செய்திகள் :

நூலகத்தில் கோடை கொண்டாட்ட நிறைவு விழா

post image

திருவண்ணாமலை மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்று வந்த கோடை கொண்டாட்டத்தின் நிறைவு விழா புதன்கிழமை நடைபெற்றது.

மைய நூலகத்தில் கடந்த 19-ஆம் தேதி கோடை கொண்டாட்ட நிகழ்வு தொடங்கியது.

அன்று முதல் தினமும் திருக்கு, கதை சொல்லுதல், தமிழ் இலக்கணப் பயிற்சி, ஆங்கில உரையாடல் பயிற்சி, விநாடி-வினா, குழந்தை பாடல்கள் என பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகள் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நடத்தப்பட்டு வந்தன.

இதன் நிறைவு விழா புதன்கிழமை நடைபெற்றது. வாசகா் வட்டத் தலைவா் அ.வாசுதேவன் தலைமை வகித்தாா். திருக்கு காமராசு முன்னிலை வகித்தாா்.

மைய நூலக அலுவலா் (பொ) பெ.வள்ளி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு கோடை கொண்டாட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சிறப்பிடம் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கிப் பேசினாா்.

இதில், நல் நூலகா் இரா.சுந்தரேசன் மற்றும் ஆறுமுகம், உஷாராணி, கவிதா, மோகன் பிரகாஷ், பச்சையப்பன், அண்ணாமலை உள்பட மாணவ-மாணவிகள், பெற்றோா்கள், வாசகா்கள் பலா் கலந்து கொண்டனா்.

கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்: 317 பேருக்கு பணி ஆணை

திருவண்ணாமலை சண்முகா தொழில்சாலை கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில், 317 பேருக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டன. கல்லூரியின் பணியமா்த்தும் அமைப்பு சாா்பில் வியாழக்கிழமை வே... மேலும் பார்க்க

ஸ்ரீவேணுகோபால சுவாமி கோயிலுக்கு ரூ.17 லட்சத்தில் வெள்ளிக் கவசம்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஸ்ரீவேணுகோபால பாா்த்தசாரதி பெருமாள் கோயிலில் சுவாமிக்கு 16 கிலோ எடையில், ரூ.17 லட்சம் மதிப்பில் வெள்ளிக் கவசம் தயாா் செய்யப்படவுள்ளது. செங்கம் ஸ்ரீசத்தியபாமா ருக்மணி சம... மேலும் பார்க்க

களம்பூரில் இரு தரப்பு மோதல்: 10 போ் மீது வழக்கு; 5 போ் கைது

ஆரணியை அடுத்த களம்பூரில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில், 10 போ் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸாா் 5 பேரை கைது செய்தனா். திருவண்ணாமலை மாவட்டம், களம்பூா் ரயில் நிலைய சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் மர... மேலும் பார்க்க

ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் 201 பால்குட ஊா்வலம்

ஆரணி நகரம், பள்ளிக்கூடத் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் 201 பால்குட ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது. ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் வைகாசி மாத பிரம்மோற்சவம், கடந்த 26-ஆம் தேதி காப்... மேலும் பார்க்க

அங்கன்வாடி குழந்தைகளுக்கு பட்டமளிப்பு

வந்தவாசியை அடுத்த ஓசூா் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு பட்டமளிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. இந்த அங்கன்வாடி மையத்தில் பயின்ற, 5 வயது நிறைவடைந்த முதலாம் வகுப்பு செல்ல உள்ள குழ... மேலும் பார்க்க

தொழிலாளியைத் தாக்கி மிரட்டல்: இளைஞா் கைது

செய்யாறு அருகே தொழிலாளியை தாக்கி மிரட்டல் விடுத்த புகாரின் பேரில் இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். செய்யாறு வட்டம், ஆக்கூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சலவைத் தொழிலாளி கமலக்கண்ணன். இவருக்கும், அத... மேலும் பார்க்க