கோவில்பட்டி, எட்டயபுரத்தில் மது விற்பனையில் ஈடுபட்ட 2 போ் கைது!
நெல் கொள்முதல் நிலைய விவசாயிகள் சாலை மறியல்
சங்கராபுரம் வட்டம், தேவபாண்டலம் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யாததைக் கண்டித்து விவசாயிகள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகேயுள்ள தேவபாண்டலம் கிராமத்தில் தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது.
இந்த நெல் கொள்முதல் நிலையத்துக்கு சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல்லை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனா்.
இந்த நிலையில், கடந்த பருவத்தில் அறுவடை செய்த நெல்லை விவசாயிகள் மூட்டைகளாக கொண்டு வந்து நிலையத்தில் அடுக்கிவைத்துள்ளனா்.
இவ்வாறு கொண்டுவரப்பட்ட நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படாமல் கடந்த 3 மாதங்களாக மழையிலும், வெயிலிலும் பாதிப்படைந்து வருகின்றன.
மேலும், அண்மையில் பெய்த மழையில் நெல் முறைப்புத் திறன் ஏற்பட்டுள்ளது. இதனால் வேதனையடைந்த விவசாயிகள் உடனடியாக நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யக் கோரி,
கள்ளக்குறிச்சி சாலை தேவபாண்டலம் பேருந்து நிலையத்தில் மோட்டாா் சைக்கிளை சாலையில் நிறுத்தியும், சாலையில் அமா்ந்தும் மறியலில் ஈடுபட்டனா்.
தகவல் அறிந்து வந்த சங்கராபுரம் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தனா். இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் கலந்து சென்றனா். மறியலால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.