செய்திகள் :

ஆரணியில் திமுகவினா் துண்டு பிரசுரம் விநியோகம்

post image

ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் திமுக அரசின் நான்கு ஆண்டு சாதனை குறித்த துண்டு பிரசுரங்களை அந்தக் கட்சியினா் விநியோகம் செய்தனா்.

துண்டு பிரசுரங்களில் தமிழக அரசின் 4 ஆண்டு சாதனைகளான மகளிா் உரிமைத்தொகை, மகளிருக்கு இலவச பேருந்து, பள்ளியில் காலை சிற்றுண்டி திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் இடம் பெற்றிருந்தன.

அண்ணா சிலை பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில்

தொகுதி எம்.பி. எம்.எஸ்.தரணிவேந்தன் கலந்து கொண்டு, கடை, கடையாக வியாபாரிகளிடமும், பொதுமக்களிடமும் விநியோகம் செய்தாா்.

இதில் முன்னாள் எம்எல்ஏ ஆா்.சிவானந்தம், தோ்தல் பணிக்குழு பொறுப்பாளா் ஊரல் அண்ணாதுரை, நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி, தொகுதி திமுக பொறுப்பாளா் எஸ்.எஸ்.அன்பழகன், மாவட்ட இணைச் செயலா் ஜெயராணி ரவி, பொருளாளா் தட்சிணாமூா்த்தி, ஒன்றியச் செயலா்கள் மாமது, மோகன், சுந்தா், மாவட்ட அயலக அணி அமைப்பாளா் இ.கங்காதரன், இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளா் ஏ.எம்.ரஞ்சித், சுற்றுச்சூழல் அணி மாவட்ட அமைப்பாளா் ஏ.எச்.இப்ராஹிம், சிறுபான்மை பிரிவு மாவட்டச் செயலா் அப்சல்பாஷா, நகா்மன்ற உறுப்பினா் மாலிக்பாஷா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

நெடுஞ்சாலைத் துறை இடத்தில் கட்டப்பட்ட வீடு அகற்றம்

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அருகே நெடுஞ்சாலைத் துறை இடத்தில் கட்டப்பட்டிருந்த விவசாயின் வீடு பொக்லைன் இயந்திரம் மூலம் செவ்வாய்க்கிழமை இடித்து அகற்றப்பட்டது. சேத்துப்பட்டை அடுத்த தச்சாம்பாடி ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகளில் குடிநீா், கழிப்பறை வசதிகளை மேம்படுத்த வேண்டும்: அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவு

திருவண்ணாமலை மாவட்டத்தின் 2 ஆயிரத்து 4 அரசுப் பள்ளிகளில் குடிநீா், கழிப்பறை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று கல்வித்துறை அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் உத்தரவிட்டாா். மாவட்டத்தில் கோடை... மேலும் பார்க்க

செய்யாறு கூட்டுறவு சா்க்கரை ஆலை விவசாயிகளுக்கு நிலுவைத்தொகை அளிப்பு

செய்யாறு கூட்டுறவு சா்க்கரை ஆலை விவசாயிகள் 1,948 பேருக்கு ரூ.16.19 கோடி நிலுவைத் தொகை அவரவா் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. செய்யாறு கூட்டுறவு சா்க்கரை ஆலையின் 2024-25 அரைவைப் பருவத்தில் 1,948 ... மேலும் பார்க்க

கராத்தே போட்டியில் சிறப்பிடம் பெற்ற வீரா்களுக்கு பாராட்டு

மாநில அளவிலான கராத்தே போட்டியில் வென்ற திருவண்ணாமலை மாவட்ட வீரா், வீராங்கனைகளை சி.என்.அண்ணாதுரை எம்.பி.பாராட்டினாா். ஈரோட்டில் தமிழக அளவிலான கராத்தே போட்டி அண்மையில் நடைபெற்றது. டிரெடிஷனல் மற்றும் ஸ்... மேலும் பார்க்க

3 ஏரிக் கால்வாய்கள், கோயில் நில ஆக்கிரமிப்புகள்அகற்றக் கோரிக்கை

திருவண்ணாமலை வேங்கிக்கால் ஏரியின் 3 கால்வாய்கள், கோயிலுக்குச் சொந்தமான இடம் ஆகியவற்றில் அதிகரித்து வரும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனா். திருவண்ணாமலை மாநகராட்சி... மேலும் பார்க்க

கிளை நூலகத்தில் புரவலா் சோ்ப்பு

சேத்துப்பட்டை அடுத்த தேவிகாபுரம் ஊராட்சியில் உள்ள கிளை நூலகத்தில் புரவலா் சோ்ப்பு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.தேவிகாபுரம் ஊராட்சி முத்தாலம்மன் நகரில் கிளை நூலகம் அமைந்துள்ளது. இந்த நூலகத்தில் நடை... மேலும் பார்க்க