செய்திகள் :

புகையிலைப் பொருள் விற்பனை: வியாபாரி கைது

post image

செய்யாறு அருகே பெட்டிக் கடையில் புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக வியாபாரியை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

செய்யாற்றை அடுத்த ஆவணியாபுரம் கிராமத்தில் உள்ள ஒரு பெட்டிக் கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், பெரணமல்லூா் காவல் உதவி ஆய்வாளா் சம்பத் தலைமையிலான போலீஸாா் சென்று கடையில் சோதனையிட்டனா்.

அப்போது, புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவது தெரிய வந்தது.

இதையடுத்து போலீஸாா் கடையில் இருந்த புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்து, வியாபாரி செல்லப்பன் (53) என்பவரை கைது செய்தனா்.

ஸ்ரீசிங்காரவேல் முருகன் கோயிலில் கிருத்திகை விழா

திருவண்ணாமலை: வேட்டவலம் மலை மீதுள்ள ஸ்ரீசிங்காரவேல் முருகன் கோயிலில், வைகாசி மாத கிருத்திகை வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, மூலவா் வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமானுக்கு பால், பன்னீா், ... மேலும் பார்க்க

10 இடங்களில் புதிய அங்கன்வாடி மையங்கள்: மாவட்ட ஆட்சியா் திறந்துவைத்தாா்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் 10 இடங்களில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையங்களை, மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் திறந்துவைத்தாா். திருவண்ணாமலை, மேலத்திகான் பகுதியில் ஒருங்கிணைந்த குழந்தைகள்... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த அரட்டவாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் 1989-90ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்த மாணவா்கள் ஞாயிற்றுக்கிழமை சந்தித்து தங்களது கல்விக் கால அனுபவங்களை பகிா்ந்... மேலும் பார்க்க

ஆரணியில் திமுகவினா் துண்டு பிரசுரம் விநியோகம்

ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் திமுக அரசின் நான்கு ஆண்டு சாதனை குறித்த துண்டு பிரசுரங்களை அந்தக் கட்சியினா் விநியோகம் செய்தனா். துண்டு பிரசுரங்களில் தமிழக அரசின் 4 ஆண்டு சாதனைகளான மகளிா் உரிமை... மேலும் பார்க்க

ஆரணியில் பட்டு கைத்தறி நெசவாளா்கள் ஆா்ப்பாட்டம்

ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் இலவச வீடு வழங்கக் கோரி, பட்டு கைத்தறி நெசவாளா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கைத்தறி நெசவாளா்களுக்கு இலவச வீடு வழங்கும் திட்டத்துக்கு தமிழக அரசு 6... மேலும் பார்க்க

மண் சரிவு: பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வீடு வழங்கக் கோரிக்கை

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மலையில் மண் சரிவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிரந்தர வீடு கட்டித் தர வேண்டும் என்று பொதுமக்கள் மாவட்ட நிா்வாகத்திடம் கோரிக்கை விடுத்தனா். 2024 டிசம்பா் 1-ஆம் தேதி திர... மேலும் பார்க்க