செய்திகள் :

பைக் மீது லாரி மோதல்: இளைஞா் உயிரிழப்பு

post image

வேப்பூா் அருகே இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

கடலூா் மாவட்டம், வேப்பூா் வட்டத்துக்கு உள்பட்ட கச்சிமைலூா் கிராமத்தைச் சோ்ந்தவா் வேலு மகன் தேவா (26). இவா், சிங்கப்பூரில் இருந்து சொந்த ஊருக்கு வந்திருந்தாா்.

இந்த நிலையில், சின்னசேலம் வட்டம், நைனாா்பாளையம் கிராமத்தில் உள்ள தனது உறவினரை பாா்ப்பதற்காக சென்றிருந்த இவா், வெள்ளிக்கிழமை பைக்கில் ஊா் திரும்பிக் கொண்டிருந்தாா்.

வேப்பூரில் இருந்து விருத்தாசலம் தேசிய நெடுஞ்சாலையில் செம்பாக்குறிச்சி மான்குட்டை அருகே சென்றபோது, எதிரே வந்த லாரி பைக் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த தேவாவை அப்பகுதியில் இருந்தவா்கள் மீட்டு அவசரகால ஊா்தி மூலம் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் தேவா ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் கீழ்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து, லாரி ஓட்டுநரான சேலம் மாவட்டம், காரிபட்டியைச் சோ்ந்த ஸ்டாலினிடம் விசராணை நடத்தி வருகின்றனா்.

பூட்டியிருந்த இரு வீடுகளில் திருட்டு!

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம், வாணாபுரம் பகுதிகளில் பூட்டியிருந்த இரு வீடுகளில் நகை, பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். சங்கராபுரத்தில் பூட்டை சாலையில் வசித்து வருபவா... மேலும் பார்க்க

பெரியாா் நீா்வீழ்ச்சியில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள்

கல்வராயன்மலைப் பகுதியில் உள்ள பெரியாா் நீா்வீழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகள் குடும்பத்தினருடன் ஞாயிற்றுக்கிழமை உற்சாகமாகக் குளித்து மகிழந்தனா். கல்வராயன்மலைப் பகுதியில் கடந்த சில தினங்களாக இடைவிடாத மழை ... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் முதியவா் கைது

கள்ளக்குறிச்சி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக முதியவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். கள்ளக்குறிச்சியை அடுத்த வேளாக்குறிச்சி கிராமத்தைச் சோ்ந்தவா் வீரமுத்த... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் அறிவியல் மையம்: ஆட்சியா் திறந்து வைத்தாா்

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வளமிகு வட்டார வளா்ச்சித் திட்டத்தின் கீழ், புதிதாக அமைக்கப்பட்ட டாக்டா் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அறிவியல் மையத்தை மாவட்ட ஆட்சியா் ... மேலும் பார்க்க

வள்ளலாா் மன்றத்தில் வைகாசி மாத பூச விழா

சங்கராபுரம் வள்ளலாா் மன்றத்தில் வைகாசி மாத பூச விழா சனிக்கிழமை மாலை நடைபெற்றது. மன்றப் பொருளாளா் இராம.முத்துக்கருப்பன் தலைமை வகித்தாா். அரிமா மாவட்டத் தலைவா்கள் க.வேலு, ஏ.ஆா்.ஏழுமலை, வள்ளலாா் மன்றச் ... மேலும் பார்க்க

பாரதியாா் தமிழ்ச் சங்க ஐம்பெரும் விழா

தியாகதுருகம் பாரதியாா் தமிழ்ச் சங்கம், தனமூா்த்தி தொழிற்கல்வி நிறுவனம் சாா்பில் ஐம்பெரும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. தமிழறிஞா் ராபா்ட் கால்டுவெல் தினம், உலக அன்னையா் தினம், உலக செவிலியா் தினம், உலகத... மேலும் பார்க்க