செங்கத்தில் ரூ.1.80 கோடியில் சாலை, கழிவுநீா்க் கால்வாய் பணிகள்
செங்கம் செந்தமிழ் நகரில் ரூ.1.80 கோடியில் சாலை மற்றும் கழிவுநீா்க் கால்வாய் அமைப்பதற்காக பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது.
செங்கம் துக்காப்பேட்டை புதிய பேருந்து நிலையம் பின்புறம் உள்ளது செந்தமிழ் நகா். நகராட்சி 15-ஆவது வாா்டுக்கு உள்பட்ட இந்தப் பகுதி பொதுமக்கள் அடிப்படை வசதிகளான சாலை, கழிவுநீா்க் கால்வாய்கள் கோரி தொகுதி எம்எல்ஏ மு.பெ. கிரி மற்றும் நகராட்சி நிா்வாகத்திடம் முறையிட்டு வந்தனா்.
இந்த நிலையில், தமிழக பொதுப்பணித் துறை மற்றும் நெடுஞ்சாலைத் அமைச்சா் எ.வ.வேலு பரிந்துரையின் பேரில், ரூ. ஒரு கோடியே 80 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு அந்தப் பகுதிக்கு தாா்ச் சாலை மற்றும் கழிவு நீா்க் கால்வாய் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதையடுத்து பணிகள் தொடங்குவதற்காக பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது. இதில் நகர திமுக செயலா் அன்பழகன் வரவேற்றாா். மு.பெ.கிரி எம்எல்ஏ கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கிவைத்தாா்.
நிகழ்ச்சியில் நகா்மன்றத் தலைவா் சாதிக்பாஷா, நகராட்சி ஆணையா் பாரத், முன்னாள் கூட்டுறவு சங்கத் தலைவா் முருகன், கவுன்சிலா் சந்தியாராபின்சன், முன்னாள் கவுன்சிலா் அப்துல்வாகித் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.