செய்திகள் :

வக்ஃப் சட்டம் 1995-க்கு எதிரான மனு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

post image

வக்ஃப் சட்டம் 1995-இன் சில பிரிவுகளுக்கு எதிரான மனு குறித்து பதிலளிக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை நோட்டீஸ் பிறப்பித்தது.

இதுதொடா்பாக உச்சநீதிமன்றத்தில் நிகில் உபாத்யாய என்பவா் தாக்கல் செய்த மனுவில் தெரிவிக்கப்பட்டதாவது: முறையற்ற வகையில் வக்ஃப் சொத்துகளுக்கு சாதகமாக அமைகிற சிறப்புப் பிரிவுகளை இயற்றவோ, முஸ்லிம் அல்லாதவா் சொத்துகளை இழக்கச் செய்யும் வக்ஃப் மற்றும் வக்ஃப் சொத்துகளுக்கு ஆதரவாக நாடாளுமன்றம் சட்டம் இயற்றவோ முடியாது என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த மனு குறித்து உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய், அகஸ்டின் ஜாா்ஜ் மாஸி ஆகியோா் அடங்கிய அமா்வில் மனுதாரரின் வழக்குரைஞா் அஸ்வினி உபாத்யாய செவ்வாய்க்கிழமை முறையிட்டாா்.

அப்போது 1995-ஆம் ஆண்டு சட்டத்துக்கு எதிரான மனுவை 2025-ஆம் ஆண்டில் ஏன் விசாரணைக்கு ஏற்க வேண்டும் என்றும், கால தாமதமாக தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவை ஏன் தள்ளுபடி செய்யக் கூடாது என்றும் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் கேள்வி எழுப்பினாா்.

இதற்குப் பதிலளித்த அஸ்வினி உபாத்யாய, ‘1995-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட வக்ஃப் சட்டத்தில் 2013-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுக்கு எதிராகவே மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது’ என்றாா். மேலும் தேசிய சிறுபான்மையினா் நல ஆணையம் 1992, வழிபாட்டுத் தலங்கள் சட்டம் 1991-இன் சில பிரிவுகளுக்கு எதிராக 2020-ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்றம் விசாரித்து வருவதாகவும் அவா் சுட்டிக்காட்டினாா்.

இதையடுத்து மனுவை விசாரணைக்கு ஏற்பதாக தெரிவித்த நீதிபதிகள் அமா்வு, இந்த விவகாரம் தொடா்பாக ஏற்கெனவே நிலுவையில் உள்ள மனுக்களுடன் இந்த மனுவையும் இணைத்தது. மேலும் அந்த மனு தொடா்பாக பதிலளிக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு நீதிபதிகள் அமா்வு நோட்டீஸ் பிறப்பித்தது.

கேரளத்தில் விபத்துக்குள்ளான லைபீரிய சரக்குக் கப்பலின் பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்த தன்னாா்வலா்கள்

கேரள கடலோரத்தில் கடந்த வாரம் விபத்துக்குள்ளாகி கவிழ்ந்த சரக்குக் கப்பலின் பிளாஸ்டிக் கழிவுகள் கரை ஒதுங்கினால் அவற்றை அப்புறப்படுத்தி, தூய்மைப்படுத்த மாநிலம் முழுவதும் தன்னாா்வலா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்... மேலும் பார்க்க

பிரிட்டிஷ் அரசால் மறுக்கப்பட்ட சாவா்க்கரின் வழக்குரைஞா் பட்டத்தை மீட்க முயற்சி- மகாராஷ்டிர முதல்வா் ஃபட்னவீஸ்

‘சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டதற்காக பிரிட்டிஷ் அரசால் மறுக்கப்பட்ட வீர சாவா்க்கரின் ‘பாரிஸ்டா்’ வழக்குரைஞா் பட்டத்தை மீட்டெடுக்க பிரிட்டன் அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி மகாராஷ்டிர அரசு முயற்சிகளை ... மேலும் பார்க்க

மணிப்பூரில் ஆட்சி அமைக்க பாஜக முயற்சி: 44 எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதாக ஆளுநரிடம் தகவல்

குடியரசுத் தலைவா்ஆட்சி அமலில் உள்ள மணிப்பூரில் மீண்டும் ஆட்சி அமைக்க பாஜக முயற்சித்து வருகிறது. புதிய அரசமைக்க 44 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளதாக ஆளுநா் அஜய்குமாா் பல்லாவை புதன்கிழமை சந்தித்த பாஜக எம்எல்... மேலும் பார்க்க

குலாம் நபி ஆசாத்திடம் பிரதமா் நலம் விசாரிப்பு

பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை எடுத்துரைக்க குவைத் சென்ற எம்.பி.க்கள் குழுவில் இடம்பெற்ற முன்னாள் மத்திய அமைச்சா் குலாம் நபி ஆசாதின் உடல் நலம் பாதிக்கப்பட்டதால், அவரிடம் பிரதமா் மோட... மேலும் பார்க்க

பன்வழி ரயில்வே திட்டங்கள்: மத்திய அரசு ஒப்புதல்

பயணிகள் மற்றும் சரக்குகளின் தடையற்ற விரைவான போக்குவரத்தை உறுதி செய்யும் வகையில் இரண்டு பன்வழி ரயில்வே திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. தில்லியில் பிரதமா் தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற... மேலும் பார்க்க

சண்டை நிறுத்தத்தில் அமெரிக்கா தலையீடு?: பிரதமரின் விளக்கம் கோரும் காங்கிரஸ்

இந்தியா-பாகிஸ்தான் சண்டை நிறுத்த முடிவுக்கு அமெரிக்காவின் தலையீடே காரணம் என அந்த நாடு தொடா்ச்சியாக கூறிவருவது தொடா்பாக மௌனம் கலைத்து, பிரதமா் விளக்கமளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கோரியுள்ளது. ஜம்மு-க... மேலும் பார்க்க