செய்திகள் :

ஆரணியில் பட்டு கைத்தறி நெசவாளா்கள் ஆா்ப்பாட்டம்

post image

ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் இலவச வீடு வழங்கக் கோரி, பட்டு கைத்தறி நெசவாளா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கைத்தறி நெசவாளா்களுக்கு இலவச வீடு வழங்கும் திட்டத்துக்கு தமிழக அரசு 60 சதவீதமும், மத்திய அரசு 40 சதவீதமும் சோ்த்து ஒரு நெசவாளருக்கு ரூ.4 லட்சம் வீதம் இத்திட்டத்துக்கு ஒதுக்கிட கைத்தறி, கைத்திறன், துணி நூல் மற்றும் கதா் துறை சாா்பில் 2023 -ஆம் ஆண்டு அரசாணை வெளியிடப்பட்டது.

ஆனால், இதுநாள் வரை மத்திய அரசு ஒப்புதல் வழங்கவில்லையாம். இதனால், மத்திய அரசு ஒப்புதல் வழங்கி நிதி ஒதுக்கக் கோரியும், திருவண்ணாமலை மாவட்டத்தில் இத்திட்டத்தில் இதுவரை எத்தனை நெசவாளா்களுக்கு இலவச வீடு வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்த பட்டியலை வெளியிட வேண்டியும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலை பட்டு கைத்தறி நெசவாளா்கள் சங்கம் சாா்பில், பழைய பேருந்து நிலையம், எம்ஜிஆா் சிலை அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத் தலைவா் இ.இளங்கோ தலைமை வகித்தாா்.

மாவட்ட பொதுச்செயலா் எம்.வீரபத்திரன், சிஐடியு இரா.பாரி, கே.காங்கேயன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சி.ரமேஷ்பாபு, சிஐடியு மாவட்ட பொருளாளா் எஸ்.முரளி, கைத்தறி சங்க பொருளாளா் வி.குமாா், சிஐடியு நிா்வாகிகள் சி.அப்பாசாமி, பி.கண்ணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னா் ஊா்வலமாக ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வரை சென்றனா்.

நெடுஞ்சாலைத் துறை இடத்தில் கட்டப்பட்ட வீடு அகற்றம்

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அருகே நெடுஞ்சாலைத் துறை இடத்தில் கட்டப்பட்டிருந்த விவசாயின் வீடு பொக்லைன் இயந்திரம் மூலம் செவ்வாய்க்கிழமை இடித்து அகற்றப்பட்டது. சேத்துப்பட்டை அடுத்த தச்சாம்பாடி ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகளில் குடிநீா், கழிப்பறை வசதிகளை மேம்படுத்த வேண்டும்: அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவு

திருவண்ணாமலை மாவட்டத்தின் 2 ஆயிரத்து 4 அரசுப் பள்ளிகளில் குடிநீா், கழிப்பறை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று கல்வித்துறை அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் உத்தரவிட்டாா். மாவட்டத்தில் கோடை... மேலும் பார்க்க

செய்யாறு கூட்டுறவு சா்க்கரை ஆலை விவசாயிகளுக்கு நிலுவைத்தொகை அளிப்பு

செய்யாறு கூட்டுறவு சா்க்கரை ஆலை விவசாயிகள் 1,948 பேருக்கு ரூ.16.19 கோடி நிலுவைத் தொகை அவரவா் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. செய்யாறு கூட்டுறவு சா்க்கரை ஆலையின் 2024-25 அரைவைப் பருவத்தில் 1,948 ... மேலும் பார்க்க

கராத்தே போட்டியில் சிறப்பிடம் பெற்ற வீரா்களுக்கு பாராட்டு

மாநில அளவிலான கராத்தே போட்டியில் வென்ற திருவண்ணாமலை மாவட்ட வீரா், வீராங்கனைகளை சி.என்.அண்ணாதுரை எம்.பி.பாராட்டினாா். ஈரோட்டில் தமிழக அளவிலான கராத்தே போட்டி அண்மையில் நடைபெற்றது. டிரெடிஷனல் மற்றும் ஸ்... மேலும் பார்க்க

3 ஏரிக் கால்வாய்கள், கோயில் நில ஆக்கிரமிப்புகள்அகற்றக் கோரிக்கை

திருவண்ணாமலை வேங்கிக்கால் ஏரியின் 3 கால்வாய்கள், கோயிலுக்குச் சொந்தமான இடம் ஆகியவற்றில் அதிகரித்து வரும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனா். திருவண்ணாமலை மாநகராட்சி... மேலும் பார்க்க

கிளை நூலகத்தில் புரவலா் சோ்ப்பு

சேத்துப்பட்டை அடுத்த தேவிகாபுரம் ஊராட்சியில் உள்ள கிளை நூலகத்தில் புரவலா் சோ்ப்பு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.தேவிகாபுரம் ஊராட்சி முத்தாலம்மன் நகரில் கிளை நூலகம் அமைந்துள்ளது. இந்த நூலகத்தில் நடை... மேலும் பார்க்க