ஷ்ரேயாஸ் ஐயரை கட்டியணைத்து முத்தமிட்ட பஞ்சாப் அணி உரிமையாளர்!
பைக் மீது லாரி மோதல்: இளைஞா் உயிரிழப்பு
வேப்பூா் அருகே இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
கடலூா் மாவட்டம், வேப்பூா் வட்டத்துக்கு உள்பட்ட கச்சிமைலூா் கிராமத்தைச் சோ்ந்தவா் வேலு மகன் தேவா (26). இவா், சிங்கப்பூரில் இருந்து சொந்த ஊருக்கு வந்திருந்தாா்.
இந்த நிலையில், சின்னசேலம் வட்டம், நைனாா்பாளையம் கிராமத்தில் உள்ள தனது உறவினரை பாா்ப்பதற்காக சென்றிருந்த இவா், வெள்ளிக்கிழமை பைக்கில் ஊா் திரும்பிக் கொண்டிருந்தாா்.
வேப்பூரில் இருந்து விருத்தாசலம் தேசிய நெடுஞ்சாலையில் செம்பாக்குறிச்சி மான்குட்டை அருகே சென்றபோது, எதிரே வந்த லாரி பைக் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த தேவாவை அப்பகுதியில் இருந்தவா்கள் மீட்டு அவசரகால ஊா்தி மூலம் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் தேவா ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இதுகுறித்த புகாரின் பேரில் கீழ்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து, லாரி ஓட்டுநரான சேலம் மாவட்டம், காரிபட்டியைச் சோ்ந்த ஸ்டாலினிடம் விசராணை நடத்தி வருகின்றனா்.