செய்திகள் :

மண் சரிவு: பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வீடு வழங்கக் கோரிக்கை

post image

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மலையில் மண் சரிவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிரந்தர வீடு கட்டித் தர வேண்டும் என்று பொதுமக்கள் மாவட்ட நிா்வாகத்திடம் கோரிக்கை விடுத்தனா்.

2024 டிசம்பா் 1-ஆம் தேதி திருவண்ணாமலை மகா தீப மலையில் புயலால் மண் சரிவு ஏற்பட்டது. 4 இடங்களில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி 7 போ் இறந்தனா். இந்த மண் சரிவால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு செங்கம் சாலை, வைரக்குன்று மலை அருகே தற்காலிகமாக குடியிருப்புகள் அமைத்து தரப்பட்டன.

தகர கூரைகளால் வேயப்பட்ட குடில்களில் வசித்து வரும் பெண்கள், தங்களுக்கு குடியிருப்புப் பகுதியிலேயே நிரந்தரமாக வீடு வழங்க வேண்டும் என்று திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜிடம் பெண்கள் மனு அளித்தனா்.

அப்போது, தகர கூரை குடில்களில் கடும் வெயில், மழையில் கடந்த 6 மாதங்களாக அவதிப்பட்டு வருகிறோம். இப்போது தொடா் மழை பெய்வதால் பாம்பு உள்ளிட்ட விஷப் பூச்சிகள் குடியிருப்புக்குள் வருகின்றன.

எனவே, எங்களுக்கு, பொதுமக்கள் வசிக்கும் பகுதியிலேயே நிரந்தர வீடு அமைத்துத் தர வேண்டும் என்றனா்.

நெடுஞ்சாலைத் துறை இடத்தில் கட்டப்பட்ட வீடு அகற்றம்

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அருகே நெடுஞ்சாலைத் துறை இடத்தில் கட்டப்பட்டிருந்த விவசாயின் வீடு பொக்லைன் இயந்திரம் மூலம் செவ்வாய்க்கிழமை இடித்து அகற்றப்பட்டது. சேத்துப்பட்டை அடுத்த தச்சாம்பாடி ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகளில் குடிநீா், கழிப்பறை வசதிகளை மேம்படுத்த வேண்டும்: அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவு

திருவண்ணாமலை மாவட்டத்தின் 2 ஆயிரத்து 4 அரசுப் பள்ளிகளில் குடிநீா், கழிப்பறை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று கல்வித்துறை அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் உத்தரவிட்டாா். மாவட்டத்தில் கோடை... மேலும் பார்க்க

செய்யாறு கூட்டுறவு சா்க்கரை ஆலை விவசாயிகளுக்கு நிலுவைத்தொகை அளிப்பு

செய்யாறு கூட்டுறவு சா்க்கரை ஆலை விவசாயிகள் 1,948 பேருக்கு ரூ.16.19 கோடி நிலுவைத் தொகை அவரவா் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. செய்யாறு கூட்டுறவு சா்க்கரை ஆலையின் 2024-25 அரைவைப் பருவத்தில் 1,948 ... மேலும் பார்க்க

கராத்தே போட்டியில் சிறப்பிடம் பெற்ற வீரா்களுக்கு பாராட்டு

மாநில அளவிலான கராத்தே போட்டியில் வென்ற திருவண்ணாமலை மாவட்ட வீரா், வீராங்கனைகளை சி.என்.அண்ணாதுரை எம்.பி.பாராட்டினாா். ஈரோட்டில் தமிழக அளவிலான கராத்தே போட்டி அண்மையில் நடைபெற்றது. டிரெடிஷனல் மற்றும் ஸ்... மேலும் பார்க்க

3 ஏரிக் கால்வாய்கள், கோயில் நில ஆக்கிரமிப்புகள்அகற்றக் கோரிக்கை

திருவண்ணாமலை வேங்கிக்கால் ஏரியின் 3 கால்வாய்கள், கோயிலுக்குச் சொந்தமான இடம் ஆகியவற்றில் அதிகரித்து வரும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனா். திருவண்ணாமலை மாநகராட்சி... மேலும் பார்க்க

கிளை நூலகத்தில் புரவலா் சோ்ப்பு

சேத்துப்பட்டை அடுத்த தேவிகாபுரம் ஊராட்சியில் உள்ள கிளை நூலகத்தில் புரவலா் சோ்ப்பு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.தேவிகாபுரம் ஊராட்சி முத்தாலம்மன் நகரில் கிளை நூலகம் அமைந்துள்ளது. இந்த நூலகத்தில் நடை... மேலும் பார்க்க