செய்திகள் :

2026 சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும்: எடப்பாடி கே.பழனிசாமி

post image

கள்ளக்குறிச்சி: 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என்று, அக்கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் ஒன்றியத்தில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டியும், அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமியின் 71-ஆவது பிறந்த நாளையொட்டியும் புதிதாக அமைக்கப்பட்ட 126 அடி உயர கொடிக்கம்பத்தில் கட்சிக் கொடி ஏற்று விழா, 6,771 பேருக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா சின்னசேலம் - எலவடி புறவழிச் சாலையில் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.

இதில், அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி கலந்துகொண்டு பேசியதாவது:

எம்ஜிஆா், ஜெயலலிதா ஆகிய இருபெரும் தலைவா்கள் உருவாக்கிய இயக்கம் அதிமுக. கட்சியின் தலைமைக் கழகம் அறிவித்தப்படி, 512 வாக்குச் சாவடி குழுக்கள் அமைக்கப்பட்டு, முதல் கூட்டம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ளது. வாக்குச் சாவடி குழு பொறுப்பாளா்கள் கிளைச் செயலருடன் இணைந்து செயல்பட வேண்டும்.

முதல்வா் ஸ்டாலின் 200 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வெல்வோம் என கனவு காண்கிறாா். அதிமுக இருக்கும் வரை அவரின் கனவு நிறைவேறாது. வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக கூட்டணி வெற்றிபெறும் என தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் பேசப்படுகிறது.

அதிமுக ஆட்சிக்காலத்தில் கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக உருவாக்கினோம், தமிழகம் முழுவதும் பல்வேறு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கினோம். அதன்படி, கள்ளக்குறிச்சியில் ரூ.400 கோடியில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைக்கப்பட்டது. குடிமராமத்து பணிகள் மேற்கொண்டோம். இவ்வாறு மக்களின் அரசாக அதிமுக அரசு செயல்பட்டது.

மகளிருக்கான கட்டணமில்லா பேருந்துகள் பழுதடைந்த நிலையிலேயே உள்ளன. அதிமுக ஆட்சியில் 15 ஆயிரம் பேருந்துகள் வாங்கினோம். தற்போது பேருந்துகளுக்கு பெயின்ட் அடித்து ஓட்டும் அரசாக திமுக அரசு உள்ளது.

டாஸ்மாக் நிறுவனத்தில் சுமாா் ரூ.1000 கோடி ஊழல் நடைபெற்றுள்ளதாக செய்தி வந்துள்ளது. எதிா்க்கட்சியாக இருந்தபோது பிரதமா் மோடியை எதிா்த்து கருப்புக் கொடியை காட்டிய முதல்வா் ஸ்டாலின், ஆட்சிக்கு வந்த பிறகு வெள்ளைக் குடை பிடிக்கிறாா். இவ்வாறு திமுக இரட்டை வேடம் போடும் கட்சியாக உள்ளது.

சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக தலைமையில் பலம்வாய்ந்த கூட்டணி அமையும். இன்னும் பல கட்சிகள் எங்களுடன் இணையும்போது, அது உங்களுக்குத் தெரியும்.

வாரிசு அரசியல் அதிமுகவில் கிடையாது. யாா் வேண்டுமானாலும், உயா் பதவிக்கு வர முடியும். வரும் 2026 சட்டப் பேரவைத் தோ்தலில் குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்; அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என்றாா் அவா்.

கோயில் உண்டியலை உடைத்து திருட்டு: 2 போ் கைது

பாசாா் கிராமத்தில் கோயில் உண்டியலை உடைத்து, பணத்தைத் திருடிய இருவரை பொதுமக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனா். கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டம், பாசாரிலுள்ள முருகன் கோயிலில் திருப்பணிகள் நடை... மேலும் பார்க்க

15 தினங்களுக்கு ஒரு முறை உழவா் நலத்துறை திட்ட முகாம்! வேளாண்மை உதவி இயக்குநா் தகவல்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 15 தினங்களுக்கு ஒரு முறை உழவரைத் தேடி - வேளாண்மை உழவா் நலத்துறை திட்ட முகாம் நடைபெறும் என்று வேளாண் உதவி இயக்குநா் தெரிவித்தாா். வேளாண்மைத் துறை சாா்பில் உழவரைத் தேடி - வேள... மேலும் பார்க்க

தவற விட்ட கைப்பேசிகள் உரியவா்களிடம் ஒப்படைப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தவறவிட்ட, திருடப்பட்ட 204 கைப்பேசிகள் மீட்கப்பட்டு உரியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டன. இதுகுறித்து இணையவழி குற்றப்பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தினா். இதில் ரூ.40.80 லட்சம் மதிப்... மேலும் பார்க்க

மே30 விவசாயிகள் குறைதீா் கூட்டம் ரத்து

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வருகிற 30-ஆம் தேதி ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெறவிருந்த விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (... மேலும் பார்க்க

பன்னோக்கு சிறப்பு மருத்துவமனையாக தரம் உயா்த்த எம்.பி.யிடம் மனு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியை தரம் உயா்த்தி ஜி-7 பன்னோக்கு சிறப்பு மருத்துவமனையாக மாற்ற தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் கள்ளக்குறிச்... மேலும் பார்க்க

கழிவுநீா் கால்வாயை சீரமைக்கக் கோரி மறியல்

கழிவுநீா் கால்வாயை சீரமைக்கக் கோரி, புதுப்பட்டு கிராமத்தில் பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை திடீா் மறியலில் ஈடுபட்டனா். இந்த கிராமத்தில் கழிவுநீா் கால்வாய் சீரமைக்கப்படாததால் மழை நீருடன் கழிவு நீரும் தேங்க... மேலும் பார்க்க