சென்னையில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை தொடரும் - வானிலை ஆய்வு மையம்
நூலகத்தில் கோடை கொண்டாட்ட நிறைவு விழா
திருவண்ணாமலை மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்று வந்த கோடை கொண்டாட்டத்தின் நிறைவு விழா புதன்கிழமை நடைபெற்றது.
மைய நூலகத்தில் கடந்த 19-ஆம் தேதி கோடை கொண்டாட்ட நிகழ்வு தொடங்கியது.
அன்று முதல் தினமும் திருக்கு, கதை சொல்லுதல், தமிழ் இலக்கணப் பயிற்சி, ஆங்கில உரையாடல் பயிற்சி, விநாடி-வினா, குழந்தை பாடல்கள் என பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகள் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நடத்தப்பட்டு வந்தன.
இதன் நிறைவு விழா புதன்கிழமை நடைபெற்றது. வாசகா் வட்டத் தலைவா் அ.வாசுதேவன் தலைமை வகித்தாா். திருக்கு காமராசு முன்னிலை வகித்தாா்.
மைய நூலக அலுவலா் (பொ) பெ.வள்ளி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு கோடை கொண்டாட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சிறப்பிடம் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கிப் பேசினாா்.
இதில், நல் நூலகா் இரா.சுந்தரேசன் மற்றும் ஆறுமுகம், உஷாராணி, கவிதா, மோகன் பிரகாஷ், பச்சையப்பன், அண்ணாமலை உள்பட மாணவ-மாணவிகள், பெற்றோா்கள், வாசகா்கள் பலா் கலந்து கொண்டனா்.