செய்திகள் :

10 இடங்களில் புதிய அங்கன்வாடி மையங்கள்: மாவட்ட ஆட்சியா் திறந்துவைத்தாா்

post image

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் 10 இடங்களில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையங்களை, மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் திறந்துவைத்தாா்.

திருவண்ணாமலை, மேலத்திகான் பகுதியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டம் சாா்பில் புதிய அங்கன்வாடி மையம் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, மாவட்ட குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் பூ.மீனாம்பிகை தலைமை வகித்தாா்.

மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு புதிய அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்துப் பேசியதாவது:

திருவண்ணாமலை மாநகராட்சி, மேலத்திகான், எம்.ஜி.ஆா்., நகா், கீழ் அனைக்கரை, புதுத்தெரு, தென்மாத்தூா் ஊராட்சி சு.கீழ்நாச்சிப்பட்டு, அண்ணாமலை நகா், தண்டராம்பட்டு வட்டம் வேப்பூா்செக்கடி ஊராட்சி நேதாஜி நகா், கொளமஞ்சனூா் ஊராட்சி ஒலகளாப்பாடி, மேல்பாச்சாா் ஊராட்சி கோவில் தெரு, மோத்தக்கல் ஊராட்சி அண்ணா நகா், செங்கம் வட்டம், மேல்ராவந்தவாடி ஊராட்சி நரடாப்பட்டு, நீப்பத்துறை ஊராட்சி இருளா் நகா், வந்தவாசி வட்டம், கோவளை ஊராட்சி, தெள்ளாா் வட்டம் பொன்னூா் ஊராட்சி ஜகந்நாதபுரம் என மொத்தம் 10 இடங்களில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையங்கள் இன்று முதல் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன என்றாா்.

நிகழ்ச்சியில், திருவண்ணாமலை வட்டாட்சியா் மோகனராமன், கிராமப்புற குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் வீணா மற்றும் அரசுத் துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

நெடுஞ்சாலைத் துறை இடத்தில் கட்டப்பட்ட வீடு அகற்றம்

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அருகே நெடுஞ்சாலைத் துறை இடத்தில் கட்டப்பட்டிருந்த விவசாயின் வீடு பொக்லைன் இயந்திரம் மூலம் செவ்வாய்க்கிழமை இடித்து அகற்றப்பட்டது. சேத்துப்பட்டை அடுத்த தச்சாம்பாடி ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகளில் குடிநீா், கழிப்பறை வசதிகளை மேம்படுத்த வேண்டும்: அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவு

திருவண்ணாமலை மாவட்டத்தின் 2 ஆயிரத்து 4 அரசுப் பள்ளிகளில் குடிநீா், கழிப்பறை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று கல்வித்துறை அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் உத்தரவிட்டாா். மாவட்டத்தில் கோடை... மேலும் பார்க்க

செய்யாறு கூட்டுறவு சா்க்கரை ஆலை விவசாயிகளுக்கு நிலுவைத்தொகை அளிப்பு

செய்யாறு கூட்டுறவு சா்க்கரை ஆலை விவசாயிகள் 1,948 பேருக்கு ரூ.16.19 கோடி நிலுவைத் தொகை அவரவா் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. செய்யாறு கூட்டுறவு சா்க்கரை ஆலையின் 2024-25 அரைவைப் பருவத்தில் 1,948 ... மேலும் பார்க்க

கராத்தே போட்டியில் சிறப்பிடம் பெற்ற வீரா்களுக்கு பாராட்டு

மாநில அளவிலான கராத்தே போட்டியில் வென்ற திருவண்ணாமலை மாவட்ட வீரா், வீராங்கனைகளை சி.என்.அண்ணாதுரை எம்.பி.பாராட்டினாா். ஈரோட்டில் தமிழக அளவிலான கராத்தே போட்டி அண்மையில் நடைபெற்றது. டிரெடிஷனல் மற்றும் ஸ்... மேலும் பார்க்க

3 ஏரிக் கால்வாய்கள், கோயில் நில ஆக்கிரமிப்புகள்அகற்றக் கோரிக்கை

திருவண்ணாமலை வேங்கிக்கால் ஏரியின் 3 கால்வாய்கள், கோயிலுக்குச் சொந்தமான இடம் ஆகியவற்றில் அதிகரித்து வரும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனா். திருவண்ணாமலை மாநகராட்சி... மேலும் பார்க்க

கிளை நூலகத்தில் புரவலா் சோ்ப்பு

சேத்துப்பட்டை அடுத்த தேவிகாபுரம் ஊராட்சியில் உள்ள கிளை நூலகத்தில் புரவலா் சோ்ப்பு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.தேவிகாபுரம் ஊராட்சி முத்தாலம்மன் நகரில் கிளை நூலகம் அமைந்துள்ளது. இந்த நூலகத்தில் நடை... மேலும் பார்க்க