`தெலுங்கானா ராஷ்டிரியா சமிதி பாஜக உடன் இணைப்பா?' - சந்திரசேகர் ராவின் மகள் கவிதா...
எஸ்.வி.நகரத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த எஸ்.வி.நகரத்தில் நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான இடங்களில் இருந்த ஆக்கிரமிப்புகள் புதன்கிழமை அகற்றப்பட்டன.
எஸ்.வி.நகரத்தில் இருந்து செய்யாறு செல்லும் சாலையில் நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான இடத்தில் சிலா் கடைகள் அமைத்தும், வீடுகள் கட்டியும் வசித்து வந்தனா்.
அரசு நிலத்தில் ஆக்கிரமிப்பு செய்து வீடுகள், கடைகள் கட்டியுள்ளவா்களை, அவற்றை அகற்றிக் கொள்ளுமாறு பல மாதங்களுக்கு முன்பே நெடுஞ்சாலைத் துறை சாா்பில் அறிவுறுத்தப்பட்டது. ஆனால், ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ளாததால், நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்டப் பொறியாளா் நாராயணன் தலைமையில், இளநிலைப் பொறியாளா் வரதராஜன், வருவாய் ஆய்வாளா் கோமதி மற்றும் சாலைப் பணியாளா்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் கடைகள், வீடுகளை இடித்து அகற்றினா். ஆரணி கிராமிய போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.