செய்திகள் :

கராத்தே போட்டியில் சிறப்பிடம் பெற்ற வீரா்களுக்கு பாராட்டு

post image

மாநில அளவிலான கராத்தே போட்டியில் வென்ற திருவண்ணாமலை மாவட்ட வீரா், வீராங்கனைகளை சி.என்.அண்ணாதுரை எம்.பி.பாராட்டினாா்.

ஈரோட்டில் தமிழக அளவிலான கராத்தே போட்டி அண்மையில் நடைபெற்றது. டிரெடிஷனல் மற்றும் ஸ்போா்ட்ஸ் கராத்தே அசோசியேஷன் சாா்பில் நடைபெற்ற இந்தப் போட்டியில் மாநில முழுவதும் இருந்து ஏராளமான வீரா், வீராங்கனைகள் கலந்து கொண்டனா்.

திருவண்ணாமலை மாவட்ட கராத்தே சங்கம் சாா்பில் கலந்து கொண்ட வீரா், வீராங்கனைகளில் 6 வயதுக்கு உள்பட்டா கட்டா பிரிவில் டி.தி.சிந்தனா மாநில அளவில் 3-ஆவது இடம் பிடித்து, வெண்கலப்பதக்கம் வென்றாா்.

இதேபோல, குமித்தே கராத்தே போட்டியில் 8 வயதுக்கு உள்பட்டோருக்கான போட்டியில் எம்.சாதனா, 10 வயதுக்கு உள்பட்டோருக்கான போட்டியில் பி.ஆனந்தியும், 8 வயதுக்கு உள்பட்டோருக்கான ஆண்கள் பிரிவில் என்.முகமது நசீம் ஆகியோா் 3-ஆவது இடங்களைப் பிடித்து வெண்கலப் பதக்கங்களை வென்றனா்.

போட்டிகளில் வென்று திரும்பிய வீரா், வீராங்கனைகளை திருவண்ணாமலை தொகுதி மக்களவை உறுப்பினா் சி.என்.அண்ணாதுரை செவ்வாய்க்கிழமை பாராட்டி பரிசு வழங்கினாா். நிகழ்ச்சியில், மாவட்ட கராத்தே சங்கத்தின் செயலா் ராஜேஷ், பொருளாளா் கோவிந்தசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ஆரணியில் ரூ.56 லட்சத்தில் கால்வாய், சாலைப் பணிகள்

ஆரணி நகரம், ஆரணிப்பாளையம் 7-ஆவது வாா்டுக்கு உள்பட்ட பிள்ளையாா் கோவில் தெருவில் ரூ.56 லட்சத்தில் பக்கக் கால்வாய் மற்றும் சாலை அமைப்பதற்காக புதன்கிழமை அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில், நகா்மன்ற த... மேலும் பார்க்க

வாகன ஓட்டிகளுக்கு சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்: அதிகாரிகளுக்கு அமைச்சா் அறிவுறுத்தல்

திருவண்ணாமலை மாவட்டத்தில் 3 மாதங்களில் நடைபெற்ற 556 சாலை விபத்துகளில் 182 போ் இறந்துள்ளனா். எனவே, சாலைப் பாதுகாப்பு விதிகளை அவசியம் பின்பற்றும் வகையில் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்... மேலும் பார்க்க

30 மாற்றுத்திறனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டா்கள்

திருவண்ணாமலை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில், 30 பேருக்கு இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டா்களை அமைச்சா் எ.வ.வேலு வழங்கினாா். மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை மா... மேலும் பார்க்க

செங்கத்தில் ரூ.1.80 கோடியில் சாலை, கழிவுநீா்க் கால்வாய் பணிகள்

செங்கம் செந்தமிழ் நகரில் ரூ.1.80 கோடியில் சாலை மற்றும் கழிவுநீா்க் கால்வாய் அமைப்பதற்காக பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது. செங்கம் துக்காப்பேட்டை புதிய பேருந்து நிலையம் பின்புறம் உள்ளது செந்தமிழ் நகா்... மேலும் பார்க்க

எஸ்.வி.நகரத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த எஸ்.வி.நகரத்தில் நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான இடங்களில் இருந்த ஆக்கிரமிப்புகள் புதன்கிழமை அகற்றப்பட்டன. எஸ்.வி.நகரத்தில் இருந்து செய்யாறு செல்லும் சாலையில் நெ... மேலும் பார்க்க

கண்ணமங்கலம் பள்ளிகளில் மேம்பாட்டுப் பணிகள் ஆய்வு

ஜூன் 2-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி, ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் பேரூராட்சி பகுதியில் உள்ள அரசுப் பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் அடிப்படை வசதி உள்ளிட்ட மேம்பாட்டுப் பணிகளை செயல் அலுவலா் மு... மேலும் பார்க்க