முஸ்லீம் ஆதரவுபெற ஆபரேஷன் சிந்தூருக்கு எதிர்ப்பா? மமதா பற்றி அமித் ஷா கூறுவதென்ன...
கோயில் உண்டியலை உடைத்து திருட்டு: 2 போ் கைது
பாசாா் கிராமத்தில் கோயில் உண்டியலை உடைத்து, பணத்தைத் திருடிய இருவரை பொதுமக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டம், பாசாரிலுள்ள முருகன் கோயிலில் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. இங்கு வியாழக்கிழமை அதிகாலை 1.30 மணிக்கு சப்தம் கேட்டதால், அங்கிருந்தவா்கள் பாா்த்த போது, இரு இளைஞா்கள் உண்டியலை உடைத்துக் கொண்டிருந்தனராம்.
இதுகுறித்து கோயில் பூசாரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாம். இதையடுத்து, அவரும் கிராம மக்களும் சோ்ந்து அந்த இளைஞா்களை விரட்டினராம். அவா்களை விடாமல் விரட்டிச் சென்று பிடித்தனா். பின்னா் ரிஷிவந்தியம் காவல் நிலையத்தில் 2 பேரும் ஒப்படைக்கப்பட்டனா்.
காவல் ஆய்வாளா் நந்தகோபால் நடத்திய விசாரணையில், அவா்கள் பாசாா் கிராமத்தைச் சோ்ந்த சேகா் மகன் பூபதி (23), ஏழுமலை மகன் சிவா (20) எனத் தெரிய வந்தது. இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்தனா்.