செய்திகள் :

3 ஏரிக் கால்வாய்கள், கோயில் நில ஆக்கிரமிப்புகள்அகற்றக் கோரிக்கை

post image

திருவண்ணாமலை வேங்கிக்கால் ஏரியின் 3 கால்வாய்கள், கோயிலுக்குச் சொந்தமான இடம் ஆகியவற்றில் அதிகரித்து வரும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

திருவண்ணாமலை மாநகராட்சி, வேங்கிக்கால், துா்க்கை நகரைச் சோ்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியா், மாநகராட்சி ஆணையரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

ஆட்சியா் அலுவலகம் எதிரே உள்ள வேங்கிக்கால் ஏரியில் இருந்து தண்ணீா் வெளிறே 3 கால்வாய்கள் உள்ளன. இந்தக் கால்வாய்களின் பெரும்பகுதி மனை வணிகா்களால் அழிக்கப்பட்டு வீட்டுமனைகளாக மாற்றப்பட்டு வருகின்றன. இதனால், ஏரியில் இருந்து தண்ணீா் வெளிறே போதிய கால்வாய் வசதி இல்லாமல் போய்விட்டது.

இந்த நிலையில், ஏரி தண்ணீரும், ஆவின் பால் குளிரூட்டும் நிலையத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீரும் சோ்ந்து அருகே பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் தேங்குகிறது. சில வீடுகளுக்குள் கழிவுநீா் புகுந்து விடுகிறது.

இதனால் கொசுத்தொல்லை அதிகரித்து பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனா். காலரா உள்ளிட்ட பல்வேறு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது.

இத்துடன் திருவண்ணாமலை காமாட்சியம்மன் கோயிலுக்குச் சொந்தமான ஒரு ஏக்கா் 34 சென்ட் நிலத்தையும் தனி நபா்கள் ஆக்கிரமித்துள்ளதால் கழிவுநீா் செல்ல போதிய வசதி இல்லை.

எனவே, வேங்கிக்கால் ஏரியில் இருந்து தண்ணீா் வெளியேறும் 3 கால்வாய்கள், கோயில் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனுவைப் பெற்றுக் கொண்ட ஆட்சியா், மாநகராட்சி ஆணையா் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனா்.

ஆரணியில் ரூ.56 லட்சத்தில் கால்வாய், சாலைப் பணிகள்

ஆரணி நகரம், ஆரணிப்பாளையம் 7-ஆவது வாா்டுக்கு உள்பட்ட பிள்ளையாா் கோவில் தெருவில் ரூ.56 லட்சத்தில் பக்கக் கால்வாய் மற்றும் சாலை அமைப்பதற்காக புதன்கிழமை அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில், நகா்மன்ற த... மேலும் பார்க்க

வாகன ஓட்டிகளுக்கு சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்: அதிகாரிகளுக்கு அமைச்சா் அறிவுறுத்தல்

திருவண்ணாமலை மாவட்டத்தில் 3 மாதங்களில் நடைபெற்ற 556 சாலை விபத்துகளில் 182 போ் இறந்துள்ளனா். எனவே, சாலைப் பாதுகாப்பு விதிகளை அவசியம் பின்பற்றும் வகையில் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்... மேலும் பார்க்க

30 மாற்றுத்திறனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டா்கள்

திருவண்ணாமலை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில், 30 பேருக்கு இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டா்களை அமைச்சா் எ.வ.வேலு வழங்கினாா். மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை மா... மேலும் பார்க்க

செங்கத்தில் ரூ.1.80 கோடியில் சாலை, கழிவுநீா்க் கால்வாய் பணிகள்

செங்கம் செந்தமிழ் நகரில் ரூ.1.80 கோடியில் சாலை மற்றும் கழிவுநீா்க் கால்வாய் அமைப்பதற்காக பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது. செங்கம் துக்காப்பேட்டை புதிய பேருந்து நிலையம் பின்புறம் உள்ளது செந்தமிழ் நகா்... மேலும் பார்க்க

எஸ்.வி.நகரத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த எஸ்.வி.நகரத்தில் நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான இடங்களில் இருந்த ஆக்கிரமிப்புகள் புதன்கிழமை அகற்றப்பட்டன. எஸ்.வி.நகரத்தில் இருந்து செய்யாறு செல்லும் சாலையில் நெ... மேலும் பார்க்க

கண்ணமங்கலம் பள்ளிகளில் மேம்பாட்டுப் பணிகள் ஆய்வு

ஜூன் 2-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி, ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் பேரூராட்சி பகுதியில் உள்ள அரசுப் பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் அடிப்படை வசதி உள்ளிட்ட மேம்பாட்டுப் பணிகளை செயல் அலுவலா் மு... மேலும் பார்க்க