செய்திகள் :

`என்ன லவ் பண்ண மாட்டியா..' - வீடு புகுந்து பள்ளி மாணவியை குத்திக் கொன்ற இளைஞன்; நடந்தது என்ன?

post image

ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அருகிலுள்ள புலிவலம் கிராமத்தைச் சேர்ந்த கார்பென்டர் ஜெகத்குமார். இவரின் மனைவி பிரியா. இவர்களுக்கு கார்த்திகேயன், ஜனனி என்று 2 பிள்ளைகள்.

இந்த நிலையில், கணவனுடன் ஏற்பட்ட கருத்து முரணால் பிள்ளைகளையும் பிரிந்து பிரியா சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், புலிவலம் சந்தைமேடு பகுதியில் புதிதாக வீடு கட்டி பிள்ளைகளுடன் வசித்துவந்தார் கார்பென்டர் ஜெகத்குமார்.

கே.ஜி.கண்டிகை பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்புப் படித்துவந்த பிரியா (வயது 15), நடப்பு கல்வியாண்டில் பதினோராம் வகுப்பு செல்லவிருந்தார். விடுமுறையையொட்டி, ஜெகத்குமாரின் அக்காள் மகள்கள் லக்‌ஷயா, சரண்யா ஆகியோரும் சென்னையில் இருந்து புலிவலம் கிராமத்துக்கு வந்திருந்தனர்.

நேற்று (28-5-2025) காலை ஜெகத்குமார் வழக்கம்போல வேலைக்கு சென்றுவிட்டார். வீட்டில் மாணவி ஜனனியுடன் ஊரில் இருந்து வந்திருந்த அவரின் அத்தை மகள்களும் இருந்தனர். மாலை நேரமானது.

ஜெகத்குமார் வீடு திரும்புவதற்கு முன்பாக திடீரென ஒரு இளைஞன் அவரின் வீட்டுக்குள் புகுந்தான். அப்போது, மாணவி ஜனனியும், அவரின் அத்தை மகள் லக்‌ஷயாவும் ஹாலில் அமர்ந்து டிவி பார்த்துகொண்டிருந்தனர். இளைஞனை கண்டதும் இருவரும் அதிர்ச்சியில் பதறிப்போய் கூச்சல் போட்டனர்.

வெறிகொண்ட இளைஞன், லக்‌ஷயாவை கத்தியால் குத்தி தாக்கி வீட்டுக்கு வெளியே தள்ளிவிட்டு, மாணவி ஜனனியை மட்டும் வீட்டுக்குள் வைத்து உள்புறமாக கதவை பூட்டிக்கொண்டான்.

`என்ன லவ் பண்ண மாட்டியா... எத்தனை முறை உன் பின்னாடி வந்து கெஞ்சுறது...’ என்று திரும்பத் திரும்ப சொல்லி, மாணவி ஜனனியை கத்தியால் சரமாரியாக குத்தியதாகவும் சொல்லப்படுகிறது.

வெளியே தள்ளப்பட்ட லக்‌ஷயாவின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் திரண்டுவந்தனர். வீட்டுக்குள் இருந்தும் அலறல் சத்தம் கேட்டதையடுத்து, இரும்பு ராடால் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது, மாணவி ஜனனி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்துகிடந்ததை பார்த்து அதிர்ந்துபோயினர்.

ரத்தக்கறைப் படிந்த கத்தியுடன் மாணவியின் சடலம் அருகே நின்றிருந்த இளைஞனை பிடித்து வீட்டுக்கு வெளியே இழுத்துவந்து பொதுமக்கள் தாக்கினர்.

இது குறித்து தகவல் தெரியவந்ததும், கொண்டப்பாளையம் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். மாணவி ஜனனியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், பொதுமக்களின் பிடியில் இருந்த இளைஞனையும் மீட்டு கைது செய்தனர்.

இளைஞன் சுப்பிரமணி

விசாரணையில் அந்த கொடூரன், திருவள்ளூர் மாவட்டம் கே.ஜி.கண்டிகைப் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி (வயது 21) எனத் தெரியவந்தது.

கே.ஜி.கண்டிகை பகுதியிலுள்ள தனியார் பள்ளிக்கு மாணவி ஜனனி தினமும் சென்றுவந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி பின்தொடர்ந்து சென்று லவ் டார்ச்சர் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

பள்ளி விடுமுறை என்பதால், மாணவியை தேடிவந்து இந்த கொடூரத்தில் அவன் ஈடுபட்டிருப்பதும் முதற்கட்டமாகத் தெரியவந்திருக்கிறது. ஆனாலும், இந்த படுகொலைக்கு வேறு ஏதேனும் காரணங்கள் இருக்கின்றனவா? என்ற கோணத்திலும் போலீஸார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். இந்தச் சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.

மண்ணில் புதைக்கப்பட்ட ஏலக்காய் மூடைகள்; இலங்கைக்கு கடத்த முயன்ற தந்தை - மகனுக்கு போலீஸ் வலை!

கடந்த சில ஆண்டுகளாக தமிழக கடலோர பகுதிகளில் இருந்து போதைப்பொருள்கள், கஞ்சா, கடல் அட்டை போன்றவை இலங்கைக்கு கள்ளத்தனமாக கடத்தப்பட்டு வருகின்றன. இவற்றுடன் தற்போது சமையலுக்குப் பயன்படுத்தும் விராலி மஞ்சள்,... மேலும் பார்க்க

தூத்துக்குடி: நிலத்தைக் கேட்டு பெண்ணிற்குக் கொலை மிரட்டல்; திமுக எம்எல்ஏ-வின் சகோதரர் கைது

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியின் தி.மு.க எம்.எல்.ஏ., சண்முகையா. இவரது உடன்பிறந்த சகோதரர் அயிரவன்பட்டி முருகேசன்.தொழிலதிபரான இவர் முன்னாள் அ.தி.மு.க பிரமுகர். முருகேசன் ஓட்டப்... மேலும் பார்க்க

`தொழிலதிபரிடம் லஞ்சம்' - அமலாக்கத்துறை அதிகாரியை கைது செய்த சிபிஐ; சிக்கியது எப்படி?

ஒடிசா மாநிலத்தின் புவனேஸ்வர் அமலாக்கத் துறையின் இணை இயக்குநர் சிந்தன் ரகுவம்சி. இவர் தொழிலதிபர் ஒருவரிடம் லஞ்சம் வாங்க முயன்றபோது சிபிஐ-யால் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக வெளியான செய்தியில், சுரங்... மேலும் பார்க்க

புதுச்சேரி: பெண்ணை நிர்வாணமாக்கி தாக்கிய போலீஸ் - தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு பறந்த புகார்

புதுச்சேரி புதுக்குப்பம் மீனவ கிராமத்தில் அமைந்திருக்கிறது `லே பாண்டி’ (Le Pondy) நட்சத்திர விடுதி. சில தினங்களுக்கு முன்பு இங்கு தங்கிச் சென்ற கேரளாவைச் சேர்ந்த ஒரு தம்பதி, தங்களுடைய அறையில் வைத்திரு... மேலும் பார்க்க

Kerala: பழங்குடி இளைஞரின் ஆடைகளை கழற்றி கட்டிவைத்து தாக்கிய கொடூர சம்பவம்.. நடந்தது என்ன?

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடியில் பழங்குடியின இளைஞர் சிஜூ (20) என்பவரின் ஆடைகளை கழற்றி மின்கம்பத்தில் கட்டிவைத்து தாக்கியதாக புகார் எழுந்தது. கடந்த 24-ம் தேதி நடந்த இந்த சம்பவத்தின் வீடிய... மேலும் பார்க்க

வட்டிக்குக் கடன்... பத்திரத்தில் கையெழுத்து போடாத மீனவர் கத்தியால் குத்திக் கொலை - குமரி ஷாக்

கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் அலங்காரமாதா தெருவைச் சேர்ந்தவர் ரூபன் கிங்சிலி(36). இவர் கடலில் மீன்பிடித் தொழில் செய்து வந்தார். ரூபன் கிங்சிலி அந்தோணியார் தெருவை சேர்ந்த ஜாண்குமார்(36) என்பவரிடம் பல த... மேலும் பார்க்க