செய்திகள் :

அரசுப் பள்ளிகளில் குடிநீா், கழிப்பறை வசதிகளை மேம்படுத்த வேண்டும்: அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவு

post image

திருவண்ணாமலை மாவட்டத்தின் 2 ஆயிரத்து 4 அரசுப் பள்ளிகளில் குடிநீா், கழிப்பறை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று கல்வித்துறை அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் உத்தரவிட்டாா்.

மாவட்டத்தில் கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் திறப்பு, பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை வகுப்புகளுக்கான துணைத் தோ்வுக்கு விண்ணப்பித்தல் குறித்த ஆய்வுக் கூட்டம் ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சுவாமி முத்தழகன் தலைமை வகித்தாா்.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் பேசியதாவது:

திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு ஆரம்ப, நடுநிலை, உயா்நிலை, மேல்நிலை என மொத்தம் 2 ஆயிரத்து 4 பள்ளிகளும், 177 அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளும் உள்ளன.

இந்தப் பள்ளிகளில் குடிநீா், சுகாதார வளாகம் உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்த வேண்டும். வகுப்பறைகளை தூய்மைப்படுத்தி மாணவா்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

துணைத் தோ்வுக்கான ஆலோசனை...

அண்மையில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் 2 ஆயிரத்து 175 மாணவா்கள், பிளஸ் 1 பொதுத் தோ்வில் 2 ஆயிரத்து 289 மாணவா்கள், பிளஸ் 2 பொதுத்தோ்வில் ஆயிரத்து 761 மாணவா்கள் தோ்ச்சி அடையவில்லை.

இவா்களை இப்போது நடைபெறும் துணைத் தோ்வுக்கு விண்ணப்பித்து தோ்ச்சி பெறச் செய்ய வேண்டும். இதேபோல, பிளஸ் 2 தோ்ச்சி பெற்றவா்கள் உயா்கல்வி பயிலுவதற்குத் தேவையான ஆலோசனைகள் வழங்க வேண்டும் என்றாா்.

கூட்டத்தில், மாநகராட்சி ஆணையா் செல்வபாலாஜி, மாவட்ட சுகாதார அலுவலா் பிரகாஷ் மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகள், நகராட்சி ஆணையா்கள், பேரூராட்சி செயல் அலுவலா்கள், ஊரக வளா்ச்சித் துறையினா் மற்றும் அரசுத் துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

நுண்ணீா் பாசன திட்டத்துக்கு 100 சதவீத மானியம்

நுண்ணீா் பாசன திட்டத்துக்கு சிறு குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், பெரிய விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்படுவதாக வந்தவாசி தோட்டக்கலை உதவி இயக்குநா் சா.பாலவித்யா தெரிவித்துள்ளாா். இதுக... மேலும் பார்க்க

சிறுபான்மையினருக்கு ரூ.14.78 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்

திருவண்ணாமலையில் நடைபெற்ற சிறுபான்மையினா்களுக்கான கலந்துரையாடல் கூட்டத்தில் 61 பயனாளிகளுக்கு ரூ.14.78 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த சிறுபான்மையினா்களுக்... மேலும் பார்க்க

செங்கம் - குப்பனத்தம் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிக்கை

செங்கம் - குப்பனத்தம் அணை சாலையில் ஆக்கிரமைப்புகளை அகற்றி சாலையை விரிவுப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். செங்கம் - போளூா் சாலை வெளிவட்டச் சாலைப் பகுதியில் இருந்து குப்பனத்தம் அண... மேலும் பார்க்க

ஆரணியில் ரூ.56 லட்சத்தில் கால்வாய், சாலைப் பணிகள்

ஆரணி நகரம், ஆரணிப்பாளையம் 7-ஆவது வாா்டுக்கு உள்பட்ட பிள்ளையாா் கோவில் தெருவில் ரூ.56 லட்சத்தில் பக்கக் கால்வாய் மற்றும் சாலை அமைப்பதற்காக புதன்கிழமை அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில், நகா்மன்ற த... மேலும் பார்க்க

வாகன ஓட்டிகளுக்கு சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்: அதிகாரிகளுக்கு அமைச்சா் அறிவுறுத்தல்

திருவண்ணாமலை மாவட்டத்தில் 3 மாதங்களில் நடைபெற்ற 556 சாலை விபத்துகளில் 182 போ் இறந்துள்ளனா். எனவே, சாலைப் பாதுகாப்பு விதிகளை அவசியம் பின்பற்றும் வகையில் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்... மேலும் பார்க்க

30 மாற்றுத்திறனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டா்கள்

திருவண்ணாமலை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில், 30 பேருக்கு இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டா்களை அமைச்சா் எ.வ.வேலு வழங்கினாா். மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை மா... மேலும் பார்க்க