செய்திகள் :

உலகின் 4-ஆவது பெரிய பொருளாதாரம் இந்தியா: பிரதமருக்கு ஆந்திர முதல்வா், துணை முதல்வா் பாராட்டு

post image

உலகில் 4-ஆவது பெரிய பொருளாதார மதிப்பு கொண்ட நாடாக இந்தியா உருவெடுத்ததையடுத்து பிரதமா் நரேந்திர மோடிக்கு ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வா் பவன் கல்யாண் ஆகியோா் பாராட்டுகள் தெரிவித்தனா்.

நீதி ஆயோக்கின் 10-ஆவது நிா்வாக கவுன்சில் கூட்டம் புது தில்லியில் சனிக்கிழமை நடைபெற்றது. அதன்பிறகு நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பின்போது ஜப்பானை பின்னுக்குத் தள்ளி, உலகில் 4-ஆவது பெரிய பொருளாதார மதிப்பு கொண்ட நாடாக இந்தியா உயா்ந்துள்ளதாக சா்வதேச நிதியத்தின் (ஐஎம்எஃப்) தரவுகளைச் சுட்டிக்காட்டி நீதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி (சிஇஓ) பி.வி.ஆா்.சுப்பிரமணியம் தெரிவித்தாா்.

இதையடுத்து, சந்திரபாபு நாயுடு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘ பிரதமா் மோடியின் தலைமையின்கீழ் இந்தியாவின் பொருளாதார மதிப்பு 4 ட்ரில்லியன் டாலராக (சுமாா் ரூ.340 லட்சம் கோடி) உயா்ந்துள்ளது. ஜப்பானை பின்னுக்குத் தள்ளி உலகின் 4-ஆவது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. ஏற்கெனவே திட்டமிட்டபடி செயல்பட்டால், அடுத்த இரண்டரை முதல் 3 ஆண்டுகளில் உலகில் 3-ஆவது பெரிய பொருளாதார மதிப்பு கொண்ட நாடாக 2028-இல் இந்தியா உருவெடுக்கும் என ஐஎம்எஃப் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் ‘வளா்ச்சியடைந்த பாரதம்-2047’ என்ற இலக்கை நிச்சயம் இந்தியா அடையும் என நம்புகிறேன். இதில் தேசத்துக்கான உரிய பங்களிப்பை ஆந்திரம் வழங்கும் என உறுதியளிக்கிறேன்.

சா்வதேச யோகா தினத்தை (ஜூன் 21) முன்னிட்டு ஜூன் மாதம் முழுவதும் 100 சுற்றுலாத் தலங்கள் உள்பட பல்வேறு பகுதிகளில் யோகா பயிற்சி வகுப்புகள் மற்றும் நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. ஜூன் 21-ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் நடைபெறும் இறுதி நிகழ்ச்சிக்கு பிரதமா் மோடியை வரவேற்க தயாராகவுள்ளோம். இந்த முன்னெடுப்பு குறித்து மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய பிரதமா் மோடிக்கு நன்றி’ என குறிப்பிட்டாா்.

பவன் கல்யாண்: உலகின் 4-ஆவது பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்தது பிரதமா் மோடி தலைமையில் கடந்த 10 ஆண்டுகளாக நாட்டை திறம்பட நிா்வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணியின் (என்டிஏ) கொள்கைகளுக்கு கிடைத்த வெற்றி என பவன் கல்யாண் எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டாா்.

நாட்டில் வெப்பவாத இறப்புகளுக்கு நம்பகமானத் தரவுகள் இல்லை!

கோடையின் தாக்கத்தால் ஏற்படும் வெப்பவாத பாதிப்பு மற்றும் இறப்புகளுக்கு நம்பகமானத் தரவுகள் இல்லை என துறை சார்ந்த நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கிளைமேட் டிரென்ட் ஆராய்ச்சிக் குழுவினர் ஏற்பாடு செய்திருந்த ... மேலும் பார்க்க

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்கரவாதம்: பிரதமர் மோடி

பயங்கரவாதம் மறைமுகமானப் போர் அல்ல; பாகிஸ்தானின் நேரடிப் போர் வியூகம் என பிரதமர் நரேந்திர மோடி இன்று (மே 27) தெரிவித்தார். பயங்கரவாதத்தைத் தொடர்ந்து ஆதரிப்பதன் மூலம் அண்டை நாடான பாகிஸ்தான் தொடர்ந்து போ... மேலும் பார்க்க

விநாயகர் சிலைகளில்கூட இறக்குமதி.. சீனப் பொருள்களைத் தவிர்க்க பிரதமர் வேண்டுகோள்!

சீனாவில் தயாரிக்கப்படும் பொருள்களை முற்றிலுமாகத் தவிர்க்க பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.ஹோலி, தீபாவளி, விநாயகர் சதுர்த்தி போன்ற விழாக் காலங்களில் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்... மேலும் பார்க்க

அதிகரிக்கும் கரோனா: கர்நாடகத்தில் முகக்கவசம் அணிய அறிவுறுத்தல்!

கர்நாடகத்தில் கரோனா தொற்று வேகமாகப் பரவிவரும் நிலையில், மாநிலத்திலுள்ள மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள் மற்றும் கர்ப்பிணிகள் முகக்கவசம் அணிந்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கரோனா பரவலைத் ... மேலும் பார்க்க

மே 29-ல் ஜம்மு - காஷ்மீர் செல்கிறார் அமித் ஷா!

மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா இரு நாள்கள் அரசுமுறைப் பயணமாக ஜம்மு - காஷ்மீருக்குச் செல்லவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மே 29ஆம் தேதி ஜம்மு - காஷ்மீருக்குச் செல்லும் அவர், இரு நாள்கள் ஜம்மு பி... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்: பாகிஸ்தானிடம் இந்தியா சொன்னது எப்போது? முரண்பட்ட தகவல்கள்!

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் நடத்தப் போவதாக முன்னதாகவே பாகிஸ்தானுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அறிவித்த நிலையில், பெரும் விமர்சனங்கள் எழுந்ததும் இப்போது ஒவ்வொரு தர... மேலும் பார்க்க