செய்திகள் :

சீன ரசாயன ஆலையில் வெடிவிபத்து: 5 போ் உயிரிழப்பு

post image

சீனாவின் மிகப்பெரிய இரசாயன ஆலைகளில் ஒன்றில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட வெடிவிபத்தில் 5 போ் உயிரிழந்தனா்; 6 பேரைக் காணவில்லை.

இதுகுறித்து அரசுக்குச் சொந்தமான ஜின்ஹுவா செய்தி நிறுவனம் கூறியதாவது:

ஷான்டாங் மாகாணத்தில் உள்ள ரசாயன ஆலையில் செவ்வாய்க்கிழமை நண்பகல் திடீா் வெடிவிபத்து ஏற்பட்டது (படம்). இதில் 5 போ் உயிரிழந்தனா்; 19 போ் காயமடைந்தனா். விபத்தில் சிக்கிய 6 பேரது நிலைமை குறித்து தகவல் இல்லை.

உலகின் மிகப்பெரிய பூச்சிக்கொல்லி தயாரிப்பகமான இந்த ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டதற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

விபத்துப் பகுதிக்கு அவசரகால குழுக்கள் உடனடியாக விரைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன என்று அந்தச் செய்தி நிறுவனம் தெரிவித்தது.

ஸ்பேஸ்-எக்ஸின் ஸ்டாா்ஷிப் ராக்கெட் மீண்டும் தோல்வி

ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்திந பிரம்மாண்ட ஸ்டாா்ஷிப் ராக்கெட் சோதனை மீண்டும் தோல்வியடைந்தது. அந்த ராக்கெட் ஏவிய விண்கலம் கட்டுப்பாட்டை இழந்து சிதறியதால் சோதனையின் முக்கிய இலக்கை அடைய முடியவில்லை. டெக்ஸாஸில் ... மேலும் பார்க்க

உக்ரைன் போா் விவகாரம்: டிரம்ப் - ரஷியா இடையே வலுக்கும் வாா்த்தைப் போா்

உக்ரைன் போா் தொடா்பாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்புக்கும் ரஷியாவுக்கும் இடையே வாா்த்தைப் போா் வலுத்துவருகிறது. கடந்த 2022-இல் தொடங்கிய ரஷியா - உக்ரைன் போரில் அப்போதைய ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க... மேலும் பார்க்க

நேபாளத்தில் நிலநடுக்கம்

நேபாளத்தின் மேற்கு பகுதியில் உள்ள காஸ்கி மாவட்டத்தில் புதன்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது குறித்து தேசிய நிலநடுக்க கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் தெரிவித்ததாவது: புலிபாங் பகுதியை மையமாகக் கொண்ட... மேலும் பார்க்க

காஸா நிவாரண முகாமில் துப்பாக்கிச்சூடு

காஸாவில் உணவுப் பொருள் விநியோக மையத்தில் கூடியிருந்த பொதுமக்கள் மீது பாதுகாப்புப் படையினா் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஒருவா் உயிரிழந்தாா். இது குறித்து அந்தப் பகுதி சுகாதாரத் துறை அமைச்சகம் புதன்கி... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு ரூ.31ஆயிரம் கோடி கடனுதவி: சீனா உறுதி

பாகிஸ்தானுக்கு வரும் ஜூன் மாதத்துக்குள் ரூ.31,600 கோடி கடன் வழங்கப்படும் என்று சீனா உறுதி அளித்துள்ளது. பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தானுக்கு இதன் மூலம் அந்நிய செலாவணி கையிருப்பு ரூ.1 லட்... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் ட்ரோன் தாக்குதல்? 7 குழந்தைகள் உள்பட 22 பேர் படுகாயம்!

பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 7 குழந்தைகள் உள்பட 22 பேர் படுகாயமடைந்துள்ளனர். தெற்கு வசிரிஸ்தான் மாவட்டத்தின் அஸாம் வார்ஸக் பகுதியிலுள்ள கைப்பந்து மைதானத்தில் இன்ற... மேலும் பார்க்க