செய்திகள் :

அதிகரிக்கும் கரோனா: கர்நாடகத்தில் முகக்கவசம் அணிய அறிவுறுத்தல்!

post image

கர்நாடகத்தில் கரோனா தொற்று வேகமாகப் பரவிவரும் நிலையில், மாநிலத்திலுள்ள மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள் மற்றும் கர்ப்பிணிகள் முகக்கவசம் அணிந்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கரோனா பரவலைத் தடுக்கும் வழிமுறைகள் குறித்து, அதிகாரிகள், அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை முதல்வர்களுடன் மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சரண் பிரகாஷ் இன்று (மே 27) ஆலோசனை மேற்கோண்டார்.

இதனைத் தொடந்து செய்தியாளர்களுடன் அமைச்சர் சரண் பிரகாஷ் பேசியதாவது,

''நாள்தோறும் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால், பொதுமக்கள் அச்சம்கொள்ளத் தேவையில்லை. கர்ப்பிணிப் பெண்கள், மூத்தக் குடிமக்கள் முகக்கவசம் அணிந்துகொள்ள வேண்டும். கரோனாவை எதிர்கொள்ள அரசு தயாராகவுள்ளது. மக்கள் அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும்.

கோடை விடுமுறை முடிந்து மாணவர்கள் பள்ளிக்குத் திரும்பவுள்ளனர். குழந்தைகளுக்கு காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தால் பள்ளிக்கு அனுப்ப வேண்டாம். பள்ளியில் இந்த அறிகுறிகள் மாணவர்களிடையே தென்பட்டால், பள்ளி நிர்வாகமும் உடனடியாக சம்பந்தப்பட்ட மாணவர்களை வீட்டிற்கு அனுப்பி பெற்றோரிடம் அறிவுறுத்த வேண்டும்.

மருத்துவக் கல்லூரி இயக்குநர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினோம். இதில், கரோனா பரிசோதனைக்கான அனைத்து வசதிகளையும் மருத்துவமனைகளில் தயார் நிலையில் வைத்திருக்க அறிவுறுத்தியுள்ளேன்.

கரோனா பரவலைக் கண்காணிக்க சோதனைக் கூடங்கள் அமைக்கப்பட்டு மண்டலவாரியாக பரிசோதனை நடத்தப்படுகிறது. ஆக்ஸிஜன் படுக்கை மற்றும் வென்டிலேட்டர் உள்ளிட்ட வசதிகள் உள்ள மருத்துவமனைகளின் தரவுகள் எடுக்கப்பட்டு வருகின்றன'' எனக் குறிப்பிட்டார்.

இதையும் படிக்க | 2026 இறுதிக்குள் நாட்டின் ஏற்றுமதி 1 டிரில்லியன் டாலராக அதிகரிக்கும்!

இறுதி ஆட்டம்: முப்படை தளபதிகளுக்கும் அழைப்பு

ஐபிஎல் போட்டியின் இறுதி ஆட்டத்தை நேரில் காண, இந்திய ராணுவம், விமானப் படை, கடற்படை ஆகியவற்றின் தளபதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.மேலும், அன்றைய நாளில் போட்டி... மேலும் பார்க்க

ஏஎம்சிஏ போர் விமானங்கள்: ரூ.15,000 கோடியில் தயாரிக்க ஒப்புதல்

நமது சிறப்பு நிருபர்நாட்டின் விமானப் படைக்கு ஐந்தாம் தலைமுறை தொழில்நுட்பத்தில் மேம்பட்ட நடுத்தர போர் விமானங்களை (ஏஎம்சிஏ) இந்திய தொழில்துறை கூட்டாண்மையுடன் (சிஐஐ) இணைந்து தயாரிக்கும் தற்சார்பு திட்டத்... மேலும் பார்க்க

கடன் சுமையால் ஒரே குடும்பத்தில் 7 போ் தற்கொலை- காருக்குள் 6 உடல்கள் மீட்பு

ஹரியாணாவில் கடன் சுமையால் மூன்று சிறாா்கள் உள்பட ஒரே குடும்பத்தில் 7 போ் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவா்களில் 6 பேரின் உடல்கள், காருக்குள் இருந்து மீட்கப்பட்டன. கார... மேலும் பார்க்க

ஆப்கானிஸ்தானியா்களுக்கு மீண்டும் இந்திய ‘விசா’

வணிகம், கல்வி மற்றும் மருத்துவச் சிகிச்சைக்காக இந்தியாவுக்கு பயணிக்க விரும்பும் ஆப்கானிஸ்தானியா்களுக்கு நுழைவு இசைவு (விசா) வழங்கும் சேவையை மத்திய அரசு மீண்டும் தொடங்கியுள்ளது. ஆப்கானிஸ்தானில் கடந்த 2... மேலும் பார்க்க

நவீன இந்தியாவுக்கு வலுவான அடித்தளம் அமைத்தவா் நேரு - காங்கிரஸ் புகழஞ்சலி

நவீன இந்தியாவுக்கு வலுவான அடித்தளம் அமைத்தவா் பண்டித ஜவாஹா்லால் நேரு என்று காங்கிரஸ் புகழஞ்சலி செலுத்தியுள்ளது. நாட்டின் முதல் பிரதமா் நேருவின் 61-ஆவது நினைவு தினம் செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட்டது. ... மேலும் பார்க்க

மறைத்து வைத்த வெடிபொருள் வெடித்ததில் காலிஸ்தான் பயங்கரவாதி உயிரிழப்பு

பஞ்சாப் மாநிலம், அமிருதசரஸில் மறைந்து வைத்திருந்த வெடிபொருளைத் தேடிச் சென்ற காலிஸ்தான் பயங்கரவாதி குண்டுவெடிப்பில் உயிரிழந்தாா். அமிருதசரஸின் மஜிதா சாலைப் பகுதியில் உள்ள புதா் நிறைந்த காலியிடத்தில் அந... மேலும் பார்க்க