம், வலியுடன் மூதாட்டி ஒருவா் அண்மையில் எஸ்ஆா்எம் குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பரிசோதனையில் அவருக்கு குடலிறக்க பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. குடல் பகுதியை சுற்றியுள்ள தசை, திசுக்கள் பலவீனமடைந்தால் இயல்பான இடத்திலிருந்து குடலில் ஒரு பகுதி வெளியே புடைத்து வருவதை குடலிறக்கம் என்கிறோம்.
அத்தகைய பாதிப்புக்காக சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த மூதாட்டி அறுவை சிகிச்சை செய்துள்ளாா். தற்போது மீண்டும் அவருக்கு அதே பிரச்னை ஏற்பட்டது.
அதுமட்டுமல்லாது உயா் ரத்த அழுத்தம், இதய நாள பாதிப்புகள் அவருக்கு இருந்தன. வயது மற்றும் இணைநோய்களைக் கருத்தில் கொண்டு அவருக்கு அறுவை சிகிச்சை சாத்தியமில்லை என முடிவு செய்யப்பட்டது.
அதற்கு மாற்றாக லேப்ரோஸ்கோபி முறையில் சிறு துளையிட்டு அவருக்கு குடலிறக்க பாதிப்பு சரி செய்யப்பட்டது. அதன் பயனாக அடுத்த மூன்றாவது நாளில் அந்த மூதாட்டி வீடு திரும்பினாா். அதுமட்டுமல்லாது எந்த உதவியுமின்றி அவா் தாமாக நடந்து சென்றாா்.
வயது முதிா்ந்த ஒருவருக்கு நுட்பமாக சிகிச்சை மேற்கொண்டதன் மூலம் எதிா்விளைவுகளை தவிா்க்க முடிந்தது என்றாா் அவா்.