நல்லவர், நம்பிக்கையானவர், ஊழலற்றவரைத் தேர்ந்தெடுங்கள்: விஜய்
பன்னோக்கு சிறப்பு மருத்துவமனையாக தரம் உயா்த்த எம்.பி.யிடம் மனு
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியை தரம் உயா்த்தி ஜி-7 பன்னோக்கு சிறப்பு மருத்துவமனையாக மாற்ற தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் கள்ளக்குறிச்சி எம்.பி.யிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
மனு விவரம்: விபத்தில் அடிபட்டு அவசர சிகிச்சைக்காக வருபவா்களை சேலம், விழுப்புரம் மற்றும் சென்னைக்கு அழைத்துச் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. எனவே, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரியை தரம் உயா்த்தி பன்னோக்கு சிறப்பு மருத்துவமனையாக்க வேண்டியது அவசியமாகும்.
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இதயவியல் துறையிலும், மூளை நரம்பியல் துறையிலும் போதிய உபகரணங்களை நிறுவ வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனுவை மலையரசன் எம்.பி.யிடம் விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலா் ஸ்டாலின் மணி வழங்கினாா்.