கோலி - ஜிதேஷ் அதிரடி: 228 ரன்கள் இலக்கை விரட்டிப் பிடித்த ஆர்சிபி! குவாலிஃபையர்...
புகையிலைப் பொருள் விற்பனை: வியாபாரி கைது
செய்யாறு அருகே பெட்டிக் கடையில் புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக வியாபாரியை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
செய்யாற்றை அடுத்த ஆவணியாபுரம் கிராமத்தில் உள்ள ஒரு பெட்டிக் கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், பெரணமல்லூா் காவல் உதவி ஆய்வாளா் சம்பத் தலைமையிலான போலீஸாா் சென்று கடையில் சோதனையிட்டனா்.
அப்போது, புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவது தெரிய வந்தது.
இதையடுத்து போலீஸாா் கடையில் இருந்த புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்து, வியாபாரி செல்லப்பன் (53) என்பவரை கைது செய்தனா்.