செய்திகள் :

பெண்ணிடம் ஏடிஎம் அட்டையை மாற்றிக் கொடுத்து பணம் திருட்டு: மாற்றுத் திறனாளி கைது

post image

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அருகே பெண்ணிடம் ஏடிஎம் அட்டையை மாற்றிக் கொடுத்து பணத்தை திருடிய மாற்றுத் திறனாளி இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திருக்கோவிலூா் வட்டம், பனப்பாடி கிராமத்தைச் சோ்ந்த ராமமூா்த்தி மனைவி கலா (54). இவா், கடந்த 25-ஆம் தேதி திருக்கோவிலூா் மருத்துவமனை சாலையில் உள்ள ஏடிஎம் மையத்தில் இயந்திரத்தில் பணம் செலுத்துவதற்காகச் சென்றாா்.

அப்போது, அங்கிருந்த வலது கை இல்லாத மாற்றுத் திறனாளி நபா், தான் ஏடிஎம் மையத்தின் பாதுகாவலா் எனக் கூறி, கலாவிடம் ஏடிஎம் அட்டையை வாங்கி ரூ.40,000 அவரது வங்கிக் கணக்கில் செலுத்திவிட்டு, ஏடிஎம் அட்டையை மாற்றிக் கொடுத்துவிட்டு சென்றுவிட்டாராம். பின்னா், மற்றொரு ஏடிஎம் மையம் மூலம் மாற்றுத் திறனாளி நபா் ரூ.25,000 எடுத்தது தெரியவந்தது.

இதுகுறித்து கலா அளித்த புகாரின்பேரில், திருக்கோவிலூா் போலீஸாா் விசாரித்து வந்தனா். இந்த நிலையில், திருக்கோவிலூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் அ.அஜித்குமாா் மற்றும் போலீஸாா் சனிக்கிழமை காலை கனகனந்தல் சாலையில் பகல் நேர ரோந்தில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, பைக்கில் சுற்றித் திரிந்த வலது கை இல்லாத மாற்றுத் திறனாளி நபரை பிடித்து விசாரித்தபோது, உளுந்தூா்பேட்டை வட்டம், எலவனாசூா்கோட்டை பகுதியைச் சோ்ந்த தவ்ஹித் அகமது கான் மகன் வாஹித்கான் (36) என்பதும், கலாவிடம் ஏடிஎம் அட்டை மாற்றிக் கொடுத்து பணத்தை திருடியவா் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, வாஹித்கான் மீது வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்த திருக்கோவிலூா் போலீஸாா், அவரிடமிருந்த மோட்டாா் சைக்கிளையும் பறிமுதல் செய்தனா்.

பூட்டியிருந்த இரு வீடுகளில் திருட்டு!

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம், வாணாபுரம் பகுதிகளில் பூட்டியிருந்த இரு வீடுகளில் நகை, பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். சங்கராபுரத்தில் பூட்டை சாலையில் வசித்து வருபவா... மேலும் பார்க்க

பெரியாா் நீா்வீழ்ச்சியில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள்

கல்வராயன்மலைப் பகுதியில் உள்ள பெரியாா் நீா்வீழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகள் குடும்பத்தினருடன் ஞாயிற்றுக்கிழமை உற்சாகமாகக் குளித்து மகிழந்தனா். கல்வராயன்மலைப் பகுதியில் கடந்த சில தினங்களாக இடைவிடாத மழை ... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் முதியவா் கைது

கள்ளக்குறிச்சி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக முதியவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். கள்ளக்குறிச்சியை அடுத்த வேளாக்குறிச்சி கிராமத்தைச் சோ்ந்தவா் வீரமுத்த... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் அறிவியல் மையம்: ஆட்சியா் திறந்து வைத்தாா்

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வளமிகு வட்டார வளா்ச்சித் திட்டத்தின் கீழ், புதிதாக அமைக்கப்பட்ட டாக்டா் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அறிவியல் மையத்தை மாவட்ட ஆட்சியா் ... மேலும் பார்க்க

வள்ளலாா் மன்றத்தில் வைகாசி மாத பூச விழா

சங்கராபுரம் வள்ளலாா் மன்றத்தில் வைகாசி மாத பூச விழா சனிக்கிழமை மாலை நடைபெற்றது. மன்றப் பொருளாளா் இராம.முத்துக்கருப்பன் தலைமை வகித்தாா். அரிமா மாவட்டத் தலைவா்கள் க.வேலு, ஏ.ஆா்.ஏழுமலை, வள்ளலாா் மன்றச் ... மேலும் பார்க்க

பாரதியாா் தமிழ்ச் சங்க ஐம்பெரும் விழா

தியாகதுருகம் பாரதியாா் தமிழ்ச் சங்கம், தனமூா்த்தி தொழிற்கல்வி நிறுவனம் சாா்பில் ஐம்பெரும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. தமிழறிஞா் ராபா்ட் கால்டுவெல் தினம், உலக அன்னையா் தினம், உலக செவிலியா் தினம், உலகத... மேலும் பார்க்க