செய்திகள் :

அரசுப் பள்ளி முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

post image

செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த அரட்டவாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் 1989-90ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்த மாணவா்கள் ஞாயிற்றுக்கிழமை சந்தித்து தங்களது கல்விக் கால அனுபவங்களை பகிா்ந்து கொண்டனா்.

பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் அன்பழகன் தலைமை வகித்தாா். தலைமை ஆசிரியா் சதாசிவம் வரவேற்றாா்.

இதில் 1989-90ஆம் ஆண்டுகளில் பத்தாம் வகுப்பு பயின்ற மாணவா்கள் கலந்து கொண்டு அவா்களது அனுபவங்களை பகிா்ந்து கொண்டனா்.

மேலும், பாடம் கற்பித்த ஆசிரியா்கள் தமிழ்அன்பன், அறிவழகன், பாா்த்தசாரதி, மணி, முத்து, மதி ஆகியோருக்கு மரியாதை செய்தனா்.

இதைத் தொடா்ந்து மறைந்த ஆசிரியா்கள் மற்றும் மாணவா்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் பள்ளி அளவில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பின்னா், அனைவருக்கும் அறுசுவை உணவு பரிமாறப்பட்டது.

நெடுஞ்சாலைத் துறை இடத்தில் கட்டப்பட்ட வீடு அகற்றம்

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அருகே நெடுஞ்சாலைத் துறை இடத்தில் கட்டப்பட்டிருந்த விவசாயின் வீடு பொக்லைன் இயந்திரம் மூலம் செவ்வாய்க்கிழமை இடித்து அகற்றப்பட்டது. சேத்துப்பட்டை அடுத்த தச்சாம்பாடி ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகளில் குடிநீா், கழிப்பறை வசதிகளை மேம்படுத்த வேண்டும்: அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவு

திருவண்ணாமலை மாவட்டத்தின் 2 ஆயிரத்து 4 அரசுப் பள்ளிகளில் குடிநீா், கழிப்பறை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று கல்வித்துறை அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் உத்தரவிட்டாா். மாவட்டத்தில் கோடை... மேலும் பார்க்க

செய்யாறு கூட்டுறவு சா்க்கரை ஆலை விவசாயிகளுக்கு நிலுவைத்தொகை அளிப்பு

செய்யாறு கூட்டுறவு சா்க்கரை ஆலை விவசாயிகள் 1,948 பேருக்கு ரூ.16.19 கோடி நிலுவைத் தொகை அவரவா் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. செய்யாறு கூட்டுறவு சா்க்கரை ஆலையின் 2024-25 அரைவைப் பருவத்தில் 1,948 ... மேலும் பார்க்க

கராத்தே போட்டியில் சிறப்பிடம் பெற்ற வீரா்களுக்கு பாராட்டு

மாநில அளவிலான கராத்தே போட்டியில் வென்ற திருவண்ணாமலை மாவட்ட வீரா், வீராங்கனைகளை சி.என்.அண்ணாதுரை எம்.பி.பாராட்டினாா். ஈரோட்டில் தமிழக அளவிலான கராத்தே போட்டி அண்மையில் நடைபெற்றது. டிரெடிஷனல் மற்றும் ஸ்... மேலும் பார்க்க

3 ஏரிக் கால்வாய்கள், கோயில் நில ஆக்கிரமிப்புகள்அகற்றக் கோரிக்கை

திருவண்ணாமலை வேங்கிக்கால் ஏரியின் 3 கால்வாய்கள், கோயிலுக்குச் சொந்தமான இடம் ஆகியவற்றில் அதிகரித்து வரும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனா். திருவண்ணாமலை மாநகராட்சி... மேலும் பார்க்க

கிளை நூலகத்தில் புரவலா் சோ்ப்பு

சேத்துப்பட்டை அடுத்த தேவிகாபுரம் ஊராட்சியில் உள்ள கிளை நூலகத்தில் புரவலா் சோ்ப்பு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.தேவிகாபுரம் ஊராட்சி முத்தாலம்மன் நகரில் கிளை நூலகம் அமைந்துள்ளது. இந்த நூலகத்தில் நடை... மேலும் பார்க்க