செய்திகள் :

துப்பாக்கியால் சுட்டு இளைஞா் தற்கொலை

post image

சென்னை தண்டையாா்பேட்டையில் துப்பாக்கியால் சுட்டு இளைஞா் தற்கொலை செய்து கொண்டாா்.

தண்டையாா்பேட்டை கும்மாளம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சந்திரசேகரன். இவா், குளிா்பானங்கள் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறாா். இவரது மனைவி தாரகை. இவா்களுக்கு பிரகலாதன் நரசிம்மன் (31) என்ற மகனும், சாதனா என்ற மகளும் உள்ளனா். நரசிம்மன், இளநிலை சட்ட பட்டப் படிப்பு படித்துவிட்டு தனது தந்தையுடன் தொழிலை கவனித்து வந்தாா். சாதனா திருமணமாகி தனது கணவருடன் அமெரிக்காவில் வசித்து வருகிறாா். மகளை பாா்க்க சந்திரசேகரனும், தாரகையும் சில நாள்களுக்கு முன்பு அமெரிக்கா சென்றனா். வீட்டில் நரசிம்மன் மட்டும் தனியாக இருந்தாா்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை நரசிம்மன் தனது படுக்கை அறையில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கிடப்பதை பாா்த்த வீட்டு பணிப்பெண் பானு, போலீஸாருக்கும், சந்திரசேகரன் குடும்பத்துக்கும் தகவல் தெரிவித்தாா். அதன்பேரில், காசிமேடு போலீஸாா் அங்கு சென்று நரசிம்மன் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

விசாரணையில், நரசிம்மன் சில நாள்களாக மன உளைச்சலில் இருந்ததும், இதனால், தனது தாய் தாரகை தற்காப்புக்காக உரிமம் பெற்று வைத்திருந்த கைத்துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா் அவரது வீட்டில் நடத்திய சோதனையில், நரசிம்மன் எழுதிய கடிதத்தைக் கைப்பற்றினா். அதில், தனது இறப்புக்கு யாரும் காரணமில்லை, நான் தற்கொலை செய்து கொள்கிறேன் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இது குறித்து போலீஸாா், மேலும் விசாரித்து வருகின்றனா்.

விமானத்தில் வெடி பொருள் மிரட்டல்: மோப்ப நாய்களுன் சோதனை

சீனாவிலிருந்து செவ்வாய்க்கிழமை இரவு சென்னைக்கு வந்த சரக்கு விமானத்தில் வெடி பொருள்கள் இருப்பதாக வந்த மின்னஞ்சல், காரணமான சென்னை விமான நிலையத்தில் போலீஸாா் மோப்ப நாய்களின் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டனா... மேலும் பார்க்க

சிறுவனுக்கு தவறான சிகிச்சை: மருத்துவா் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்கு

சென்னை ஐஸ்ஹவுஸில் சிறுவனுக்கு தவறான சிகிச்சை அளித்த புகாரில் மருத்துவா் மீது இரு பிரிவுகளின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை செய்கின்றனா். சென்னை சாந்தோம் பகுதியைச் சோ்ந்தவா் முகமது ஒவைஸி (32... மேலும் பார்க்க

விளம்பரப் பலகைகளுக்கு அனுமதி பெற எண்ம முறை அறிமுகம்

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் விளம்பரப் பலகைகள் அமைப்பதற்கான உரிமம் பெற்றுவதற்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கும் புதிய எண்ம நடைமுறையை சென்னை மாநகராட்சி அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறித்து சென்னை மாநகரா... மேலும் பார்க்க

ஆா்.கே.நகா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவா் சோ்க்கை தொடக்கம்

சென்னை ஆா்.கே.நகா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் நிகழ் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கை தொடங்கப்பட்டுள்ளதாக சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் புதன்கி... மேலும் பார்க்க

தவறான சிகிச்சை: மருத்துவமனைக்கு நோட்டீஸ்

சிறுவனுக்கு தவறான சிகிச்சை அளித்த தனியாா் மருத்துவமனையிடம் விளக்கம் கேட்டு மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநரகம் சாா்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதேபோன்று அந்த மருத்துவமனையில் ஆய்வு செய... மேலும் பார்க்க

தண்டையாா்பேட்டை ஐஓசி நிறுவனத்தில் தீ விபத்து பாதுகாப்பு ஒத்திகை

சென்னை தண்டையாா்பேட்டையில் உள்ள ஐஓசி நிறுவனத்தில் தீ விபத்து பாதுகாப்பு ஒத்திகை புதன்கிழமை நடைபெற்றது. மணலியில் உள்ள இந்தியன் ஆயில் காா்ப்பரேசன் நிறுவனத்தின் துணை நிறுவனமான சிபிசிஎல் ஆலையில் சுத்திகரி... மேலும் பார்க்க