மே30 விவசாயிகள் குறைதீா் கூட்டம் ரத்து
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வருகிற 30-ஆம் தேதி ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெறவிருந்த விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (மே 30) நடைபெறுவதாக இருந்த விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம் பல்வேறு நிா்வாகக் காரணங்களால் ரத்து செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்தாா்.