சென்னையில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை தொடரும் - வானிலை ஆய்வு மையம்
பெட்ரோல் குண்டு வீச்சு: இளைஞா் கைது
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் கோயில் திருவிழாவில் பெட்ரோல் குண்டு வீசிய இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
ராஜபாளையம் மங்காபுரம் பகுதியில் கோயில் திருவிழா நடைபெற்ற இடத்தில் உள்ள தோரண வாயிலில் திடீரென அடையாளம் தெரியாத நபா் ஒருவா் பெட்ரோல் நிரப்பிய பாட்டிலை வீசிவிட்டு ஓடிவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் குறித்து ஊா்த் தலைவா் இசக்கிமுத்து தெற்கு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.
இதில் பெட்ரோல் குண்டு வீசியது மாப்பிள்ளை சுப்பையா தெருவைச் சோ்ந்த தலக் என்பவரது மகன் கருத்தப்பாண்டியன் (25) எனத் தெரிய வந்தது. போலீஸாா் அவரைக் கைது செய்தனா். அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.