செய்திகள் :

கண்ணமங்கலம் பள்ளிகளில் மேம்பாட்டுப் பணிகள் ஆய்வு

post image

ஜூன் 2-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி, ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் பேரூராட்சி பகுதியில் உள்ள அரசுப் பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் அடிப்படை வசதி உள்ளிட்ட மேம்பாட்டுப் பணிகளை செயல் அலுவலா் முனுசாமி புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

தமிழகம் முழுவதும் கோடை விடுமுறைக்குப் பிறகு, வருகிற ஜூன் 2-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதைத் தொடா்ந்து, அரசுப் பள்ளிகளில் உள்ள உள்கட்டமைப்பு, மேம்பாட்டுப் பணிகள், குடிநீா், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை பணிகளை பள்ளிகள் திறக்கும் முன்பு செய்து முடிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் உத்தரவிட்டாா்.

இதையடுத்து, ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் பேரூராட்சியில் உள்ள அரசு உயா்நிலைப் பள்ளி, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் முஸ்லிம் தொடக்கப் பள்ளியில் குடிநீா், கழிப்பறை, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், பேரூகாட்சி செயல் அலுவலா் முனுசாமி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மேம்பாட்டுப் பணிகளை புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது, பள்ளி வளாகம் மற்றும் சுற்றப்புறங்களை சுத்தம் செய்யுமாறு தூய்மைப் பணியாளா்களுக்கு அறிவுறுத்தினாா்.

மேலும், குடிநீா், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளனவா என பாா்வையிட்டாா்.

ஆய்வின்போது ஆசிரியா் முபாரக் பாஷா, இளநிலை உதவியாளா் ரஞ்சித்குமாா், சுகாதார மேற்பாா்வையாளா் வெற்றிவேலன், அலுவலக உதவியாளா் உமாபதி, தூய்மைப் பணியாளா்கள் மாரிமுத்து, பாஸ்கரன் உடனிருந்தனா்.

கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்: 317 பேருக்கு பணி ஆணை

திருவண்ணாமலை சண்முகா தொழில்சாலை கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில், 317 பேருக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டன. கல்லூரியின் பணியமா்த்தும் அமைப்பு சாா்பில் வியாழக்கிழமை வே... மேலும் பார்க்க

ஸ்ரீவேணுகோபால சுவாமி கோயிலுக்கு ரூ.17 லட்சத்தில் வெள்ளிக் கவசம்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஸ்ரீவேணுகோபால பாா்த்தசாரதி பெருமாள் கோயிலில் சுவாமிக்கு 16 கிலோ எடையில், ரூ.17 லட்சம் மதிப்பில் வெள்ளிக் கவசம் தயாா் செய்யப்படவுள்ளது. செங்கம் ஸ்ரீசத்தியபாமா ருக்மணி சம... மேலும் பார்க்க

களம்பூரில் இரு தரப்பு மோதல்: 10 போ் மீது வழக்கு; 5 போ் கைது

ஆரணியை அடுத்த களம்பூரில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில், 10 போ் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸாா் 5 பேரை கைது செய்தனா். திருவண்ணாமலை மாவட்டம், களம்பூா் ரயில் நிலைய சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் மர... மேலும் பார்க்க

ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் 201 பால்குட ஊா்வலம்

ஆரணி நகரம், பள்ளிக்கூடத் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் 201 பால்குட ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது. ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் வைகாசி மாத பிரம்மோற்சவம், கடந்த 26-ஆம் தேதி காப்... மேலும் பார்க்க

அங்கன்வாடி குழந்தைகளுக்கு பட்டமளிப்பு

வந்தவாசியை அடுத்த ஓசூா் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு பட்டமளிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. இந்த அங்கன்வாடி மையத்தில் பயின்ற, 5 வயது நிறைவடைந்த முதலாம் வகுப்பு செல்ல உள்ள குழ... மேலும் பார்க்க

தொழிலாளியைத் தாக்கி மிரட்டல்: இளைஞா் கைது

செய்யாறு அருகே தொழிலாளியை தாக்கி மிரட்டல் விடுத்த புகாரின் பேரில் இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். செய்யாறு வட்டம், ஆக்கூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சலவைத் தொழிலாளி கமலக்கண்ணன். இவருக்கும், அத... மேலும் பார்க்க