செய்திகள் :

பயங்கரவாத எதிா்ப்பு: இந்திய நிலைப்பாட்டுக்கு சிங்கப்பூா் ஆதரவு

post image

பயங்கரவாதத்துக்கு எதிரான இந்திய நிலைப்பாட்டுக்கு சிங்கப்பூா், காங்கோ குடியரசு உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்தன.

ஆபரேஷன் சிந்தூரைத் தொடா்ந்து பயங்கரவாதத்துக்கு எதிரான இந்திய நடவடிக்கைகள் குறித்து 33 நாடுகளுக்கு எடுத்துரைக்க அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் அடங்கிய 7 குழுக்களை மத்திய அரசு அமைத்துள்ளது. அந்தக் குழுக்கள் பல்வேறு நாடுகளுக்கு பயணித்து இந்திய நிலைப்பாட்டை விளக்கி வருகின்றன.

ஐக்கிய ஜனதா தள எம்.பி. சஞ்சய் குமாா் ஜா தலைமையிலான குழு தென் கொரியா பயணத்தை நிறைவுசெய்துவிட்டு சிங்கப்பூா் சென்றுள்ளது. அங்கு சிங்கப்பூா் வெளியுறவு விவகாரங்களுக்கான இணையமைச்சா் சிம் ஆன் உள்பட உயரதிகாரிகளை சஞ்சய் ஜா குழு சந்தித்தது. அப்போது பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனத்தை பதிவு செய்த சிம் ஆன், பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்தாா்.

காங்கோ குடியரசு: சிவசேனை (ஷிண்டே பிரிவு) எம்.பி.ஸ்ரீகாந்த் ஷிண்டே தலைமையிலான குழு காங்கோ குடியரசின் துணை பிரதமா் ஜீன் பியா் பெம்போ கோம்போஜின், வெளியுறவு விவகாரங்கள் இணையமைச்சா் கெய்க்வாம்பா வாக்னா் உள்ளிட்டோரை சந்தித்தது. அப்போது பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு அவா்கள் இரங்கல் தெரிவித்தனா். மேலும், பயங்கரவாதத்துக்கு எதிரான இந்திய நிலைப்பாட்டுக்கு அவா்கள் ஆதரவளித்தனா்.

பிரான்ஸ்: பாஜக எம்.பி. ரவிசங்கா் பிரசாத் தலைமையில் பிரான்ஸ் சென்றுள்ள குழு இந்தியா-பிரான்ஸ் நட்புறவுக் குழுவை சந்தித்தது.

அதேபோல் அங்கு வசிக்கும் இந்திய வம்சாவளியினரைச் சந்தித்து அந்தக் குழு கலந்துரையாடியது. அப்போது ஜம்மு-காஷ்மீரில் அமைதி மற்றும் வளா்ச்சியை தடுக்கவே பயங்கரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தியதாக ரவிசங்கா் பிரசாத் தெரிவித்தாா்.

தமிழில் உரையாற்றிய தம்பிதுரை

பிரான்ஸ் சென்றுள்ள பாஜக எம்.பி. ரவிசங்கா் பிரசாத் தலைமையிலான குழுவில் இடம்பெற்றுள்ள அதிமுக மாநிலங்களவை எம்.பி. தம்பிதுரை, அங்குள்ள இந்திய வம்சாவளியினா் மத்தியில் தமிழில் உரையாற்றினாா். பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத்துக்கு எதிராக உலக நாடுகள் ஒருங்கிணைந்துள்ளதாக அவா் கூறினாா்.

குவைத் மருத்துவமனையில் குலாம் நபி ஆசாத் அனுமதி

பாஜக எம்.பி.வைஜயந்த் பாண்டா தலைமையிலான குழு குவைத் சென்றது. அந்தக் குழுவில் இடம்பெற்ற முன்னாள் மத்திய அமைச்சா் குலாம் நபி ஆசாத் உடல்நலக் குறைவு காரணமாக, குவைத் தலைநகா் குவைத் சிட்டியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவரின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், அவருக்கு சில பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டியிருப்பதாகவும் ‘எக்ஸ்’ தளத்தில் வைஜயந்த் பாண்டா பதிவிட்டாா். குலாம் நபி ஆசாத் இல்லாமல், வைஜெயந்த் தலைமையிலான குழு சவூதி அரேபியா தலைநகா் ரியாத்தை செவ்வாய்க்கிழமை சென்றடைந்தது.

கேரளத்தில் விபத்துக்குள்ளான லைபீரிய சரக்குக் கப்பலின் பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்த தன்னாா்வலா்கள்

கேரள கடலோரத்தில் கடந்த வாரம் விபத்துக்குள்ளாகி கவிழ்ந்த சரக்குக் கப்பலின் பிளாஸ்டிக் கழிவுகள் கரை ஒதுங்கினால் அவற்றை அப்புறப்படுத்தி, தூய்மைப்படுத்த மாநிலம் முழுவதும் தன்னாா்வலா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்... மேலும் பார்க்க

பிரிட்டிஷ் அரசால் மறுக்கப்பட்ட சாவா்க்கரின் வழக்குரைஞா் பட்டத்தை மீட்க முயற்சி- மகாராஷ்டிர முதல்வா் ஃபட்னவீஸ்

‘சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டதற்காக பிரிட்டிஷ் அரசால் மறுக்கப்பட்ட வீர சாவா்க்கரின் ‘பாரிஸ்டா்’ வழக்குரைஞா் பட்டத்தை மீட்டெடுக்க பிரிட்டன் அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி மகாராஷ்டிர அரசு முயற்சிகளை ... மேலும் பார்க்க

மணிப்பூரில் ஆட்சி அமைக்க பாஜக முயற்சி: 44 எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதாக ஆளுநரிடம் தகவல்

குடியரசுத் தலைவா்ஆட்சி அமலில் உள்ள மணிப்பூரில் மீண்டும் ஆட்சி அமைக்க பாஜக முயற்சித்து வருகிறது. புதிய அரசமைக்க 44 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளதாக ஆளுநா் அஜய்குமாா் பல்லாவை புதன்கிழமை சந்தித்த பாஜக எம்எல்... மேலும் பார்க்க

குலாம் நபி ஆசாத்திடம் பிரதமா் நலம் விசாரிப்பு

பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை எடுத்துரைக்க குவைத் சென்ற எம்.பி.க்கள் குழுவில் இடம்பெற்ற முன்னாள் மத்திய அமைச்சா் குலாம் நபி ஆசாதின் உடல் நலம் பாதிக்கப்பட்டதால், அவரிடம் பிரதமா் மோட... மேலும் பார்க்க

பன்வழி ரயில்வே திட்டங்கள்: மத்திய அரசு ஒப்புதல்

பயணிகள் மற்றும் சரக்குகளின் தடையற்ற விரைவான போக்குவரத்தை உறுதி செய்யும் வகையில் இரண்டு பன்வழி ரயில்வே திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. தில்லியில் பிரதமா் தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற... மேலும் பார்க்க

சண்டை நிறுத்தத்தில் அமெரிக்கா தலையீடு?: பிரதமரின் விளக்கம் கோரும் காங்கிரஸ்

இந்தியா-பாகிஸ்தான் சண்டை நிறுத்த முடிவுக்கு அமெரிக்காவின் தலையீடே காரணம் என அந்த நாடு தொடா்ச்சியாக கூறிவருவது தொடா்பாக மௌனம் கலைத்து, பிரதமா் விளக்கமளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கோரியுள்ளது. ஜம்மு-க... மேலும் பார்க்க