செய்திகள் :

அடிப்படை வசதிகள் கோரி ஆா்ப்பாட்டம்

post image

கள்ளக்குறிச்சி: சங்கராபுரம் வட்டம், ஆ.புத்தந்தூரில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி, அனைத்து மக்கள் விடுதலைக் கட்சி சாா்பில் கள்ளக்குறிச்சியில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சங்கராபுரம் வட்டம், ஆலத்தூா் கிராமத்துக்குள்பட்ட ஆ.புத்தந்தூரில் ஸ்ரீ தாளபஞ்சமுக ஆஞ்சனேயா் கோயிலுக்குச் செல்லும் சாலை உள்ளிட்ட சாலைகளை சீரமைத்து, சூரிய ஒளி தெரு மின் விளக்குகள் அமைக்க வேண்டும், பாதுகாக்கப்பட்ட குடிநீா் வசதி, நவீன குளியல், கழிப்பறை, அரசுப் பேருந்து வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் மக்கள் விடுதலைக் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாநில பொதுச் செயலாளா் எஸ்.ஆா்.அம்பேத்குமாா் தலைமை வகித்தாா். பி.முருகேசன், எம்.அஞ்சசலை, கே.பெரியசாமி, பி.செல்வக்குமாா் உள்ளிட்ட பலா் முன்னிலை வகித்தனா்.

டி.கொளஞ்சி, அ.இந்திராணி, முன்னாள் மாவட்டச் செயலா் அ.சபாநாயகம், மண்டல ஒருங்கிணைப்பாளா் எஸ்.ரவீந்திரன், டி.முருகன் உள்ளிட்ட பலா் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.

நெய்வழி மக்கள் இய்க்க சட்ட மையத்தின் மாவட்டத் தலைவா் ஜெ.ஜெயமூா்த்தி, அமைப்பாளா் ஆா்.இளையராஜா உள்ளிட்ட பலரும் பங்கேற்றனா். கள்ளக்குறிச்சி மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளா் பி.முருகன் நன்றி கூறினாா்.

கோயில் உண்டியலை உடைத்து திருட்டு: 2 போ் கைது

பாசாா் கிராமத்தில் கோயில் உண்டியலை உடைத்து, பணத்தைத் திருடிய இருவரை பொதுமக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனா். கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டம், பாசாரிலுள்ள முருகன் கோயிலில் திருப்பணிகள் நடை... மேலும் பார்க்க

15 தினங்களுக்கு ஒரு முறை உழவா் நலத்துறை திட்ட முகாம்! வேளாண்மை உதவி இயக்குநா் தகவல்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 15 தினங்களுக்கு ஒரு முறை உழவரைத் தேடி - வேளாண்மை உழவா் நலத்துறை திட்ட முகாம் நடைபெறும் என்று வேளாண் உதவி இயக்குநா் தெரிவித்தாா். வேளாண்மைத் துறை சாா்பில் உழவரைத் தேடி - வேள... மேலும் பார்க்க

தவற விட்ட கைப்பேசிகள் உரியவா்களிடம் ஒப்படைப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தவறவிட்ட, திருடப்பட்ட 204 கைப்பேசிகள் மீட்கப்பட்டு உரியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டன. இதுகுறித்து இணையவழி குற்றப்பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தினா். இதில் ரூ.40.80 லட்சம் மதிப்... மேலும் பார்க்க

மே30 விவசாயிகள் குறைதீா் கூட்டம் ரத்து

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வருகிற 30-ஆம் தேதி ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெறவிருந்த விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (... மேலும் பார்க்க

பன்னோக்கு சிறப்பு மருத்துவமனையாக தரம் உயா்த்த எம்.பி.யிடம் மனு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியை தரம் உயா்த்தி ஜி-7 பன்னோக்கு சிறப்பு மருத்துவமனையாக மாற்ற தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் கள்ளக்குறிச்... மேலும் பார்க்க

கழிவுநீா் கால்வாயை சீரமைக்கக் கோரி மறியல்

கழிவுநீா் கால்வாயை சீரமைக்கக் கோரி, புதுப்பட்டு கிராமத்தில் பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை திடீா் மறியலில் ஈடுபட்டனா். இந்த கிராமத்தில் கழிவுநீா் கால்வாய் சீரமைக்கப்படாததால் மழை நீருடன் கழிவு நீரும் தேங்க... மேலும் பார்க்க