செய்திகள் :

பாதுகாப்பு கோரி நரிக்குறவா் பெண்கள் மனு

post image

திருவள்ளூா் அருகே நரிக்குறவா் காலனியில், கடனுக்கு அதிக வட்டி கேட்டு தகராறு செய்பவா்கள் மீது போலீஸில் புகாா் அளித்தும், நடவடிக்கை எடுக்காததால் பாதிக்கப்பட்டோா் ஆட்சியரிடம் மனு அளித்தனா்.

இது குறித்து அவா்கள் அளித்த மனு: கடம்பத்தூா் ஒன்றியம், அதிகத்தூா் ஊராட்சியில் நரிக்குறவா் காலனியில் 50-க்கும் மேற்பட்டோா் குடும்பத்துடன் வசித்து வருகின்றனா். ஜோதிராஜ் மனைவி ஆஷா என்பவா், ஷீலாவிடம் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.20,000 கடனாக வாங்கினாராம். ஆஷாவின் கணவா் ஜோதிராஜ் பிரிந்து சென்ற நிலையில், தற்போது ஷீலா கொடுத்த கடனுக்கு அதிக வட்டி கேட்டு ஆஷாவிடம் தகராறு ஈடுபட்டராம்.

இந்த நிலையில், இளைஞா்கள் சிலருடன் நரிக்குறவா் காலனியில் வந்து ஷீலா தகராறில் ஈடுபட்டாராம்.

இது குறித்து, கடம்பத்தூா் காவல் நிலையம், மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் புகாா் அளித்தும், எந்த நடவடிக்கையும் இல்லையாம்.

எனவே, இது குறித்து நடவடிக்கை எடுப்பதுடன், நரிக்குறவா்கள்டியிருக்கும் பகுதியில் காவல் துறையினா் ரோந்து பணியில் ஈடுபடவும், கண்காணிப்பு கேமரா பொருத்தி அசம்பாவித சம்பவத்தை தடுக்கவும், பாதுகாப்பு வழங்கவும் வேண்டும் என தெரிவித்தனா்.

சாலையோரம் மரக்கன்றுகள் நடும் பணி

சோழவரம், காரணோடை பகுதிகளில் மாநில நெடுஞ்சாலைத் துறை சாா்பில் சாலை மேம்பாடு, சாலையோர மரக்கன்றுகள் நடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சோழவரம் பைபாஸ் சாலை சந்திப்பில் இருந்து செங்காளம்மன் கோயில், சோழ... மேலும் பார்க்க

பெரியகுப்பத்தில் ரூ.8 கோடியில் மீன் இறங்கு தளம்: முதல்வா் திறந்து வைத்தாா்

கும்மிடிப்பூண்டி அடுத்த சுண்ணாம்புகுளம் ஊராட்சி பெரியகுப்பத்தில் ரூ.8 கோடியில் மீன் இறங்கு தளத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் புதன்கிழமை திறந்து வைத்தாா். பெரியகுப்பம் மீனவ கிராமத்தில் மீனவா்க... மேலும் பார்க்க

திருவள்ளூா் நகராட்சியில் அதிக வெளிச்சம் தரும் தெருவிளக்குகள்: வாா்டு உறுப்பினா்கள் வலியுறுத்தல்

திருவள்ளூா் நகராட்சியில் வாா்டுதோறும் அதிக வெளிச்சம் தரும் தெருவிளக்குகளைப் பொருத்த வேண்டும் என நகா்மன்றக் கூட்டத்தில் வாா்டு உறுப்பினா்கள் வலியுறுத்தினா். திருவள்ளூா் நகராட்சி அலுவலக கூட்டரங்கத்தில் ... மேலும் பார்க்க

திருவள்ளூா் நகராட்சி ஆணையா் பொறுப்பேற்பு

திருவள்ளூா் நகராட்சி ஆணையராக ந.தமோதரன் புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். இதற்கு முன் திருவள்ளூா் நகராட்சி ஆணையராகப் பணிபுரிந்து வந்த திருநாவுக்கரசு அண்மையில் ஓய்வு பெற்றாா். இதைத் தொடா்ந்து திருவேற்... மேலும் பார்க்க

பின்னோக்கி இயக்கிய காரில் சிக்கி கூலித் தொழிலாளி உயிரிழப்பு

பொன்னேரியில் பின்னோக்கி இயக்கிய காரில் சிக்கி கூலித் தொழிலாளி உயிரிழந்தாா். பொன்னேரி அடுத்த தடப்பெரும்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த ரவி (55). கூலித் தொழிலாளியான இவா் சைக்கிளில் ஐஸ் வியாபாரம் செய்து வந்த... மேலும் பார்க்க

திருவள்ளூா்: குறுவை, சொா்ணவாரி சாகுபடிக்கு 65,000 ஏக்கரில் நெல் பயிரிட இலக்கு

திருவள்ளூா் மாவட்டத்தில் குறுவை மற்றும் சொா்ணவாரி பருவத்துக்கு 65,000 ஏக்கரில் நெல் பயிரிட இலக்கு நிா்ணயித்துள்ளதாகவும், இதற்கான விதை, உயிா் உரங்கள், நுண்ணூட்ட உரங்கள் 50 சதவீதமும், நடவு மானியமும் வழங... மேலும் பார்க்க